இவ்வாண்டு 676 வீதி விபத்துக்களில் 706 பேர் உயிரிழப்பு!

நாடளாவிய ரீதியில் இவ்வருடம் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 676 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, அவற்றில் 706 பேர் மரணித்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை (6) இலங்கை மருத்துவச் சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது வீதி விபத்துக்கள் ஒரு பேரழிவாக உருவெடுத்துள்ளது. 2024, 2025 ஆம் ஆண்டுகளை விட 2026 ஆம் ஆண்டில் விபத்துக்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது. அந்தவகையில் கடந்த ஆண்டு மாத்திரம் 2,549 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, இதன்போது 2,721 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். அதேபோல் இவ்வருடத்துக்கான தரவுகளுக்கமைய ஜனவரி 1 முதல் ஏப்ரல் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 676 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, அவற்றில் 706 பேர் மரணித்துள்ளனர்.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு விபத்துக்களின் எண்ணிக்கை 74 இனாலும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 80 ஆகவும் அதிகரித்துள்ளது. விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாக உள்ளனர். கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி வரையான தரவுகளின்படி, உயிரிழந்தவர்களில் 230 பேர் பாதசாரிகளாவதுடன், 247 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாவர். இது நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும். சமீபத்தில் பள்ளேகல பகுதியில் 17 வயதுடைய இரண்டு மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தனர்.

அவர்கள் இருவரிடமும் சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை. பெற்றோர்கள் பிள்ளைகள் மீதுள்ள அன்பினால் மோட்டார் சைக்கிள்களை வாங்கிக் கொடுக்கின்றனர், எனினும் இறுதியில் பிள்ளைகளையே இழக்க நேரிடுகிறது. ஆகையால் சாரதி அனுமதிப்பத்திரமில்லாத பிள்ளைகளுக்கு வாகனங்களை வழங்க வேண்டாம் எனப் பெற்றோரிடம் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், தந்தையும் தாயும் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது, இடையில் சிறிய பிள்ளையை எவ்வித பாதுகாப்புக் கவசமும் இன்றி வைத்துக்கொண்டு செல்வதை அவதானிக்க முடிகிறது. இது எவ்வகையான அன்பு? விபத்து சம்பவிக்கும் பட்சத்தில் பிள்ளைக்கு பாரிய பாதிப்பு ஏற்படுமல்லவா?

மேலும் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் அனைத்து பொலிஸ் நிலையங்களும் வீதி ஒழுங்குமுறைகளை அமுல்படுத்தி வருகின்றன. மதுபோதை, போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்துபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரையான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 5,291 சாரதிகளும், போதைப்பொருள் பயன்படுத்திய 4,055 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு காலத்தில் தூரப் பிரதேசங்களுக்குப் பயணம் செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். பஸ் சாரதிகளுக்கும் உரிய ஓய்வு தேவை.

மேலும், கிராமங்களில் நடத்தப்படும் துவிச்சக்கர வண்டி மற்றும் ஓட்டப்பந்தயப் போட்டிகளை நடத்துவோர், முறையான பொலிஸ் அனுமதியைப் பெற வேண்டும். தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாகப் போட்டியாளர்களின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு இவ்வாறான போட்டிகளின் தூரத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். வீதியில் செல்லும் ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் அனைவருமே வீதி ஒழுக்கத்தைப் பேணிச் செயற்பட்டால் மாத்திரமே இந்த விபத்துப் பேரழிவைத் தடுக்க முடியும் என்றார்.

photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு