அமெரிக்க விமான நிலையங்களில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு: ஒரு கனடியராக நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால் தெரிந்து கொள்ள வேண்டியவை

அமெரிக்க அரசாங்கத்தின் பகுதி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ((TSA) அதிகாரிகளுக்கு உதவியாக குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளை நியமிக்கும் ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்பின் திட்டம் திங்கள்கிழமை முதல் பல அமெரிக்க விமான நிலையங்களில் நடைமுறைக்கு வந்தது.

கடந்த ஓராண்டில் அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் கனடியர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் தற்போது அமெரிக்க விமான நிலையங்கள் வழியாகச் செல்லும் கனடியர்கள் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள “பரந்த அதிகாரங்கள்” குறித்துத் தயாராக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“கனடியர்களைப் பொறுத்தவரை விதிகள் உண்மையில் மாறவில்லை. எல்லை அதிகாரிகளுக்கு இன்னும் மிக விரிவான அதிகாரங்கள் உள்ளன. புதிய விதிகளை விட அமலாக்கப் பிரிவினரின் நேரடித் தலையீடு மற்றும் அவர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதுதான் கனடியர்களைச் சற்று திகைக்க வைத்துள்ளது” என்று டொராண்டோவைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கொள்கை ஆய்வாளர் மரியோ பெல்லிஸ்ஸிமோ கூறினார்.

திங்களன்று காலை அட்லாண்டா நியூ ஆர்லியன்ஸ் மற்றும் ஹூஸ்டன் உள்ளிட்ட பல பரபரப்பான விமான நிலையங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் சில கூட்டாட்சி அதிகாரிகள் இருப்பதை அசோசியேட்டட் பிரஸ் ) கவனித்தது.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு தியளிக்க ஜனநாயகக் கட்சியினர் ஒப்புக்கொள்ளாவிட்டால் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகஅதிகாரிகளுக்கு உதவும் வகையில் விமான நிலையங்களுக்கு கூட்டாட்சி குடிவரவு முகவர்களை அனுப்பி வெளியேறும் வழிகளைக் கண்காணிக்க அல்லது பயணிகளின் அடையாள அட்டைகளைச் சரிபார்க்க உத்தரவிடுவேன் என்று ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

மினியாபோலிஸில் அலெக்ஸ் பிரெட்டி மற்றும் ரெனீ குட் ஆகியோரின் மரணத்தைத் தொடர்ந்து குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு மற்றும் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்படாமல் அவற்றுக்கு நிதியளிக்க ஜனநாயகக் கட்சியினர் மறுத்ததால் பிப்ரவரி 14 முதல் அந்தத் துறைக்கான நிதி நிறுத்தப்பட்டது.

சுங்க அமலாக்கப் பிரிவு என்ன செய்ய முடியும்?
கனடாவில் குடிவரவு அதிகாரிகளால் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டால் அந்தத் தடுத்து வைப்பை மறுபரிசீலனை செய்யும் உரிமை அவருக்கு உண்டு. இருப்பினும் நீங்கள் அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டால் “நீங்கள் இப்போது அமெரிக்காவின் சட்டங்களுக்கு உட்பட்டவர்கள்” என்பதை கனடியர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று பெல்லிஸ்ஸிமோ எச்சரித்தார்.

“கனடா தூதரக ஆதரவை வழங்க முடியும் குடும்பங்களுக்கு உதவ முடியும் ஆனால் இறுதியில் ஒரு வெளிநாட்டு அதிகார வரம்பின் முடிவை கனடாவால் ரத்து செய்ய முடியாது” என்று அவர் கூறினார்.

பொதுவாக நீங்கள் “இரண்டாம் கட்ட சோதனைக்கு” அனுப்பப்பட்டால் பயணத்தில் தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் தொலைபேசி மற்றும் மின்னணு சாதனங்களைச் சோதிக்கும் அதிகாரமும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு உண்டு.

நீங்கள் தடுத்து வைக்கப்பட்டால் என்ன செய்வது?

நீங்கள் தடுத்து வைக்கப்பட்டால் ஒரு வழக்கறிஞரை நியமிப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

“நீங்கள் சுங்க அமலாக்கப் பிரிவு அல்லது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டால் வழக்கறிஞரை நியமிக்க உங்களுக்கு உரிமை உண்டுஆனால் அரசாங்கம் உங்களுக்காக ஒருவரை வழங்க வேண்டிய அவசியமில்லை. இலவச அல்லது குறைந்த கட்டண வழக்கறிஞர்களின் பட்டியலைக் கேளுங்கள் என்று அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன்(ACLU)தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கறிஞரையோ அல்லது உங்கள் குடும்பத்தினரையோ அழைக்க உங்களுக்கு உரிமை உண்டு என்றும் (ACLU) குறிப்பிடுகிறது.

“பொய் சொல்லாதீர்கள் அல்லது தவறான ஆவணங்களைக் காட்டாதீர்கள்; அது எதிர்காலத்தில் உங்களுக்குப் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும்” என்று இமிக்ரண்ட் டிஃபென்ஸ் புராஜெக்ட் (Immigrant Defense Project) அறிவுறுத்துகிறது.

அமெரிக்காவிற்கு நீங்கள் எதற்காக வருகிறீர்கள் என்பதில் “தெளிவாக” இருப்பதும் தேவையான ஆவணங்களை (விமான டிக்கெட்டுகள் தங்குமிட விவரங்கள் பயண நோக்கத்திற்கான கடிதங்கள்) தயாராக வைத்திருப்பதும் சிறந்த அணுகுமுறையாகும்.

மார்ச் மாதத்தில் கனடியர்கள் உட்பட 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவிற்கு வரும் எந்தவொரு வெளிநாட்டினரும் அபராதத்தைத் தவிர்க்க அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனடிய குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கனடிய தூதரகம் அல்லது அட்லாண்டா பாஸ்டன் சிகாகோ டல்லாஸ் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் உள்ள தூதரகங்களை உதவிக்கு அணுகலாம்.

அமெரிக்க அரசாங்கத்தின் பகுதி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ((TSA) அதிகாரிகளுக்கு உதவியாக குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளை நியமிக்கும் ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்பின் திட்டம் திங்கள்கிழமை முதல் பல அமெரிக்க விமான நிலையங்களில் நடைமுறைக்கு வந்தது.

கடந்த ஓராண்டில் அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் கனடியர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் தற்போது அமெரிக்க விமான நிலையங்கள் வழியாகச் செல்லும் கனடியர்கள் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள “பரந்த அதிகாரங்கள்” குறித்துத் தயாராக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“கனடியர்களைப் பொறுத்தவரை விதிகள் உண்மையில் மாறவில்லை. எல்லை அதிகாரிகளுக்கு இன்னும் மிக விரிவான அதிகாரங்கள் உள்ளன. புதிய விதிகளை விட அமலாக்கப் பிரிவினரின் நேரடித் தலையீடு மற்றும் அவர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதுதான் கனடியர்களைச் சற்று திகைக்க வைத்துள்ளது” என்று டொராண்டோவைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கொள்கை ஆய்வாளர் மரியோ பெல்லிஸ்ஸிமோ கூறினார்.

திங்களன்று காலை அட்லாண்டா நியூ ஆர்லியன்ஸ் மற்றும் ஹூஸ்டன் உள்ளிட்ட பல பரபரப்பான விமான நிலையங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் சில கூட்டாட்சி அதிகாரிகள் இருப்பதை அசோசியேட்டட் பிரஸ் ) கவனித்தது.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு தியளிக்க ஜனநாயகக் கட்சியினர் ஒப்புக்கொள்ளாவிட்டால் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகஅதிகாரிகளுக்கு உதவும் வகையில் விமான நிலையங்களுக்கு கூட்டாட்சி குடிவரவு முகவர்களை அனுப்பி வெளியேறும் வழிகளைக் கண்காணிக்க அல்லது பயணிகளின் அடையாள அட்டைகளைச் சரிபார்க்க உத்தரவிடுவேன் என்று ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

மினியாபோலிஸில் அலெக்ஸ் பிரெட்டி மற்றும் ரெனீ குட் ஆகியோரின் மரணத்தைத் தொடர்ந்து குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு மற்றும் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்படாமல் அவற்றுக்கு நிதியளிக்க ஜனநாயகக் கட்சியினர் மறுத்ததால் பிப்ரவரி 14 முதல் அந்தத் துறைக்கான நிதி நிறுத்தப்பட்டது.

சுங்க அமலாக்கப் பிரிவு என்ன செய்ய முடியும்?
கனடாவில் குடிவரவு அதிகாரிகளால் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டால் அந்தத் தடுத்து வைப்பை மறுபரிசீலனை செய்யும் உரிமை அவருக்கு உண்டு. இருப்பினும் நீங்கள் அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டால் “நீங்கள் இப்போது அமெரிக்காவின் சட்டங்களுக்கு உட்பட்டவர்கள்” என்பதை கனடியர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று பெல்லிஸ்ஸிமோ எச்சரித்தார்.

“கனடா தூதரக ஆதரவை வழங்க முடியும் குடும்பங்களுக்கு உதவ முடியும் ஆனால் இறுதியில் ஒரு வெளிநாட்டு அதிகார வரம்பின் முடிவை கனடாவால் ரத்து செய்ய முடியாது” என்று அவர் கூறினார்.

பொதுவாக நீங்கள் “இரண்டாம் கட்ட சோதனைக்கு” அனுப்பப்பட்டால் பயணத்தில் தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் தொலைபேசி மற்றும் மின்னணு சாதனங்களைச் சோதிக்கும் அதிகாரமும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு உண்டு.

நீங்கள் தடுத்து வைக்கப்பட்டால் என்ன செய்வது?

நீங்கள் தடுத்து வைக்கப்பட்டால் ஒரு வழக்கறிஞரை நியமிப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

“நீங்கள் சுங்க அமலாக்கப் பிரிவு அல்லது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டால் வழக்கறிஞரை நியமிக்க உங்களுக்கு உரிமை உண்டுஆனால் அரசாங்கம் உங்களுக்காக ஒருவரை வழங்க வேண்டிய அவசியமில்லை. இலவச அல்லது குறைந்த கட்டண வழக்கறிஞர்களின் பட்டியலைக் கேளுங்கள் என்று அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன்(ACLU)தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கறிஞரையோ அல்லது உங்கள் குடும்பத்தினரையோ அழைக்க உங்களுக்கு உரிமை உண்டு என்றும் (ACLU) குறிப்பிடுகிறது.

“பொய் சொல்லாதீர்கள் அல்லது தவறான ஆவணங்களைக் காட்டாதீர்கள்; அது எதிர்காலத்தில் உங்களுக்குப் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும்” என்று இமிக்ரண்ட் டிஃபென்ஸ் புராஜெக்ட் (Immigrant Defense Project) அறிவுறுத்துகிறது.

அமெரிக்காவிற்கு நீங்கள் எதற்காக வருகிறீர்கள் என்பதில் “தெளிவாக” இருப்பதும் தேவையான ஆவணங்களை (விமான டிக்கெட்டுகள் தங்குமிட விவரங்கள் பயண நோக்கத்திற்கான கடிதங்கள்) தயாராக வைத்திருப்பதும் சிறந்த அணுகுமுறையாகும்.

மார்ச் மாதத்தில் கனடியர்கள் உட்பட 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவிற்கு வரும் எந்தவொரு வெளிநாட்டினரும் அபராதத்தைத் தவிர்க்க அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனடிய குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கனடிய தூதரகம் அல்லது அட்லாண்டா பாஸ்டன் சிகாகோ டல்லாஸ் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் உள்ள தூதரகங்களை உதவிக்கு அணுகலாம்.

pro

மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

March 24, 2026

இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி பொத்துவில் கனகர் கிராம மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (23) முன்னெடுக்கப்பட்டது

vet

மேஜர் ஜெனரல் சில்வா மற்றும் ஆளுநர் வேதநாயகன் விசேட சந்திப்பு

March 24, 2026

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா மற்றும் வட மாகாண ஆளுநர் ந.

arj

அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராக முறைப்பாடு!

March 24, 2026

கிளிநொச்சி பகுதியில் வாழும் மலையக மக்களை கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இழிவாக பேசியதாகக் கூறப்படும் அர்ச்சுனா எம்.பி.க்கு

Gold

ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்த தங்க விலை

March 24, 2026

நாட்டில் இன்று (24) தங்கத்தின் விலை மூன்று முறை அதிகரித்துள்ளதாக இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி,

xa

அமெரிக்க விமான நிலையங்களில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு: ஒரு கனடியராக நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால் தெரிந்து கொள்ள வேண்டியவை

March 24, 2026

அமெரிக்க அரசாங்கத்தின் பகுதி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ((TSA) அதிகாரிகளுக்கு உதவியாக குடிவரவு

his

ஹெஸ்புல்லாவுடன் தொடர்பு: வான்கூவர் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை

March 24, 2026

ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பிற்கு நிதி வழங்கும் 100 மில்லியன் டொலர் வலையமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி வான்கூவரைச் சேர்ந்த

nalinda-jayatissa_2025.01

எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

March 24, 2026

தற்போதைய இக்கட்டான சூழலில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்வதற்கு விலை சூத்திரம் பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த

ceb

மீண்டும் மின்வெட்டு

March 24, 2026

மின்சார உற்பத்திக்காக தேவையான எரிபொருள் கிடைக்கப்பெறுவதனால் இதுவரை மின்வெட்டு மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டு

rea

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற முறைமைக்கு எதிர்ப்பு; ஆசிரியர்கள் போராட்டம்

March 24, 2026

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி கடந்த 8

phil

எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் நாடு

March 24, 2026

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் மோதலைத் தொடர்ந்து, தேசிய அளவிலான எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த உலகின் முதல் நாடாக

ca

கனடாவுக்கு அனுப்புவதாக நடந்த பாரிய நிதி மோசடி

March 24, 2026

முழு குடும்பத்தையும் கனடாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஒரு கோடியே 58 லட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ்,

fi

அமெரிக்காவில் நீதிமன்றக் கட்டிடத்தில் தீ விபத்து

March 24, 2026

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணம், பிளாய்ட் கவுண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டடத்தில் திங்கள்கிழமை (23) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.