நபிகள் நாயகத்தை இ’ழிவுபடுத்தும் வகையில் முகநூலில் (Facebook) கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் கு’ற்றச்சாட்டின் கீழ், சவூதி அரேபிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் ம’ரண தண்’டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் இளைஞனான சிவராசா அனோஜனைப் பாதுகாப்பாக மீட்டுத் தருமாறு அவரது தாயார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்த கண்ணீர்க் கோரிக்கையைத் தொடர்ந்து, அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “அனோஜனைக் கா’ப்பாற்றுவதற்காகச் சட்ட ரீதியான மேல்முறையீடுகளைச் செய்வதுடன், சவூதி அரேபிய அரசாங்கத்திடமிருந்து மன்னரின் பொதுமன்னிப்பு (Royal Pardon) அல்லது தண்டனைக் குறைப்பைப் பெறுவதற்கான ராஜதந்திர முயற்சிகளையும் இலங்கை அரசு ஒரே நேரத்தில் முன்னெடுத்து வருகின்றது” என உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அனோஜனின் குடும்பத்தினருடன் தொடர்ச்சியாகக் கலந்தாலோசித்து, சவூதி உச்ச நீதிமன்றத்தில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடாக உயர்மட்ட ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் மாலிமா (NPP) அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த காலங்களைப் போலன்றி, இம்முறை அரசாங்கம் காட்டி வரும் இத் தீவிர நடவடிக்கை தமிழ் மக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.