இரண்டு நாள் பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்க வேண்டும் ; ஹரின் பெர்ணான்டோ

நாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பான உறுதியான தகவல்களை அறிந்துகொள்ளவும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராயவும் அரசாங்கம் இரண்டு நாள்பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிச் செயலாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டில் இயற்கை அனர்த்த நிலை ஏற்பட்டு 18 நாட்கள் கடந்துள்ளபோதும் ஏற்பட்ட பாதிப்பின் மதிப்பீட்டு தொகையை உறுதியாக தெரிவிப்பதற்கு அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட ஆரம்ப கட்ட 25ஆயிரம் ரூபா தொகையே இன்னும் வழங்கப்பட்டு வருகிறது. அதனை வழங்குவதிலும் ஒருசில பகுதிகளில் அது அரசியலாக்கப்பட்டுள்ளது. அதனால் 25ஆயிரம் ரூபா கிடைக்கப்பெறாத மக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கையில் விரக்தியடைந்துள்ளனர்.

அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அறிவித்த 5மில்லியன் கோடி ரூபாவை எவ்வாறு அரசாங்கம் வழங்கப்போகின்றது.? அத்துடன் இடம்பெற்ற அனர்த்தத்தினால் நாடுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பில் நிதி அடிப்படையில் அதன் மதிப்பீடு என்ன? இந்த விடயங்களை அறிந்துகொள்ளவும் அனர்த்தம் தொடர்பில் அரசாங்கத்துக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்கவும் தெரியாத தகவல்களை அறிந்துகொள்ளவும் அரசாங்கம் விரைவாக பாராளுமன்றத்தை கூட்டி, ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பில் இரண்டு நாள் விவாதம் ஒன்றுக்கு எதிர்க்கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

ஏனெனில் இம்பெற்ற அனர்த்தத்தில் மொத்தமாக எத்தனை வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன என்ற உண்மையான தகவல் யாருக்கும் தெரியாது. அதனால் ஊடகங்கள் அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் நாளுக்கு நாள் முரண்பட்ட எண்ணிக்கையை தெரிவித்து வருகின்றன.

உண்மையான தகவல் தெரியாமர் இருப்பதாலே இவ்வாறு மாறுபட்ட எண்ணிக்கைகள் தெரிவிக்கப்படுகின்றன. அதனால் பாராளுமன்றத்தை கூட்டி, அனர்த்தம் தொடர்பில் பூரண தெளிவொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும்.

2003ஆம் ஆண்டு இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தில் 24ஆயிரம் வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன. சுமார் 50ஆயிரம் வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டிருந்தன.

ஆனால் இந்தமுறை இடம்பெற்ற வெள்ளம் மற்றும் மண்சரிவினால் ஏற்பட்ட பாதிப்பு அதிகமாகும். என்றாலும் 6ஆயரம் வீடுகளே முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதனாலே பாராளுமன்றத்தை கூட்டி இதுதொடர்பில் விவாதிக்க வேண்டும் என தெரிவிக்கிறோம்.

அதேநேரம் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து, நத்தார் தாத்தா போன்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்கப்படும் தொகையை அறிவித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதற்கான வழியை அமைத்துக்கொண்டார். தற்போது வேறு கதைகளை தெரிவித்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நட்டஈட்டு தொகையை வழங்குவது என அரசாங்கத்துக்கு தெரியாமல் இருப்பதே இதற்கான காரணமாகும் என்றார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்

Nish

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளார்கள் – நிசாம் காரியப்பர்

March 4, 2026

ரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம்

eu

உலகப் பொருளாதார பாதிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் – வளைகுடா கவுன்சில் அவசர பேச்சுவார்த்தை

March 4, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட காணொளி மாநாடு (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு

Chavitha

டெக்சாஸ் ஆஸ்டினில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளித் தமிழ் மாணவி பலி!

March 4, 2026

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில், மார்ச் 2, 2026 அன்று பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சவிதா சண்முகசுந்தரம் (21) உயிரிழந்த

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்