இவ்வாண்டு 676 வீதி விபத்துக்களில் 706 பேர் உயிரிழப்பு!

நாடளாவிய ரீதியில் இவ்வருடம் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 676 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, அவற்றில் 706 பேர் மரணித்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை (6) இலங்கை மருத்துவச் சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது வீதி விபத்துக்கள் ஒரு பேரழிவாக உருவெடுத்துள்ளது. 2024, 2025 ஆம் ஆண்டுகளை விட 2026 ஆம் ஆண்டில் விபத்துக்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது. அந்தவகையில் கடந்த ஆண்டு மாத்திரம் 2,549 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, இதன்போது 2,721 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். அதேபோல் இவ்வருடத்துக்கான தரவுகளுக்கமைய ஜனவரி 1 முதல் ஏப்ரல் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 676 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, அவற்றில் 706 பேர் மரணித்துள்ளனர்.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு விபத்துக்களின் எண்ணிக்கை 74 இனாலும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 80 ஆகவும் அதிகரித்துள்ளது. விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாக உள்ளனர். கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி வரையான தரவுகளின்படி, உயிரிழந்தவர்களில் 230 பேர் பாதசாரிகளாவதுடன், 247 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாவர். இது நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும். சமீபத்தில் பள்ளேகல பகுதியில் 17 வயதுடைய இரண்டு மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தனர்.

அவர்கள் இருவரிடமும் சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை. பெற்றோர்கள் பிள்ளைகள் மீதுள்ள அன்பினால் மோட்டார் சைக்கிள்களை வாங்கிக் கொடுக்கின்றனர், எனினும் இறுதியில் பிள்ளைகளையே இழக்க நேரிடுகிறது. ஆகையால் சாரதி அனுமதிப்பத்திரமில்லாத பிள்ளைகளுக்கு வாகனங்களை வழங்க வேண்டாம் எனப் பெற்றோரிடம் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், தந்தையும் தாயும் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது, இடையில் சிறிய பிள்ளையை எவ்வித பாதுகாப்புக் கவசமும் இன்றி வைத்துக்கொண்டு செல்வதை அவதானிக்க முடிகிறது. இது எவ்வகையான அன்பு? விபத்து சம்பவிக்கும் பட்சத்தில் பிள்ளைக்கு பாரிய பாதிப்பு ஏற்படுமல்லவா?

மேலும் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் அனைத்து பொலிஸ் நிலையங்களும் வீதி ஒழுங்குமுறைகளை அமுல்படுத்தி வருகின்றன. மதுபோதை, போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்துபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரையான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 5,291 சாரதிகளும், போதைப்பொருள் பயன்படுத்திய 4,055 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு காலத்தில் தூரப் பிரதேசங்களுக்குப் பயணம் செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். பஸ் சாரதிகளுக்கும் உரிய ஓய்வு தேவை.

மேலும், கிராமங்களில் நடத்தப்படும் துவிச்சக்கர வண்டி மற்றும் ஓட்டப்பந்தயப் போட்டிகளை நடத்துவோர், முறையான பொலிஸ் அனுமதியைப் பெற வேண்டும். தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாகப் போட்டியாளர்களின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு இவ்வாறான போட்டிகளின் தூரத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். வீதியில் செல்லும் ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் அனைவருமே வீதி ஒழுக்கத்தைப் பேணிச் செயற்பட்டால் மாத்திரமே இந்த விபத்துப் பேரழிவைத் தடுக்க முடியும் என்றார்.

net

நெத்தலியாறு விவசாயிகள் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை

April 18, 2026

தமது சொந்தக் காணிகளிலேயே சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதியைப் பெற்றுத்தருமாறு கல்மடுக்குளத்தின் சிறுபோக நீர்ப்பாசன பங்காளர்களான விசுவமடு மேற்கு கமக்கார

ds

வடக்கு, கிழக்கு சிகையலங்கார நிலைய சம்மேளனங்களை இணைப்பது குறித்து ஆய்வு

April 18, 2026

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உள்ள அழகக சம்மேளனங்களை இணைத்து ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்

ind

இலங்கை விஜயத்தின் போது இந்திய துணை குடியரசு தலைவர் இந்திய வம்சாவளி தமிழர்களை நோக்கி நேசக்கரம் நீட்டுவார்- இந்திய தூதுவர்

April 18, 2026

பரந்த அளவிலான இராஜதந்திர மற்றும் மக்கள் நலன் சார்ந்த பயணமாக, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்

chaco

நிலக்கரி முறைகேடு; அடுத்த வாரம் விசாரணை ஆரம்பம்

April 18, 2026

இலங்கையில் நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்

cana gu

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற துப்பாக்கிச் சூடு: ஆறாம் ஆண்டு நினைவேந்தல்!

April 18, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற பகுதியில், பொலிஸ் அதிகாரி வேடமணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞர்

her

லெபனானில் பிரெஞ்சு அமைதிப்படை சிப்பாய் பலி: ஹிஸ்புல்லா மீது மக்ரோன் குற்றச்சாட்டு

April 18, 2026

தெற்கு லெபனானில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில், சர்வதேச அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர்

sea

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த நபர் உயிரிழப்பு

April 18, 2026

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க கடலில் குதித்த நிலையில், நீரில்

Parl

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள்?

April 18, 2026

நிலக்கரி கொள்முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குமார ஜெயக்கொடி பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான

lan

லங்லியில் அடுத்தடுத்த நாட்களில் கத்திக்குத்து: இரு இளைஞர்கள் காயம்

April 18, 2026

லங்லி பகுதியில் இரண்டு நாட்களில் இரண்டு வெவ்வேறு கத்திக்குத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் எந்தத்

colo

மாணவர்களை இலக்கு வைக்கும் ‘கொலைப்பட்டியல்’: பதற்றத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சமூகம்

April 18, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிறிய நகரம் ஒன்றில் 16 மாணவர்களைக் குறிவைத்து “கொலைப்பட்டியல்” என்று அழைக்கப்படும் பட்டியல் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து,

hur

ஹோமுஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

April 18, 2026

மான் கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல் (30 கி.மீ) தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றைத்

pa

ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

April 18, 2026

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய்