இலங்கையில் சீதாராமன் அரண்மனை – இந்தியா தொடர்ச்சியாக உதவும்!

இலங்கையில் சீதாராமன் அரண்மனை அமைப்பதற்கு இந்தியா தொடர்ச்சியான பங்களிப்பு வழங்குமென, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

இன்று (12) முற்பகல் பண்டாரவளை பொது விளையாட்டரங்கில் மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இந்த சிறப்பு நிகழ்வில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது இந்திய-இலங்கை உறவுகளில் நீண்டகால நட்பைக் குறிக்கும் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும். இது இந்திய-இலங்கை மக்களுக்கு இடையிலான பிரிக்க முடியாத பிணைப்புகளின் அடையாளமாகும். இந்தியாவும் இலங்கையும் கலாசார ரீதியாக இரட்டைச் சகோதரர்கள். நமது கடந்த காலத்தை விட பிரகாசமான எதிர்காலத்திற்காக நாம் ஒன்றாக அடியெடுத்து வைக்கிறோம்.

சகோதர இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நாம் எப்போதும் ஆதரவளிக்கிறோம். அதன்போது வீட்டுவசதி, கல்வி, திறன் அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாடு போன்ற துறைகளில் சிறந்த ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறோம். அந்த வகையில் மலையக மக்களுக்கான இந்த வீட்டுத் திட்டம் மிக முக்கியமானதாகும்.

இலங்கையின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 65,000 க்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் திட்டங்களுக்கு நாங்கள் பங்களித்து வருகிறோம். மேலும், தோட்டப் பகுதியில் வைத்தியசாலையை நிர்மாணித்தல், மாத்தளையில் மகாத்மா காந்தி சர்வதேச மையத்தை நிர்மாணித்தல் ஆகியவற்றிலும் நாங்கள் பங்களித்துள்ளோம், மேலும் பிள்ளைகளின் கல்விக்கு விசேட பங்களிப்பைச் செய்து வருகிறோம். இவை தோட்டப் பகுதியில் உள்ள தமிழ் சமூகத்திற்காக தொடங்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் ஒரு பகுதி மாத்திரமே ஆகும். கடந்த ஆண்டு, நாம் STEM ஆசிரியர் பயிற்சி வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தோம். இந்தத் திட்டங்களை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம். மேலும், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக சீதாராமன் அரண்மனையின் அபிவிருத்தித் திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளோம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்ட படி, இலங்கையின் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பது குடும்ப அங்கத்தவரின் பொறுப்பு என நாங்கள் உணர்கிறோம். இலங்கையின் அனைத்து மக்களினதும் அபிவிருத்திக்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும் என்ற திருவள்ளுவரின் குறளுக்கு இணங்க அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும் என்பதை நினைவூட்டி, இலங்கை மக்களின் நல்வாழ்வு, முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்திற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்த இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிது சமன் ஹென்னாயக, ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, உட்பட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Rad

ஒரு பெண் சடலமாகி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு இல்லை?

March 4, 2026

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது, இந்த நாட்டில் உயிரிழந்த

nia

நயாகரா பிராந்திய காவல்துறையால் 9-1-1 தொழில்நுட்பம் புதுப்பிப்பு!

March 4, 2026

நயாகரா பிராந்திய காவல்துறை சேவை வழங்குநர்கள் அடுத்த 9-1-1 (NG9-1-1) தலைமுறைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க, 9-1-1 தொழில்நுட்பத்தை புதுப்பித்து

ford

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள்திட்டம் மிக விரைவில் நிறைவு பெறும் – ஒன்டாரியோ முதல்வர்

March 4, 2026

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள் திட்டமிட்ட கால அட்டவணையை விட முன்பே நிறைவு

ne

“ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்” – இஸ்‌ரேல் எச்சரிக்கை

March 4, 2026

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்‌ரேல் எச்சரிக்கை

boa

வலி. வடக்கு ஊரணி மீனவர்கள் இருவர் காணமற் போயுள்ளமை குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை

March 4, 2026

யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம்

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்