இலங்கையில் சட்டம் என்பது விசாரணை அதிகாரிகளின் பிடிக்குள் சிக்கியுள்ளது!

இலங்கையில் சட்டம் என்பது தற்போது சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் பிடிக்குள் சிக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

“சட்டம் என்பது ஆசைகளினால் பாதிக்கப்படாத தூய பகுத்தறிவு என வரையறுக்கப்பட்டாலும், இலங்கையில் விசாரணை அதிகாரிகள் தங்களது அரசியல் அல்லது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்காகச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

இதன்போது கபில சந்திரசேன என்பவரால் வழங்கப்பட்ட தகவல்கள் அடங்கிய சத்தியக்கடதாசி ஒன்றை நாம் ஆதாரமாக முன்வைக்கின்றோம். அந்தச் சத்தியக்கடதாசியில், விசாரணை அதிகாரி ஒருவர் தன்னை அச்சுறுத்தும் தொனியில் பேசியதாகக் கபில சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.

யாழில் மாமியாரை கொலை செய்து வீசியெறிந்த மருமகன்: மகனின் முறைப்பாட்டில் வெளியில் வந்த திடுக்கிடும் தகவல்
யாழில் மாமியாரை கொலை செய்து வீசியெறிந்த மருமகன்: மகனின் முறைப்பாட்டில் வெளியில் வந்த திடுக்கிடும் தகவல்
வழங்கப்பட்ட வாக்குமூலம்
‘இது உனது கடைசி வாய்ப்பு; இதற்கு முன்னர் ஒருவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்தாததால் அவர் உயிரை மாய்த்துக் கொண்டார். நீயும் அவ்வாறு ஆக விரும்பவில்லை என்றால், மகிந்த மற்றும் நாமலின் பெயர்களைக் கூறு’ என அந்த அதிகாரி மிரட்டியதாக அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

விசாரணை அதிகாரிகளின் பிடிக்குள் சிக்கியுள்ள சட்டம் – சஞ்சீவ எதிரிமான்ன கடும் சாடல் | Sanjeeva Edirimanna Strongly Criticizes

விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்படும் இத்தகைய வாக்குமூலங்களுக்கு முறையான சட்ட வலிமை இல்லை என்றாலும், ஒருவரது தனிப்பட்ட விருப்பங்களைச் சட்டத்துடன் கலக்கும் இத்தகைய செயற்பாடுகள் பாரதூரமானவை.

அத்துடன், இந்தச் சத்தியக்கடதாசியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, இதற்கு முன்னர் விசாரணையின் அழுத்தத்தால் உயிரை மாய்த்துக் செய்துகொண்டதாகக் கூறப்படும் நபர் தொடர்பில் உடனடியாக முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்குப் பணிந்து வாக்குமூலம் அளிப்பதா அல்லது உயிரை மாய்த்துக் கொள்வதா என்ற இரு தெரிவுகளையே விசாரணை அதிகாரிகள் சாட்சிகளுக்கு வழங்குகின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இதனை ஒரு அரசியல் கட்சியின் நோக்கமாக மட்டும் பார்க்காமல், சமூக நீதிக்கான ஒரு போராட்டமாக அனைவரும் கருத வேண்டும். இன்று மற்றவர்களுக்கு நடக்கும் இந்த அநீதி நாளை சாதாரண மக்களுக்கும் ஏற்படலாம் என்பதால், சட்டத்தின் ஆட்சியையும் நீதியையும் நிலைநாட்ட இத்தகைய முறைகேடுகளுக்கு எதிராகக் குரல் எழுப்புவது அவசியம்.” என்றார்.

Surya

சூர்யாவின் ‘கருப்பு’ மே மாதம் வெளியீடு!

March 22, 2026

சூர்யா நடிப்பில் உருவாகி பல்வேறு தடைகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்ட ‘கருப்பு’ திரைப்படம் – எதிர்வரும் மே மாதம் 14 ஆம்

vij

விஜய் எங்கு போட்டியிட்டால் எனக்கென்ன? – கமல்ஹாசன்

March 22, 2026

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கமல் ஹாசன் அளித்த பதில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மிகவும்

Mani

‘மனிதனும் தெய்வமாகலாம்’ திரைப்படத்திள் ‘தங்கரத்தினமே..’ வெளியீடு!

March 22, 2026

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் கதையை வழிநடத்திச் செல்லும் பிரதான கதாபாத்திரமாக திரையில் தோன்றும் ‘மனிதனும் தெய்வமாகலாம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற

kal

பரத் – அஜய் கார்த்தி இணைந்து நடிக்கும் ‘காளிதாஸ் 2’படத்தின் முன்னோட்டம் வெளியீடு

March 22, 2026

சந்தை மதிப்புள்ள நடிகர் பரத் மற்றும் அறிமுக நடிகர் அஜய் கார்த்தி ஆகியோர் இணைந்து முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘காளிதாஸ்

muth

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவாவின் முதல் முதலாய்’ பாடல்

March 22, 2026

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா ‘முதல் முதலாய் ‘ எனும் பெயரில் வெளியான சுயாதீன இசை அல்ப பாடலில்

Nalinda

இலங்கைக்கு மார்ச் 25 இல் 37இ000 மெற்றிக் தொன் டீசல் கப்பல் வருகிறது!

March 22, 2026

சுமார் 37,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக சுகாதார

sanj

இலங்கையில் சட்டம் என்பது விசாரணை அதிகாரிகளின் பிடிக்குள் சிக்கியுள்ளது!

March 22, 2026

இலங்கையில் சட்டம் என்பது தற்போது சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் பிடிக்குள் சிக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள்

Epst

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாண எப்ஸ்டீன் மாளிகையில் விசாரணை

March 22, 2026

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஜெப்ரி எப்ஸ்டீனின் மாளிகையில் நடைபெற்று வரும் விரிவான தேடுதல் வேட்டை, சர்வதேச அளவில்

iraa

ஒரே நாளில் ஈரானின் 17 மாகாணங்கள் மீது 640 தாக்குதல்கள்

March 22, 2026

ஈரானின் 17 மாகாணங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை (20) மாத்திரம் 640 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித

1688202098-EARTHQUAKE-6

இந்தியாவில் நில நடுக்கம்

March 22, 2026

இந்தியாவின் சிக்கிமில் மங்கன் பகுதியில் நேற்று(21.03.2026) இரவு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 8.46 மணியளவில் மெக்னிடியூட்

jeya

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

March 22, 2026

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு விடவும், வாக்கெடுப்பு நடத்தவும் சபாநாயகர் தீர்மானித்துள்ளார். நாட்டில் தற்போது

arrest

சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் இயந்திரங்களை இறக்குமதி செய்த வர்த்தகர் கைது

March 22, 2026

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிள் இயந்திரங்களை இறக்குமதி செய்து, அவற்றை இலங்கையில் ஒன்றிணைத்து விற்பனை செய்து வந்த