வெலிக்கடை சிறைச்சாலை பற்றி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை

வெலிக்கடை சிறைச்சாலையைப் பரிசோதிப்பதற்காகச் சென்ற தங்களது அதிகாரிகளை சிறைச்சாலைக்குள் அனுமதிக்காமை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடுமையான கவலையையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை 7ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று வெலிக்கடை சிறைச்சாலையைப் பரிசோதிப்பதற்காகச் சென்றிருந்த போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.

முன்அறிவித்தல் இன்றி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தடுப்புக் காவலில் உள்ள இடங்களுக்குள் நுழைவதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் அளிக்கும் 1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தை, சிறைச்சாலை அதிகாரிகள் இதன் மூலம் மீறியுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனியவின் தலைமையில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அந்தச் சந்தர்ப்பத்தில் சிறைச்சாலைக்குள் நிலவிய ஸ்திரமற்ற பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாகவே ஆணைக்குழுவின் அதிகாரிகளை உள்ளே அனுமதிக்கவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அச்சந்தர்ப்பத்தில் நிலவிய உண்மையான சூழ்நிலையை ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்குச் சரியாகத் தெரிவிக்கத் தவறியமை குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் அங்கு வருத்தம் தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காது எனவும் உறுதியளித்துள்ளனர்.

இருப்பினும், சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கிய இந்த விளக்கத்தில் தமக்குத் திருப்தி இல்லை என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதைத் தவிர, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது பழிவாங்கும் நோக்கில் சித்திரவதைகளை மேற்கொள்ளல், மருத்துவ சிகிச்சைகளை மறுத்தல், கைதிகள் இருக்கும் இடங்களை அவர்களது குடும்பத்தினருக்கு அறிவிக்கத் தாமதித்தல் மற்றும் தண்டனைக் காலம் முடிந்த கைதிகளையும் தொடர்ந்தும் தடுத்து வைத்திருத்தல் போன்ற பல கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்தும் ஆணைக்குழு இதன்போது கேள்வி எழுப்பியுள்ளது.

சிறைச்சாலைக் காவலில் உள்ளவர்களுக்கு இடம்பெற்ற சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டமை மற்றும் மரணங்கள் குறித்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு, வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவத்தைக் கருத்திற்கொண்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சிறைச்சாலை அதிகாரிகளுக்குப் பின்வரும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தடுப்புக் காவலிலுள்ள இடங்களைப் பரிசோதிப்பதற்கு ஆணைக்குழுவிற்கு சட்டப்பூர்வமாக உள்ள உரிமையை உடனடியாக வழங்குதல்.

இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல்களை உடனடியாக நிறுத்துதல்.

கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு உடனடியாக அறிவித்தல்.

விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்தை நிறைவு செய்துள்ள கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தல்.

Rev.ASirisumana-263x263

யுத்த காலத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க காவி உடையும் பிக்குகளின் தியாகமும் முக்கிய பங்கு வகித்தது – அகலகட சிறிசுமண தேரர்

July 27, 2026

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பௌத்த பிக்குகளும், காவி உடையும்

5

காமன்வெல்த் போட்டியில் சாதித்த தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி!

July 27, 2026

ஹைதராபாத்: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி

missing per fa

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு: யாழ்ப்பாணத்தில் ஓகஸ்ட் 30இல் நடத்த ஏற்பாடு!

July 27, 2026

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட சர்வதேச மாநாடு ஒன்றை

jaffna court

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: “சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது” – எதிர்மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கடும் வாதம்!

July 27, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கில், “குற்றவாளிகளோ அல்லது சந்தேகநபர்களோ சட்டத்தை ஆயுதமாகப்

Screenshot

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகே திடீர் தீ பரவல் – பெரும் அனர்த்தம் தவிர்ப்பு; பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்வி!

July 27, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும்

san

நிதி மோசடி; சாந்த பண்டாரவின் புதல்வர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

July 27, 2026

தி மோசடிச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித்

deh

கல்கிசை மயான துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியும் கைது

July 27, 2026

தெஹிவளை – கல்கிசை மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

dd

நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட கட்டிடம்

July 27, 2026

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும்

sc'

மூங்கிலாறில் ஏழு மாதங்களாக ஆசிரியர் இல்லை

July 27, 2026

முல்லைத்தீவு, முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர்

figd

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தக் கோரி யாழில் போராட்டம்

July 27, 2026

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில்

acci main

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் – சகோதரன் பலி

July 27, 2026

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில்

den

 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்  

July 27, 2026

இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது. நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை