இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை சபையின் கூட்டம் திங்கட்கிழமை (25) நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறித்துள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து இரவு நேரக்கொள்கை வட்டி வீதங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் கூட்டத்தின் தீர்மானம் செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் உத்தியோக பூர்வமான இணைதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் மற்றும் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்குள் பணவீக்கம் 5சதவீதத்தை கடந்துள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது.