இலஞ்ச ஊழல் பற்றிய சாட்டப் பாடுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, இன்று காலை 8.15 மணியளவில் ஆணைக்குழுவில் அவர் ஆஜரானார். வாக்குமூலம் பதிவு செய்யும் பொருட்டு அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
தேசிய அதிர்ஷ்டலாப சபைக்கு (National Lotteries Board) அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீறி ஒப்பந்த அடிப்படையில் 5 பேரை நியமித்து, பின்னர் அவர்களைத் தனது தனிப்பட்ட ஊழியர் குழாமில் இணைத்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விசாரணை தொடர்பில் ரவி கருணாநாயக்கவை நான்கு முறை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னர் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் ஆஜராகத் தவறினார் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, இரண்டு நாட்களுக்கு முன்னர் பத்தரமுல்லையில் உள்ள ராஜமல்வத்தை வீதியிலுள்ள அவரது வீட்டிற்கு ஆணைக்குழு அதிகாரிகள் சென்றபோதிலும், அந்த நேரத்தில் அவர் வீட்டில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.