இணையவழி சிறுவர் பாலியல் சுரண்டல்: ஒன்டாரியோ மாகாணம் தழுவிய விசேட நடவடிக்கையில் 63 பேர் கைது — 213 குற்றச்சாட்டுகள் பதிவு!

இணையவழி ஊடாகச் சிறுவர்களைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்துதல் மற்றும் சிறுவர் பாலியல் வன்கொடுமைப் பொருட்களைத் தயாரித்தல், வைத்திருத்தல், விநியோகித்தல் போன்ற குற்றங்களுக்கு எதிராக கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 63 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்டாரியோ மாகாண பொலிஸாரால் (OPP) ‘புரொஜெக்ட் டைம்’ (Project Time) எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட இப் பரந்த அளவிலான நடவடிக்கையின் மூலம், 51 சிறுவர்கள் குற்றவாளிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுப் பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குத் தேவையான அனைத்து உளவியல் மற்றும் சமூக ஆதரவுகளும் வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத் திட்டத்தின்கீழ் பொலிஸாரால் மொத்தம் 264 குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக 213 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விசாரணையில் வெளியான முக்கிய விபரங்கள்:

பொறுப்புமிக்க பதவிகள்: குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர்களில் இருவர் சமூகத்தில் “பொறுப்புமிக்க மற்றும் நம்பிக்கைக்குரிய உயர் பதவிகளில்” இருந்தவர்கள் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மீண்டும் குற்றமிழைத்தவர்கள்: கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் ஏற்கனவே சிறுவர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற பழைய குற்றவாளிகளாவர் (Repeat offenders).

ஆதாரங்கள் பறிமுதல்: விசாரணைகளின் போது கணினிகள், அலைபேசிகள் உள்ளிட்ட 814 மின்னணு சாதனங்கள் (Electronic devices) பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடரும் விசாரணைகள்: இக் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய மேலும் 154 வழக்குகள் குறித்து விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

பொலிஸ் ஆணையாளரின் எச்சரிக்கை:
இச் சோதனை நடவடிக்கை குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ஒன்டாரியோ மாகாண பொலிஸ் ஆணையாளர் தோமஸ் காரிக் (Thomas Carrique);

“ஒவ்வொரு சிறுவனும் இணையத்திலும், தான் வாழும் சமூகத்திலும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவர்களின் உரிமையாகும். சிறுவர்களைக் இரையாக்கும் இத்தகைய குற்றவாளிகளைத் தொடர்ந்து வேட்டையாடவும், அவர்களின் குற்றவியல் நடவடிக்கைகளை முடக்கவும் ஒன்டாரியோ பொலிஸார் உறுதியுடன் செயற்படுவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணத்தின் 25 பொலிஸ் பிரிவுகள், சட்டமா அதிபர் திணைக்களம் (Ministry of the Attorney General) மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைச்சகம் என்பன இணைந்தே இப் பிரம்மாண்ட கூட்டு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

சமீபகாலமாக இணையவழிச் சிறுவர் பாலியல் சுரண்டல்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ள பொலிஸார், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்

LNUXYUAULNCK7GSPUXGXBRCQKM

இது கவலையளிக்கிறது’: வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் ரொறன்ரோவிலுள்ள யூதர்களுக்குச் சொந்தமான 2 பேக்கரி கிளைகள் இலக்கு வைப்பு

July 27, 2026

பெருமளவிலான ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த (GTA) பல யூத தொழுகைக்கூடங்கள் (synagogues) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்

death

குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலம்

July 27, 2026

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

kava

காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

July 27, 2026

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார்

wate

இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 27, 2026

மொனராகலை- வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

aads

மன்னாரில் 43ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

July 27, 2026

நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983ஆம் ஆண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல்

an

விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் தொடர்பில் புதிய சட்டம்

July 27, 2026

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இலங்கையின் சட்டக்

hurm

ஹோர்முஸில் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் வெடிப்பு?

July 27, 2026

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கண்ணிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள்

Death-2

பாடசாலை மாணவி திடீர் மரணம்: பெற்றோர் சந்தேகம்

July 27, 2026

பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த