நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உயிருக்கு இந்த அரசாங்கத்தினால் ஆபத்து ஏற்படுவதற்கான திட்டம் உள்ளது என்று கடுமையான சந்தேகம் தனக்கு இருப்பதாக வழக்கறிஞர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்களில் நடக்கும் நிகழ்வுகளுடன் இந்த சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இளம் தலைவரான நாமல் ராஜபக்ச எதிர்காலத்தில் ஒரு சவாலாக இருப்பதால், அவரது வாழ்க்கை குறித்து இப்போது அவருக்கு கடுமையான கேள்விகள் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
வழக்கறிஞர் சுட்டிக்காட்டுவது போல, தற்போது காவலில் உள்ள ஒருவரின் தொலைபேசியில் ‘நாமல்’ என்ற பெயர் இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும், அது யார் என்பது தனக்குத் தெரியும் என்று அவர் தெரிவித்தார்.
இது நாமல் ராஜபக்சவுக்கு பாதாள உலகத் தொடர்புகள் இருப்பதாகக் காட்டி அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமாக இருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.