வாடகைக்கு வீடுகளை வழங்கும் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க புதிய சட்டமூலம்

வாடகை அடிப்படையில் வீடுகளை வழங்கும் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் கொண்டு வந்த புதிய சட்டமூலத்தின் நோக்கங்கள் குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (03) விளக்கமளித்தார்.

இந்த சட்டமூலத்தின் நோக்கமாக அமைவது வீட்டு உரிமையாளர் மற்றும் அந்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் இடையே உள்ள உறவைப் பாதுகாப்பதாகும் என அமைச்சர் கூறினார்.

அதன்படி வாடகை அடிப்படையில் வீடொன்றை வழங்கும்போது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் படி செயல்பட வேண்டும் என்றும், எந்த வகையிலாவது அந்த ஒப்பந்தங்களை மீறி சட்டவிரோதமாக செயல்பட முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

இன்றைய தினத்திலிருந்து மேலும் ஒரு மாத காலம் இந்த சட்டமூலத்திற்காக மக்கள் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. அந்த கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு இதை மேலும் திருத்தம் செய்ய முடியும். இறுதி வடிவத்திற்கு அதன் பின்னரே செல்ல முடியும்.

இந்த சட்டமூலத்தைக் கொண்டு வருவதன் எதிர்பார்ப்பு சட்டரீதியான பிணைப்புக்கு, இணக்கப்பாட்டுக்கு உட்பட்ட வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகை குடியிருப்பாளர் இடையிலான உறவை உறுதிப்படுத்துவதாகும். அதில் இருதரப்புக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில்தான் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் இந்த செயல்முறையில் வீட்டு உரிமையாளருக்குப் பிரச்சினைகள் வருகின்றன, அவர் சட்டத்தின் முன் தஞ்சம் கோர முடியாத சந்தர்ப்பங்கள் உள்ளன. அதேபோல் வாடகை குடியிருப்பாளர் அநீதிக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களும் உள்ளன. இந்த வாடகை குடியிருப்பாளர் மற்றும் வீட்டு உரிமையாளர் என்ற இருதரப்பையும் பாதுகாத்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சட்டம் இது.

இந்தச் சட்டம் பொருந்துவதே ஏதேனும் இருதரப்பினர் ஒப்பந்தம் செய்துகொண்டால், அந்த ஒப்பந்தத்திற்குப் புறம்பாக யாராவது செயல்பட்டால், அவ்வாறு அநீதிக்கு உள்ளாகும் நபர்களுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் உதவி கிடைக்கிறது. ஒப்பந்தத்திற்கு வெளியே சென்று காலம் தாழ்த்தி இருந்தால் இந்தச் சட்டம் பொருந்தாது, அதற்குப் பொருந்துவது சாதாரண சட்டமாகும். ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் அந்த ஒப்பந்த காலத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட யாருக்கும் உரிமை கிடைப்பதில்லை.

அதாவது ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, இரண்டு மாதங்களுக்கு முன் வெளியேற முடியும் என்று ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறான நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன் சட்டவிரோதமாக மின்சாரத்தைத் துண்டித்தோ, நீரைத் துண்டித்தோ, பல்வேறு விதமாக துன்புறுத்தல்கள் செய்தோ அனுப்ப முயன்றால் அல்லது இந்த வகையில் அநீதிக்கு உள்ளானால், அந்த நபர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

canada export

டிரம்ப் – கனடா வர்த்தக மோதல் தீவிரமடைதல்: உலகளாவிய தாக்கம்

August 26, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் கனடியப் பிரதமர் மார்க் கார்னிக்கும் இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள வர்த்தக மோதல், வட அமெரிக்க

P_4790484658

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தமிழகம் முழுவதும் 29-ஆம் தேதி சிறப்பு முகாம்!

August 26, 2026

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரேஷன் அட்டைதாரர்களுக்கான கைவிரல் ரேகைப் பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்

maalai-malar_2026-08-26_djl2qd6s_vijay

“அன்பும் மகிழ்ச்சியும் பொங்கிப் பெருகட்டும்!” – உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்கு முதலமைச்சர் விஜய் ஓணம் வாழ்த்து!

August 26, 2026

சென்னை: முதலமைச்சரின் ஓணம் நல்வாழ்த்து கேரள மக்களின் மிக முக்கியப் பண்டிகையான ஓணம் திருநாளை முன்னிட்டுப் பல்வேறு அரசியல் கட்சித்

25kdl2507_2508chn_105_7

வேளாங்கண்ணிக்கு 28-வது ஆண்டாகப் பாதயாத்திரை: புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட அமைச்சர் மரிய வில்சன்!

August 26, 2026

கடலூர்: வேளாங்கண்ணி திருவிழாவும் பாதயாத்திரையும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா வரும் ஆகஸ்ட் 29-ஆம்

image-2026-05-9a03504cef34fd9ce0dfa482a9177be9-1200x675

தமிழ்நாட்டில் மேலும் 2 புதிய விமான நிலையங்கள்: த.வெ.க. அரசின் தொலைநோக்குத் திட்டங்கள்!

August 26, 2026

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்துவதோடு, ஓசூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிய விமான நிலையங்களை

1200-675-19042348-thumbnail-16x9-che3

மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம்: தமிழகத்தில் விரிவுபடுத்தப்படும் ‘வெற்றி பயணம்’ திட்டம் – முழு விவரம்!

August 26, 2026

சென்னை: முதலமைச்சரின் புதிய அறிவிப்பு தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, ‘வெற்றி

images - 2026-08-26T103751.144

தமிழகத்தில் காணாமல் போன மலைகள்: சட்டப்பேரவையில் புள்ளிவிவரங்களுடன் அமைச்சர் பிரபு பகீர் தகவல்!

August 26, 2026

சென்னை: தமிழகச் சட்டப்பேரவையில் கனிமவளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய அமைச்சர் பிரபு, தமிழகத்தில் வெட்டி எடுக்கப்பட்டு

26-6a07204f6669e

“லாட்டரி விவகாரத்தில் என் கணவரைத் தேவையில்லாமல் இழுக்க வேண்டாம்!” – எம்.எல்.ஏ. லீமா ரோஸ் கண்டனம்

August 26, 2026

சென்னை: சட்டப்பேரவையில் லாட்டரி விவாதம் சட்டப்பேரவையில் நேற்று இயற்கை வளங்கள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறைகள்

4-122Nle5O6fKwN9

ரூ.100 கோடியில் சிப்காட் பூங்காக்கள் மேம்பாடு: சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவின் முக்கிய அறிவிப்புகள்!

August 26, 2026

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற இயற்கை வளங்கள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறைகளுக்கான

14-Seeman-Bharathiraja

இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தேனியில் மணிமண்டபம்: தமிழக அரசுக்கு சீமான் நெஞ்சார்ந்த நன்றி!

August 26, 2026

சென்னை: அரசின் முக்கிய அறிவிப்பு மறைந்த மூத்த இயக்குநர் பாரதிராஜாவின் சாதனைகளைப் போற்றும் வகையில், தேனியில் அவருக்கு திருவுருவச் சிலையுடன்

Tamil_News_lrg_4286539

விவசாயிகள் போராட்டத்தில் சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கத் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

August 26, 2026

சென்னை: தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரை விவசாயிகள் போராட்டத்தில் ஆபாசமாகப் பேசியதாக, தி.மு.க. எம்.எல்.ஏ.வும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி

dailythanthi_import_h-upload_2025_06_04_43951807-chennai-07

பரந்தூர் விமான நிலையம்: தி.மு.க.வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி!

August 26, 2026

சென்னை: வெளிப்படைத்தன்மை இல்லை பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரத்தில் தி.மு.க. வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்