ஸ்டாலினின் ஆட்சி தான் அமையும்; கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை – வைகோ

”தமிழகத்தில் ஸ்டாலினின் ஆட்சி தான் அமையும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சிற்கு இடமில்லை ” என மதிமுகவின் பொதுச்செயலாளரான வைகோ பேசியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக எதிர்வரும் 23 ஆம் திகதியன்று பொது தேர்தல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும், கட்சியின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே. என். நேருவை ஆதரித்து திருச்சி உறையூர் பகுதியில் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளரான வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதில் அவர் பேசியதாவது….

நான் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதற்காக என்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்தவன். ஐந்தரை ஆண்டு காலம் சிறையில் இருந்தவன்.

6000 கிலோ மீற்றர் தொலைவிற்கு நடைபயணம் மேற்கொண்டவன். ஸ்டெர்லைட்காக போராடியவன். தூத்துக்குடியில் 13 உயிர்களை காவு வாங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி. ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் ஏஜென்ட்டாக புரோக்கராக… எடப்பாடி மாறியதால் தான் அந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அதே போல் சாத்தான் குளத்திலும் தந்தை – மகன் அடித்து கொல்லப்பட்டதற்கும் அப்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுதான் பொறுப்பு.

உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆணவத்துடன் திமுகவை வேருடன் பிடுங்கி எறிவேன் என்கிறார். இதே போல் அண்ணாமலையும் கூறுகிறார். யாராலும் அதை செய்ய முடியாது. திமுக தியாகத்தால் கட்டப்பட்ட கோட்டை. 75 ஆண்டு கால பாரம்பரிய திமுகவை தோற்கடிப்போம் என பேசினால்… அது ஜனநாயக உரிமை. ஆனால் மண்ணுடன் கலந்திருக்கக்கூடிய இயக்கத்தை வேருடன் பிடுங்கி அழிப்போம் என்கிறார்கள். இது நடக்காது.

திராவிட இயக்கத்தை நெஞ்சில் சுமப்பவன் நான். கலைஞருக்கு பக்கபலமாக எவ்வாறு நான் நின்றேனோ உற்ற துணையாக இருந்தேனோ அதேபோல் ஸ்டாலினுக்கும் இருப்பேன் என கலைஞரிடத்தில் உறுதி அளித்துள்ளேன்.

இந்த இயக்கத்தை சாய்ப்பதற்கு சனாதன சக்திகளும், அதன் வெறிபிடித்த கூட்டமும் இங்கே நுழைந்து விடக்கூடாது. அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழ்நாடு. தளபதி ஸ்டாலினின் நிர்வாகத்தில் இந்துக்கள்- இஸ்லாமியர்கள்- கிறித்தவர்கள்- என அனைவரும் சகோதரர்களாக வாழக்கூடிய சூழல் உள்ளது. வடநாட்டில் ரத்த களரிகள் ஏற்படுவதை போல் தமிழ்நாட்டிலும் ஏற்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்ற கூட்டத்தை தடுத்து, அதனை தகர்த்து தவிடு பொடியாக்க வேண்டிய கடமை எனக்கும் உண்டு.

சுயமரியாதை, சமூக நீதி ,சமத்துவம், சகோதரத்துவம் ,மதச்சார்பின்மை , கூட்டாட்சி கருத்தியல் கொண்ட இயக்கம் தான் திராவிட மாடல். இந்த ஆட்சியை நடத்துகிற இயக்கம் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் – கட்டணம் இல்லா மகளிர் விடியல் பயணம் – முதல்வர் காலை உணவு திட்டம் -புதுமைப்பெண் -தமிழ் புதல்வன்- நான் முதல்வன் -மக்களை தேடி மருத்துவம் -என பல்வேறு திட்டங்களை அறிவித்த நமது முதல்வரை.. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் இருக்கக்கூடிய முதல்வர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை பின்பற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே என் நேரு கலைஞர் பேருந்து முனையும் -காய்கறி சந்தை- டைடல் பார்க் என பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ளார். அதனால் அவர் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

தமிழ்நாட்டிற்கு எந்த மாநிலங்களிலும் இல்லாத புதிய மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்தது ஸ்டாலின் தலைமையிலான அரசு. எனவே அந்த அரசு நீடிப்பதற்கான தீர்ப்பை தான் தமிழக மக்கள் வழங்குவார்கள். எங்கு திரும்பினாலும் உதயசூரியன் என்ற குரல் தான் கேட்கிறது. மீண்டும் ஸ்டாலின் தான் முதல்வராக பொறுப்பேற்பார். தமிழகத்தில் அடுத்து அமையப்போவது ஸ்டாலினின் திமுக தலைமையிலான ஆட்சி தான். கூட்டணி ஆட்சி அல்ல. அந்த நிலையை மக்கள் ஒருபோதும் ஏற்படுத்த மாட்டார்கள்” என பேசினார்.

ar

அமெரிக்காவின் செய்தியுடன் ஈரான் சென்றார் பாகிஸ்தான் பீல்ட் மார்ஷல் : ஈரான் அரசு ஊடகம் தகவல்

April 15, 2026

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு முக்கிய மத்தியஸ்தராக உருவெடுத்துள்ள பாகிஸ்தானின் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் (Asim Munir), உயர்மட்டக்

ssds

கனடா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வாய்ப்பு?

April 15, 2026

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் (Alexander Stubb), கனடா பிரதமர் மார்க் கார்னியுடனான (Mark Carney) தனது முதல் அதிகாரப்பூர்வ

str

நெடுந்தீவு மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்னிறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

April 15, 2026

நெடுந்தீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி ‘நெடுந்தீவு கவனயீர்ப்பு போராட்ட ஏற்பாட்டுக் குழு’ போராட்டத்திற்கான

ssss

யாழ்ப்பாணத்தின் 800 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் புதிய நூல் வெளியீடு

April 15, 2026

பிரபல வரலாற்றுப் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் எழுதிய “Glimpses of an Ancient Civilization, Society and Culture in Jaffna

dea

விசேட அதிரடிப்படையின் ஜீப் மோதி முதியவர் பலி: சாரதி கைது

April 15, 2026

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கன்னங்குடா, புதுமண்டபத்தடி பகுதியைச் சேர்ந்த

d

விபத்திற்கான இழப்பீடு பெற 8 மாதங்கள் வரை காத்திருந்தது குறித்து ஒன்டாரியோ வாகன சாரதி அதிருப்தி

April 15, 2026

ஒரு கடுமையான விபத்திற்குப் பிறகு, தனது கார் காப்பீட்டு (Insurance) நிறுவனத்தின் சிக்கலான நடைமுறைகளால் எட்டு மாதங்களாக வாகனம் இல்லாமல்

dd

வளைகுடா கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் அச்சுறுத்தல்?

April 15, 2026

ஈரானின் ஆயுதப் படைகளை ஒருங்கிணைக்கும் மிக உயர்ந்த செயல்பாட்டுத் தலைமையகமான ‘காதம் அல்-அன்பியா’ (Khatam al-Anbiya) மத்திய தலைமையகத்தின் தளபதி

ha

நோவா ஸ்கோடியா ஹாக்கி ‘ஹேஸிங்’ விபரீதம்: பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

April 15, 2026

நோவா ஸ்கோடியாவில் (Nova Scotia) ஹாக்கி விளையாட்டில் நடந்த “ஹேஸிங்” (புதியவர்களைத் துன்புறுத்தும் கலாச்சாரம்) தொடர்பான பாலியல் வன்கொடுமை வழக்கில்

Miss

மிசிசாகாவில் வாகனம் மோதி ஒருவர் பலி: காவல்துறை தீவிர விசாரணை

April 15, 2026

மிசிசாகாவில் (Mississauga) புதன்கிழமை அதிகாலை வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி குறித்துப் புலனாய்வு செய்து வருவதாகக் காவல்துறை

acc

விபத்தில் இருவர் படுகாயம்

April 15, 2026

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கொமர்சல் பகுதியில், 13 ஆம் திகதியன்று பிற்பகல் தனியார் பேருந்தும் முச்சக்கர

a

அழுகிய கோழி இறைச்சி பறிமுதல்

April 15, 2026

புத்தாண்டு தினத்தில் பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 57.5 கிலோ கிராம் எடையுள்ள அழுகிய கோழி

v

அமெரிக்காவுடன் தொடர்ந்து செய்திகளைப் பரிமாறி வருகிறோம் – ஈரான் வெளியுறவு அமைச்சகம்

April 15, 2026

கடந்த ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த போதிலும், தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தர் மூலமாகத் தொடர்ந்து தகவல்கள் பரிமாறப்பட்டு வருவதாக