புதுச்சேரி:
புதுச்சேரி சட்டமன்றத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர் ராமு, தனது பதவியேற்பின் போது அக்கட்சியின் தலைவர் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி ‘கடவுள்’ எனக் குறிப்பிட்டுக் பேசிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், “ஏற்கனவே 1008 கடவுள்கள் உள்ளனர், இவர் என்ன 1009-ஆவதா?” என்று தற்காலிக சபாநாயகர் அன்பழகன் கொடுத்த ‘ஷாக்’ ரிப்ளை அவையில் கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று, அதற்கான முடிவுகள் கடந்த மே 4-ஆம் தேதி வெளியாகின. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், திமுக 5 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மேலும் அதிமுக, காங்கிரஸ், லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவை தலா 1 தொகுதியைக் கைப்பற்றிய நிலையில், தவெக கூட்டணி 3 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 18-ஆம் தேதி தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட அன்பழகனுக்கு ஆளுநர் கைலாஷ் நாதன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், இன்று காலை முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவுக்காகப் புதுச்சேரி சட்டசபை கூடியது. சட்டமன்றச் செயலாளர் தயாளன் ஆளுநரின் உத்தரவை வாசித்ததைத் தொடர்ந்து, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் உறுப்பினர்கள் பதவியேற்கும் நடைமுறைகளை விளக்கினார். முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்ந்து மற்ற எம்.எல்.ஏ-க்களும் வரிசையாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
அப்போது, மணவெளி தொகுதியில் 13,822 வாக்குகள் பெற்று அசாத்திய வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் ராமு எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்க மேடைக்கு வந்தார். அவர் தனது பதவியேற்பு உறுதிமொழியைக் கூறத் தொடங்கிய போது, திடீரெனத் தனது சட்டைக் பையிலிருந்து தவெக தலைவர் தளபதி விஜய்யின் புகைப்படத்தை வெளியில் எடுத்து அவையினருக்குக் காட்டினார். மேலும், விஜய் தான் தனது ‘கடவுள்’ என்றும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன் உடனடியாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். ராமு, விஜய் குறித்துப் பேசிய வார்த்தைகளைச் சட்டமன்ற அவைக்குறிப்பில் (Assembly Records) இருந்து உடனடியாக நீக்க உத்தரவிட்ட சபாநாயகர், “நம் நாட்டில் ஏற்கனவே 1008 கடவுள்கள் இருக்கிறார்கள். இதில் இவர் என்ன 1009-ஆவது கடவுளா?” என்று அதிரடியாகக் கேள்வி எழுப்பினார். மேலும், “சட்டமன்ற அவையின் புனிதத்தைக் காக்க வேண்டும், இனிமேல் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது” என்றும் கண்டிப்புடன் எச்சரித்தார். புதுச்சேரி சட்டசபையில் தவெக எம்.எல்.ஏ-வின் இந்தச் செயலும், அதற்குச் சபாநாயகர் கொடுத்த அதிரடிப் பதிலடியும் புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
#PuducherryAssembly #TVK_MLA_Ramu #ThalapathyVijay #BreakingNews #May20 #PuducherryPolitics #SpeakerAnbalagan #GodControversy #ManavelyConstituent #RangasamyGovernment #OathTakingCeremony #AssemblyRules #VijayPhotoInAssembly #TVK_Updates #UnionTerritoryNews #PoliticalSensation #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_“`