அரசியல் மேடைகளில் பேசுவதற்கெல்லாம் கைது நடவடிக்கை மிகத்தவறானது: தவெக அரசை கடுமையாக சாடிய சீமான்!

சென்னை:

காவிரி சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன் என்றும், அரசியல் மேடைகளில் பேசுவதற்கெல்லாம் கைது நடவடிக்கை என்பதை எந்த அரசு செய்தாலும் அது மிகத்தவறானது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து முனைப்போடு செயல்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்குமே பெரும் தலைகுனிவாகும்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், “அரசியல் மேடைப் பேச்சுக்கெல்லாம் தவெக அரசு உடனடியாகக் கைது நடவடிக்கை எடுக்கும் என்றால், தன் மீதும் நாம்தமிழர் கட்சியினர் மீதும் அவதூறுகளையும் ஆபாசத் தாக்குதல்களையும் தொடுக்கும் தவெகவினர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? உயர் நீதிமன்றமே உத்தரவிட்டும் என்னைப் பற்றி அவதூறு பரப்பியவர்களைக் கைது செய்யாமல் காப்பாற்றுவது ஏன்? ‘சீமான் பழைய சாமான்’ எனத் தரக்குறைவாகப் பேசிய லயோலா மணிக்கு பாடநூல் கழகத் தலைவர் பதவி கொடுத்து அழகு பார்ப்பது தான் முதல்வரின் நாகரிக அரசியலா?” என்று சரமாரியாகக் கேள்வியெழுப்பியுள்ளார். தவெக எம்.எல்.ஏ சரவணன் உள்ளிட்டோர் மீதான பாலியல் புகார்களை விசாரிக்காதது ஏன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காவிரிப்படுகையில் குறுவை, சம்பா சாகுபடி பொய்த்துப் போயுள்ள நேரத்தில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல், வறட்டு கவுரவத்துக்காக மாநிலத்தின் கவனத்தைத் திசை திருப்புவது வெட்கக்கேடானது என்று சீமான் சாடியுள்ளார். சகிப்புத்தன்மையே ஜனநாயகத்தின் அடிப்படை என்பதை மறந்து, மேடைகளில் தவறாகப் பேசினால் அவதூறு வழக்குத் தொடுக்க வேண்டுமே ஒழிய, எடுத்த எடுப்பிலேயே கைதில் இறங்குவது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது எனத் தவெக அரசை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

#Seeman #UdhayanidhiStalin #CMVijay #TVKGovt #NTK #CauveryIssue #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #PoliticalUpdate #TamilNewsLive

go

50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

August 24, 2026

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

phi

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

August 24, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க

sak

கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

August 24, 2026

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான