அடிப்படை மனித உரிமை சுத்தமான குடிநீர்; இன்று உலக தண்ணீர் தினம்!

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி, 1993 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் திகதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது.

நீ‌ர் இ‌ன்‌றி அமையாது உலகு எ‌ன்பத‌ற்கு ஏ‌ற்ப, ‌நீ‌ரி‌ன்‌றி நா‌ம் வாழ இயலாது எ‌ன்பது‌ம் ந‌ன்கு அ‌றி‌ந்ததே. பூ‌மி‌யி‌ல் 30 ‌விழு‌க்காடு ம‌ட்டுமே நில‌ப்பர‌ப்பாகு‌ம். ‌மீத‌‌மிரு‌க்கு‌ம் 70 ‌விழு‌க்காடு‌ம் ‌நீ‌ர்பர‌ப்புதா‌ன். ஆனா‌ல், இ‌ன்று அ‌‌‌ந்த 30 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் வ‌சி‌க்கு‌ம் ம‌க்களு‌க்கு‌த் தேவையான ‌நீரை அ‌ளி‌க்கு‌ம் போ‌திய வச‌தியை பூ‌மி இழ‌ந்து வரு‌‌கிறது.

சுத்தமான குடிநீர் என்பது ஒரு அடிப்படை மனித உரிமையாகும், மேலும் தற்போது உலகம் முழுவதும் 2.2 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை .

ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள மூன்று பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தேசிய எல்லைகளைக் கடக்கும் நீர்வழிகள் மூலம் தங்கள் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள்.

153 நாடுகள் ஆறுகள், ஏரிகள் மற்றும் பிற நீர் ஆதாரங்களை அண்டை நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளுகின்றன. உலக வங்கியின் கணிப்புகளின்படி, 2030 ஆம் ஆண்டுக்குள் உலகம் தேவைக்கும் கிடைக்கும் நீர் இருப்புக்கும் இடையிலான இடைவெளியை எதிர்கொள்ளும்.

நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும்.

உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.ஆனால் உரிய முறையில் நீரை மறுசுழற்சி செய்தால் அந்த தட்டுப்பாடு குறையும் என்கின்றனர் நீரியல் ஆய்வாளர்கள்.

இதுமட்டுமின்றி அன்றாடம் செய்யும் சிறுசிறு வேலைகளும் தண்ணீர் சேமிப்புக்கு வழிவகுக்கும். பல் துலக்கும் போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்கலாம் இதன்மூலம் நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும், தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்த பிறகு மறக்காமல் குழாயை அடைப்பதும் வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் அதை அடைப்பதும் தண்ணீர் சேமிப்பிற்கு வழிவகுக்கும்.

தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும்போது தண்ணீர் நிரம்பி வீணாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். புதியதாக வீடு மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் சேர்த்து கட்டுவதன் மூலம் நீர் வீணாகாமல் பார்த்து கொள்வதோடு சேமிக்கவும் முடியும்.

உலக தண்ணீர் தினத்தை ஒரு நாளாக மட்டும் கடைபிடிக்காமல் ஒவ்வொரு நாளும் தண்ணீரின் தேவையையும், சிக்கனத்தையும் மனதில் வைத்தே செயல்பட வேண்டும். தண்ணீர் குடிக்காமல் உங்களால் எத்தனை நாட்கள் அதிகப்பட்சமாக வாழ்ந்திட வாழ முடியும்?. ஒரு வாரம் கூட என வைத்துக்கொள்வோம். ஆனால் அதற்கு மேல் நம்மால் வாழ முடியாது. எனவே தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு துளி தண்ணீரையும் காப்பது நம் தலையாய கடமை.

 

Water day

அடிப்படை மனித உரிமை சுத்தமான குடிநீர்; இன்று உலக தண்ணீர் தினம்!

March 22, 2026

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி, 1993 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் திகதி உலக

Bus

இன்று 90 வீத தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது?

March 22, 2026

சுமார் 90 சதவீத தனியார் பேருந்துகள் இன்று சேவையில் ஈடுபடாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வரலாற்றிலேயே

ra

ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணம்: வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி!

March 22, 2026

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 33 ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 ஓவர்

weather

வானிலை முன்னறிவிப்பு

March 22, 2026

மேல், சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது

trum

ஹோர்முஸ் நீரிணையை அடுத்த 48 மணிநேரத்திற்குள் திறந்துவிடாவிட்டால் ஈரானின் சகல மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் – ட்ரம்ப்

March 22, 2026

ஹோர்முஸ் நீரிணையை அடுத்த 48 மணிநேரத்திற்குள் திறந்துவிடாவிட்டால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி

5

பெண்ணைக் கிணற்றில் வீசிய தம்பதி கைது!

March 22, 2026

மட்டக்களப்பு, தாந்தாமலை – நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக,

isre

இஸ்ரேலில் 100 பேர் வரை காயம்

March 22, 2026

இஸ்ரேலின் ஆர்ட் மற்றும் டிமோனா ஆகிய இரு நகரங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

gun

யால சரணாலயத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

March 21, 2026

யால தேசிய வனப்பகுதியின் கிரிந்த, பெப்புவ (Bebuwa) வனஜீவராசிகள் பாதுகாப்பு சாவடிக்கு அருகில் இன்று சனிக்கிழமை (21) காலை துப்பாக்கிச்

kap

அரசின் வெளிநாட்டுக் கொள்கையில் சிக்கல்?

March 21, 2026

மத்திய கிழக்கு யுத்தத்தின்போது அரசாங்கம் மத்திய நிலையில் இருந்தாலும் உறுதியான வெளிநாட்டுக்கொள்கையில் இருக்கவேண்டும். என்றாலும் இந்த யுத்தத்தில் அரசாங்கம் நடுநிலையாக

chandrasekar

அரசு நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் நேரிய வழியில் பயணிக்கும்

March 21, 2026

எதிர்க்கட்சியினர் எத்தகைய துரோக செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் அரசாங்கம் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் நேரிய வழியில் தொடர்ந்து பயணிக்கும் என

jail

பாதாள உலகக் குழுவினரின் சகாக்கள் 15 பேர் கைது

March 21, 2026

வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் இரு முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகளின் ஆலோசனையின் பேரில் நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த

vadd

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!

March 21, 2026

ழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் இன்றைய தினம் (21) அமைதியான முறையில்