இளம் தலைமுறையினரை ஐக்கிய தேசிய கட்சியில் உள்வாங்குவதற்கான திட்டம்!

ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரல்கள், கொள்கைகளுடன் நாட்டுக்கான புதிய திட்டமொன்றை முன்னெடுத்துச் செல்லவுள்ளோம். அடுத்த 6 மாதங்களில் புதிய, இளம் தலைமுறையினரை ஐக்கிய தேசிய கட்சியில் உள்வாங்குவதற்கான செயற்றிட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். புதிய சிந்தனைகளுடனான கட்சியைக் கட்டியெழுப்புவதற்காக 6 மாதங்களுக்குள் 1000 மக்கள் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலிலிருந்து விலகியிருந்த கடந்த ஓராண்டு காலத்தில், அடுத்து என்ன செய்வது என்று ஆழமாக சிந்தித்தோம். ஐக்கிய தேசிய கட்சி என்பது அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் முன்வந்து, அவற்றிலிருந்து நாட்டை பாதுகாப்பாக மீட்டிருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடுக்கு செய்ய வேண்டிய அனைத்து சேவைகளையும் செய்துவிட்டார். எஞ்சியவற்றை முன்னெடுப்பதற்கு நாம் ஆயத்தமாகியுள்ளோம்.

ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரல்கள், கொள்கைகளுடன் நாட்டுக்கான புதிய வேவைத்திட்டமொன்றை முன்னெடுத்துச் செல்லவுள்ளோம். அரசாங்கத்தின் மீது குறை கூறிக் கொண்டிருக்கும் அரசியலை நாம் முன்னெடுக்கப் போவதில்லை.

அடுத்த 6 மாதங்களில் புதிய, இளம் தலைமுறையினரை ஐக்கிய தேசிய கட்சியில் உள்வாங்குவதற்கான வேலைத்திட்டத்தை இன்றிலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம். அந்த இலக்கை நிச்சயம் நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கின்றேன்.

ஐக்கிய தேசிய கட்சியின் எம்மைப் போன்ற உறுப்பினர்களுடன் ஆதரவாளர்களும் இணைந்து தான் ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. அந்த ஆதரவாளர்கள் இன்று இவ்விரு கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர்.

தலைவர்கள், ஏனைய உறுப்பினர்கள் எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தாலும், கட்சி ஆதரவாளர்களின் நிலைப்பாடு இரு கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதேயாகும். மாறாக இரு கட்சிகளும் இணையாவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள், ஐ.தே.க.வில் இணைவதை தடுக்க முடியாது.

அத்தோடு மக்களுக்காக பொறுப்புள்ள ஒரு பொது எதிரணியை உருவாக்குவதற்கும் முயற்சிக்கின்றோம். அனைத்து கட்சிகளும் ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் இதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும் தயாராகவுள்ளன.

நாட்டில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையில் பொது எதிரணியாக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும். நாட்டுக்காக எதனையும் செய்யாத, செய்வதற்கு இடமளிக்காத குழுவினரே தற்போது நாட்டை ஆட்சி செய்கின்றனர்.

ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்த மக்கள் நலன் திட்டங்களுக்கு பெயரை மாற்றி, புதிய திட்டங்களாக இவர்கள் முன்னெடுக்கின்றனர். அதனை தவிர இவர்களுக்கு தனித்து சுயமாக ஆட்சியை முன்னெடுக்கும் திறன் இல்லை.

எனவே அடுத்து ஆட்சியைப் பொறுப்பேற்கக் கூடிய புதிய சிந்தனைகளுடனான கட்சியைக் கட்டியெழுப்புவதற்காக 1000 மக்கள் சந்திப்புக்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

6 மாதங்களுக்குள் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். ‘ரணிலுடன் கற்போம்’ வேலைத்திட்டமொன்றை அடுத்த மாதம் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.

இளைஞர்களை ஒருங்கிணைத்து 2 மணித்தியால செயற்றிட்டமாக இது முன்னெடுக்கப்படும். இரு வாரங்களுக்கு ஒரு முறை இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 10ஆம் திகதி இலங்கையில் முற்றுமுழுதான டிஜிட்டல் கட்சியான ஐ.தே.க.வை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் அதற்கான தலைமைத்துவத்தை வழங்குவார்.

இவற்றுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளையும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை

une

தெஹ்ரானில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் மீது ஏவுகணைத் தாக்குதல்

March 5, 2026

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொலெஸ்தான் அரண்மனை (Golestan Palace) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை “பகிரங்கமான

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்