அமெரிக்க சிறப்பு தூதர் செர்ஜியோ கோர் இலங்கை விஜயம்!

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்பு தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor ) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இன்று 19 முதல் 24 ஆம் திகதி வரை இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் உயர் மட்ட சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.

இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், சிறப்பு தூதர் செர்ஜியோ கோர், அரசின் சிரேஷ்ட தலைவர்களுடன் சந்தித்து அமெரிக்கா–இலங்கை உறவின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தவுள்ளார். மேலும், முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.

இந்த சந்திப்புகள், முக்கிய கடல் போக்குவரத்து வழிகளைப் பாதுகாப்பது, துறைமுகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்துவது போன்ற அமெரிக்காவின் முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, சுதந்திரமான, திறந்த மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும் நோக்கமும் இதில் பிரதிபலிக்கப்படுகிறது.

மாலைத்தீவில், அந்நாட்டு அரசின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ள சிறப்பு தூதர், அமெரிக்கா–மாலைத்தீவு இருதரப்பு உறவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தவுள்ளார். பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் அந்நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பொருளாதார விரிவாக்கத்திற்கும் ஆதரவு வழங்கும் வாய்ப்புகளை ஆராய்வதும் இந்த விஜயத்தின் ஒரு பகுதியாகும்.

மேலும், அமெரிக்கா மற்றும் மாலைதீவு இடையிலான 60 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுடன் நீண்டகால கூட்டாண்மையை அமெரிக்கா மதிப்பதோடு, பிராந்திய பாதுகாப்பும் நிலைத்தன்மையும் குறித்த பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் தொடர்ந்து வலியுறுத்துகிறது என அமெரிக்க வெளியுறவு துறை குறிப்பிட்டுள்ளது.

Jaf uni

இன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

March 19, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமையை கண்டித்து இன்றையதினம் விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட யாழ்

Sergio Gor

அமெரிக்க சிறப்பு தூதர் செர்ஜியோ கோர் இலங்கை விஜயம்!

March 19, 2026

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்பு தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor ) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

rec

மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதப்படுத்தும் மத்திய நிலையம் திறப்பு

March 19, 2026

நானுஓயா சமர்செட் பகுதியில் மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதப்படுத்தும் மத்திய நிலையம் திறந்துவைக்கப்பட்டதோடு, கழிவுகளை சேகரித்துக் எடுத்துச் செல்வதற்கு சுற்றுச்சூழலுக்கு

puc

13.56 வீதத்தால் மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

March 19, 2026

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களை 13.56 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது. இது தொடர்பான

jail

ஜெர்மன் யுவதியிடம் அத்துமீறிய தொல்பொருள் திணைக்கள ஊழியருக்கு விளக்கமறியல்!

March 19, 2026

அநுராதபுரம், மிஹிந்தலை ரஜமஹா விகாரையைப் பார்வையிடச் சென்ற ஜெர்மன் நாட்டு இளம் யுவதியொருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில்

wutor

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 10க்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கை பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டு வருகின்றன!

March 19, 2026

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள அசாதாரண சூழல் மற்றும் எரிபொருள் நெருக்கடியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து பொலிஸ் ஊடகப்

one nat

‘முழு நாடுமே ஒன்றாக’ ; தேசிய செயற்பாடு – 81 சிறுமிகளுடன் 1,772 சிறுவர்கள் கைது

March 18, 2026

போதைப்பொருளை ஒழிப்பதற்கான ‘ முழு நாடுமே ஒன்றாக ’ தேசிய செயற்பாட்டு சபை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில்

Iran

வளைகுடா நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் ஈரான் தாக்குதல்!

March 18, 2026

ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை தலைவர் அலி லாரிஜானி மற்றும் பாசிஜ் படைத் தளபதி கோலம்ரேசா சொலைமானி ஆகியோர் இஸ்ரேலியத்

Mars

செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் பிரமிட்டுகள்!

March 18, 2026

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எகிப்திய பிரமிட்டுகளைப் போன்ற ஒரு மர்மமான அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்களிடையே

jr

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். இஸ்ரேல் உளவுப்பிரிவிடம் 10 இலட்சம் டொலர் கோரினாரா?

March 18, 2026

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, 1987ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரசாரத்திற்காக இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாட்’ இடமிருந்து

Sanjeeva ethiri

விசாரணையின் சுயாதீனத்தன்மையை பாதிக்கும் விதத்தில் ஜனாதிபதி நடக்கின்றார்?

March 18, 2026

நிலக்கரி கொள்முதல் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், அதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என ஜனாதிபதி அண்மையில் ஊடகங்கள்

arres

வெள்ளவத்தையில் சட்டத்தரணியொருவரின் ஆவணத்தைப் பயன்படுத்தி பண மோசடி; இருவர் கைது

March 18, 2026

சட்டத்தரணியொருவரின் ஆவணமொன்றை பயன்படுத்தி வங்கி கணக்கொன்றிலிருந்து 48,805,275.00 ரூபாயை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால்