அரசியற் பண்பாட்டு நீதிக்காய் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான திறந்த கலந்துரையாடல்

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், இணைந்து ஏற்பாடு செய்திருந்த சமூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் மக்கள் பிரதிநிதிகளை அணுகல் எனும் கருப் பொருளின்கீழ் மக்களுடனான திறந்த கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (10) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்டத் தலைவர் இந்துமதி ஹரிகரதாமோதரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், இளையதம்பி சிறிநாத், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சட்ட உருவாக்கம் மற்றும் கொள்கை மாற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடலை சட்டத்தரணி குகதாசன் ஐங்கரனின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது. பெண்கள் நுண்கடன்களால் எதிர்கொள்ளும் சவால்களும் சட்ட ஏற்பாடுகளிலுள்ள பாதுகாப்பின்மை தொடர்பாக தனது அனுபவங்களை மட்டக்களப்பு மாவட்ட அமரா பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் ஒன்றியத்தின் சார்பாக மதனா பாலகிருஷ்ணராஜா பகிர்ந்து கொண்டார்.

பெண்களுக்கெதிரான பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைத் தீர்ப்பதற்கான சட்ட வழிமுறைகளில் மட்டுப்படுத்தல்கள், அரசினைப் பாதுகாக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம், மக்கள் பிரதிநிதிகளின் தொடர் செயற்பாடுகளும் தொடர்பான திறந்த கலந்துரையாடல்கள் நடைபெற்றது.

மாதவிடாய்சார் பாராபட்ச நிலைமைகளும் அரச கொள்கைகளின் அமுலாக்கமின்மையும் தொடர்பாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்டத் தலைவர் இந்துமதி ஹரிகரதாமோதரன் தெளிவூட்டல் வழங்கியதோடு சமுதாயத்தில் அடையாளப்படுத்தப்பட்ட சமகால சமூகப் பொருளாதார அரசியற் பண்பாட்டுப் பிரச்சனைகள் மற்றும் இடைவெளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சமகால பொருளாதார நெருக்கடிகளும் அவர்களின் கோரிக்கைகளும், மக்கள் எதிர்கொள்ளும் காணிப்பிரச்சினைகள் மற்றும் வீட்டுத் திட்டம் தொடர்பான சவால்களும் உடனடி நடவடிக்கைகளும், நிலைமாறுகால நீதிச் செயன்முறைப் பொறிமுறைகளின் செயற்பாடின்மையும் மக்களுக்கான நீதி புறக்கணிக்கப்படலும் தொடர்பான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

வாகரைப் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக ஆசிரியர் கணேசமூர்த்தி விக்கிரம்சிங்கன் இதன்போது விளக்கினார். மக்கள் சேவை அணுகலில் மொழியுரிமை மீறப்படலும் மக்கள் எதிர்கொள்ளும் நாளாந்த சவால்கள், போதைப்பொருள் பாவனை ஏற்படுத்தும் சமூக, பொருளாதார அரசியற், பண்பாட்டு நெருக்கீடுகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இங்கு கலந்து கொண்ட மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இதன்போது பிரசன்னமாகியிருந்த 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களுக்கு பதில்களை வழங்கியதோடு, தெழிவூட்டல்ஙகளையும், மக்களின் கோரிக்கைகளை தமக்கு எழுத்து மூலம் முன் வைக்குமாறும் அவற்றுக்கு உரிய அதிகாரிகள், அமைச்சர்களினதும் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வுகளைப் பெறுவதற்கு தாம் முன்னிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததோடு, கொள்கைகளில் மாற்றம், சட்ட உருவாக்கம், தொடர்பிலும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

dd

நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட கட்டிடம்

July 27, 2026

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும்

sc'

மூங்கிலாறில் ஏழு மாதங்களாக ஆசிரியர் இல்லை

July 27, 2026

முல்லைத்தீவு, முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர்

figd

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தக் கோரி யாழில் போராட்டம்

July 27, 2026

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில்

acci main

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் – சகோதரன் பலி

July 27, 2026

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில்

den

 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்  

July 27, 2026

இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது. நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்

3

ஊழல் பட்டியல் எப்போது வெளியீடு? – அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்!

July 27, 2026

சென்னை: சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்