இலங்கையில் சீதாராமன் அரண்மனை – இந்தியா தொடர்ச்சியாக உதவும்!

இலங்கையில் சீதாராமன் அரண்மனை அமைப்பதற்கு இந்தியா தொடர்ச்சியான பங்களிப்பு வழங்குமென, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

இன்று (12) முற்பகல் பண்டாரவளை பொது விளையாட்டரங்கில் மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இந்த சிறப்பு நிகழ்வில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது இந்திய-இலங்கை உறவுகளில் நீண்டகால நட்பைக் குறிக்கும் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும். இது இந்திய-இலங்கை மக்களுக்கு இடையிலான பிரிக்க முடியாத பிணைப்புகளின் அடையாளமாகும். இந்தியாவும் இலங்கையும் கலாசார ரீதியாக இரட்டைச் சகோதரர்கள். நமது கடந்த காலத்தை விட பிரகாசமான எதிர்காலத்திற்காக நாம் ஒன்றாக அடியெடுத்து வைக்கிறோம்.

சகோதர இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நாம் எப்போதும் ஆதரவளிக்கிறோம். அதன்போது வீட்டுவசதி, கல்வி, திறன் அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாடு போன்ற துறைகளில் சிறந்த ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறோம். அந்த வகையில் மலையக மக்களுக்கான இந்த வீட்டுத் திட்டம் மிக முக்கியமானதாகும்.

இலங்கையின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 65,000 க்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் திட்டங்களுக்கு நாங்கள் பங்களித்து வருகிறோம். மேலும், தோட்டப் பகுதியில் வைத்தியசாலையை நிர்மாணித்தல், மாத்தளையில் மகாத்மா காந்தி சர்வதேச மையத்தை நிர்மாணித்தல் ஆகியவற்றிலும் நாங்கள் பங்களித்துள்ளோம், மேலும் பிள்ளைகளின் கல்விக்கு விசேட பங்களிப்பைச் செய்து வருகிறோம். இவை தோட்டப் பகுதியில் உள்ள தமிழ் சமூகத்திற்காக தொடங்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் ஒரு பகுதி மாத்திரமே ஆகும். கடந்த ஆண்டு, நாம் STEM ஆசிரியர் பயிற்சி வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தோம். இந்தத் திட்டங்களை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம். மேலும், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக சீதாராமன் அரண்மனையின் அபிவிருத்தித் திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளோம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்ட படி, இலங்கையின் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பது குடும்ப அங்கத்தவரின் பொறுப்பு என நாங்கள் உணர்கிறோம். இலங்கையின் அனைத்து மக்களினதும் அபிவிருத்திக்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும் என்ற திருவள்ளுவரின் குறளுக்கு இணங்க அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும் என்பதை நினைவூட்டி, இலங்கை மக்களின் நல்வாழ்வு, முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்திற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்த இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிது சமன் ஹென்னாயக, ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, உட்பட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Arrest_1

பெரும்பான்மை இன யாழ் பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது

November 17, 2025

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட

wat

மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் மரணம்

November 17, 2025

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன

mu

சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

November 17, 2025

2020 ஆம் ஆண்டு கே. துலானி அனுபமாவை உதவி இயக்குநராக சட்டவிரோதமாக நியமித்ததாகக் கூறப்படும் வழக்கில் புவியியல் ஆய்வு மற்றும்

jup

தென்னாபிரிக்காவுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் கில் விளையாடுவது சந்தேகம்?

November 17, 2025

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. முதலாவது போட்டியின்போது கழுத்து உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை

sine

தொழில்முறை டென்னிஸ் சம்பியனான சின்னர்

November 17, 2025

தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பின் இறுதிப் போட்டிகள் தொடரில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னர் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (16)

pri

18வது ஆண்டாக மீண்டும் பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக்!

November 17, 2025

தொடர்ச்சியாக 18வது ஆண்டாக, சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (பிரிமா குழுமம் இலங்கை) நிறுவனம், பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை

nl

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை புதிய விற்பனை நிலையங்களை திறப்பு

November 17, 2025

நாடு முழுவதும் தங்களது பண்ணை வளாகங்களில் பல புதிய விற்பனை நிலையங்களை தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) திறந்துள்ளது.

fs

காதல் என்பது ‘ஒன்றும் இல்லை’ – தனுஷ்

November 17, 2025

காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தனுஷ்ஜி என்று இந்தி செய்தியாளர்கள் ஆர்வமாக கேட்க, அவர் சொன்ன பதில் தான் அனைவரையும்

sk26

SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு

November 17, 2025

கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம்

roj

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் ரோஜா

November 17, 2025

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் முதல்வர் பதவிக்கு வருவது

theep

விஜயகாந்த் பட நடிகை: பெரிய வீட்டு மருமகள்?

November 17, 2025

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சகோதரரின் மருமகள் தீப்தி பட்நாகர் பற்றி சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தீப்தி தமிழ் படங்களிலும்

ma

‘மாஸ்க்’ படத்துக்கு திடீர் சிக்கல்…

November 17, 2025

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஜிவி