இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை பாரிய வீழ்ச்சி

கடந்த 2025ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்தாண்டுகளில், இலங்கையின் உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

புதிய பிறப்புகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் அனைத்து வகையான சலுகைகளையும் வழங்கும் என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்தாண்டுகளில், நாட்டில் உயிருடன் பிறக்கும் குழந்தை எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடையும் போக்கைக் காட்டி வருகின்றது.

இந்த வீழ்ச்சி 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் தெளிவாகத் தெரிவதுடன், ஒட்டுமொத்தமாக 2019 – 2025க்கு இடைப்பட்ட காலத்தில் உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 33% இனால் குறைந்துள்ளது.

இதேவேளை, 2019ஆம் ஆண்டில் இலங்கையில் பதிவான மொத்த உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 319,010 ஆகும்.

இவ்மதிப்பானது 2020ஆம் ஆண்டளவில் 301,706 ஆகவும், 2021இல் 284,848 ஆகவும், 2022இல் 275,321 ஆகவும், 2023இல் 247,900 ஆகவும், 2024இல் 220,761 ஆகவும், கடந்த ஆண்டான 2025ஆம் ஆண்டளவில் 214,570 ஆகவும் படிப்படியாகக் குறைந்துள்ளது.

இந்த நிலைக்குக் காரணங்கள் என்ன?

இந்நிலைக்குக் காரணங்களாகப் பல முக்கிய விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

திருமண வயது அதிகரிப்பு, திருமண விகிதம் குறைவடைதல், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, இனப்பெருக்க வயதிலுள்ள பெருமளவிலான இளைஞர், யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறுதல், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் காரணமாகத் தம்பதியினர் தற்காலிகமாகவோ அல்லது நீண்ட காலத்திற்குவோ பிரிந்திருத்தல், சிறிய குடும்பங்களுக்கான விருப்பம், உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு போன்ற காரணங்கள் இதில் அடங்கும்.

இதுதவிர, குடும்பத்தின் அளவு மற்றும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கான சரியான காலம் குறித்த மனப்பான்மைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளின் பயன்பாடு அதிகரிப்பு, மலட்டுத்தன்மை மற்றும் மலட்டுத்தன்மை தொடர்பான பிரச்சினைகள் போன்றவையும் இதற்குப் பங்களித்துள்ளன.

எவ்வாறாயினும், நீண்ட காலத்திற்கு மக்கள் தொகையைப் பேணுவதற்கு இலங்கையில் பராமரிக்கப்பட வேண்டிய உகந்த பிறப்புகளின் எண்ணிக்கை வருடத்திற்கு சுமார் 330,000 – 360,000 ஆகும்.

ஆனால் கடந்த ஆண்டைக் கருத்தில் கொள்ளும்போது, அந்த மதிப்பு 214,570 என்ற உகந்த மட்டத்தை விடக் குறைவான மட்டத்திலேயே உள்ளது.

acci main

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு; புளியங்குளத்தில் சம்பவம்

July 26, 2026

புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 பிரதான வீதியின் பூதூர் பகுதியில், வவுனியா திசை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று

wea

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

July 26, 2026

வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால்

vehicle

1,025 வாகனங்கள் துறைமுகத்தில் முடக்கம்

July 26, 2026

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,025 வாகனங்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என

kas

கஸ்பியன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்

July 26, 2026

கஸ்பியன் கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக

Murder

பெல்லன்வில படுகொலை: பின்னணி அம்பலம்!

July 26, 2026

பெல்லன்வில உணவக உரிமையாளரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மின்னேரியா

fi

இதுவரை கொழும்பில் மாத்திரம் 258 தீ விபத்துக்கள்

July 26, 2026

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத்

jud_1

அதிக விலைக்கு அரிசி விற்பனை; 5 இலட்சம் அபராதம்

July 26, 2026

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை விற்பனை செய்த

sri-lanka-tourism

138,730 சுற்றுலாப் பயணிகள் வருகை

July 26, 2026

ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில் இலங்கைக்கு 138,730 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை

chamara

தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்துங்கள்!

July 26, 2026

அரசாங்கத்துக்கு தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான செல்வாக்கை பரிசீலித்து பார்க்க வேண்டும் என

death

யானை தாக்கியதில் செட்டிகுள குடும்பஸ்தர் பலி!

July 26, 2026

வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்திற்குட்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில் நேற்று (25) மாலை இடம்பெற்ற வனவாசி யானையின் தாக்குதலில் நபர் ஒருவர் சம்பவ

tea

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தனியார் பட்டதாரிகளை இணைக்க அரசாங்கம் முயற்சி?

July 26, 2026

கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தனியார் நிறுவனங்களின் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர்

dds

யாத்திரிகர்களுக்கான இலவச இந்திய விசா முறைமை மீண்டும் அமுல்

July 26, 2026

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புனித பௌத்த யாத்திரை உட்பட ஆன்மீகக் குழுக்களாகப் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான இலவச விசா வழங்கும் முறைமை மீண்டும்