விளக்கமறியலில் உள்ள கஸ்ஸப தேரர் சிறைச்சாலை உணவை நிராகரித்தார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர், சிறைச்சாலையினால் மதிய உணவுக்காக வழங்கப்பட்ட உணவை (தானத்தை) நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையொன்றை ஸ்தாபிக்கும் போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில், பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் ஏனைய 05 சந்தேக நபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் (14) உத்தரவிட்டிருந்தது.

திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை பூமியில் அறநெறிப் பாடசாலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட பின்னர், விகாராதிபதி மற்றும் நிர்வாக சபையினர் இணைந்து கடந்த நவம்பர் 16 ஆம் திகதி அங்கு புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும், குறித்த காணியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானம் அனுமதியற்றது என கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் பிக்குகளுக்கு அறிவித்திருந்தனர்.

பின்னர் அன்று இரவே புத்தர் சிலையை அவ்விடத்திலிருந்து அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது அமைதியின்மை ஏற்பட்டதுடன், தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறி இரண்டு தேரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எழுந்த எதிர்ப்பு காரணமாக மறுநாளே மீண்டும் அதே இடத்தில் புத்தர் சிலையை வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இவ்வாறான பின்னணியில், திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான இடைக்காலத் தடையுத்தரவு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த நவம்பர் 19 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை தொடர்பான பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதன்போது இவ்வழக்கின் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டிருந்த 11 பேரில் 09 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இவர்களில் திருகோணமலை கோட்டை வீதி ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், பலங்கொட கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவங்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோர் அடங்குகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை துறைமுக பொலிஸார் நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கையொன்றை சமர்ப்பித்ததுடன், கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் அனுமதியற்ற கட்டுமானம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த திருகோணமலை நீதவான், திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் மற்றும் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களையும், ஏனைய ஐந்து சந்தேக நபர்களையும் ஜனவரி 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை

une

தெஹ்ரானில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் மீது ஏவுகணைத் தாக்குதல்

March 5, 2026

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொலெஸ்தான் அரண்மனை (Golestan Palace) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை “பகிரங்கமான

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்