இந்திய பிரதமருடன் கனடிய வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை

இரு ஆண்டுகளாக நிலவி வந்த இந்தியா–கனடா இடையிலான தூதரக பதற்றத்திற்கு பின்னர், உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) இந்தியாவுக்கு மேற்கொண்ட மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

நேற்றைய தினம் அனிதா ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் மோடியுடன் நியூடெல்லியில் நடந்த சந்திப்பின் புகைப்படத்தை வெளியிட்டார்.

அந்த பதிவில், இந்த சந்திப்பு, கடந்த கோடைக்காலத்தில் ஜி7 உச்சி மாநாட்டில் கனடாவில் நடைபெற்ற மோடி – பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) சந்திப்பில் ஏற்பட்ட நல்லிணக்கத்தின் தொடர்ச்சியாகும் என அவர் குறிப்பிட்டார்.

பின்னர், ஆனந்த் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில், இரு நாடுகளுக்குமிடையிலான வணிக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிமுறையை விவரித்துள்ளனர்.

2010 முதல் இடைவிடாது தொடங்கி நிறுத்தப்பட்டு வந்த இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அந்த அறிக்கையில், “இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மீண்டும் நிலைப்படுத்த முறையாக கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை மற்றும் புவியியல் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், “வலுவான மற்றும் நிலைத்திருக்கும் கனடா–இந்தியா உறவு அவசியம்” என இரு வெளியுறவு அமைச்சர்களும் வலியுறுத்தினர்.

ford

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள்திட்டம் மிக விரைவில் நிறைவு பெறும் – ஒன்டாரியோ முதல்வர்

March 4, 2026

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள் திட்டமிட்ட கால அட்டவணையை விட முன்பே நிறைவு

ne

“ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்” – இஸ்‌ரேல் எச்சரிக்கை

March 4, 2026

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்‌ரேல் எச்சரிக்கை

boa

வலி. வடக்கு ஊரணி மீனவர்கள் இருவர் காணமற் போயுள்ளமை குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை

March 4, 2026

யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம்

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.