‘இலத்திரனியல் விசா விநியோக விவகாரம் ஜனாதிபதிக்கு அக்கினிப் பரீட்சை’

சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று குறிப்பிடும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இலத்திரனியல் விசா விநியோக விவகாரம் குறித்து தனது அரசியல் சகாவான டிரான் அலஸிற்கு எதிராக முறையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜனாதிபதிக்கு சவால் விடுக்கிறேன். ஜனாதிபதிக்கு இது அக்கினிப் பரீட்சை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிமுகப்படுத்திய நிகழ்நிலை முறைமையிலான இலத்திரனியல் விசா முறைமை தொடர்பில் கணக்காய்வினை மேற்கொள்ளுமாறு 2024.07.12ஆம் திகதி அரசாங்க நிதி பற்றிய குழு தேசிய கணக்காய்வு திணைக்களத்திடம் வலியுறுத்தியது. தேசிய கணக்காய்வு திணைக்களம் கடந்த 3ஆம் திகதி அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு 2024.07.28ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் வழக்கை தாக்கல் செய்தோம். இந்த வழக்கில் பங்குதாரராகுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் மூன்று உறுப்பினர்களிடமும் வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

அடிப்படை உரிமைமீறல் வழக்கை உயர்நீதிமன்றம் 2024.06.02ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இலத்திரனியல் விசா விநியோக முறைமை இடைநிறுத்தி பழைய முறைமைக்கு அமைய விசா விநியோகிக்குமாறு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் அமுல்படுத்தாத காரணத்தால் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்தோம். இந்த வழக்குக்கு அமைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு உயர்நீதிமன்றம் மூன்று வருடகால கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இலத்திரனியல் விசா முறைமை தொடர்பில் தேசிய கணக்காய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த முறைகேட்டினால் அரச வருவாய் இழக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பொறுப்புக்கூறவேண்டிய அரசியல் தரப்பினர், அரச அதிகாரிகள் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிடும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இது அக்கினி பரீட்சை என்றே குறிப்பிட வேண்டும். இலத்திரனியல் விசா முறைமை அமுல்படுத்தப்பட்டபோது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக டிரான் அலஸ் பதவி வகித்தார். உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள மனுவில் இவரது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று குறிப்பிடும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது அரசியல் சகாவான டிரான் அலஸிற்கு எதிராக முறையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். முடிந்தால் இதைச் செய்யுங்கள் என்று நான் ஜனாதிபதிக்கு சவால் விடுக்கிறேன்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பக்கம் பக்கமாக பேசுகிறார். சிறு சிறு ஊழல் மோசடிகளுக்கு சட்டத்தை கடுமையாக செயற்படுத்துவதை போன்று இந்த விசா விநியோகத்தால் அரசுக்கு ஏற்பட்ட பில்லியன் டொலர்கணக்கிலான நிதி குறித்தும் விசாரணைகளை நடத்தி சட்டத்தை செயற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

55

இலங்கை சுற்றுலாத் துறையில் மைல்கல்: இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கைக் கடந்தது

November 17, 2025

2025 ஆம் ஆண்டுக்கான இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை இலக்கை மீறி, இலங்கை சுற்றுலாத் துறை இன்று (17)

2

உள்ளூர் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டம்!

November 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (17)

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய

she

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 17, 2025

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி

ukra

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

November 17, 2025

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன்

sau

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

November 17, 2025

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kodda

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்

November 17, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை