கிளிநொச்சி பகுதியில் வாழும் மலையக மக்களை கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இழிவாக பேசியதாகக் கூறப்படும் அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேவைச்சந்தை வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பெண்களையும் மக்களையும் இழிவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், “தைரியம் இருந்தால் அர்ச்சுனா எம்.பி. கிளிநொச்சிக்கு வந்து தனது அரசியலை காட்டி செல்லட்டும்” என சவாலாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதேவேளை, மலையக மக்களை ஒப்பிட்டு இழிவுபடுத்துவது குற்றமாகும் என்றும், அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.