வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளிடம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவேன் என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் உறுதி

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மத்தியில் நிலவும் கரிசனைகள் குறித்து ஜனாதிபதியுடன் நிச்சயமாகக் கலந்துரையாடுவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்திடம் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வேர்த் உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வேர்த்துக்கும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை (14) யாழில் உள்ள ஜெட்விங் ஹோட்டலில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியும் பொறுப்புக்கூறலும் தொடர்ந்து மறுக்கப்பட்டுவருவது குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்த பிரதிநிதிகள், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான உள்ளகப்பொறிமுறை எனக்கூறி நிறுவப்பட்டிருக்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்திறனற்ற நிலை மற்றும் அக்கட்டமைப்பின் மீதான தமது அவநம்பிக்கை குறித்தும் விளக்கமளித்தனர்.

‘நாம் கடந்த காலந்தொட்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அவசியமில்லை என்றும், அதன்மீது எமக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறிவந்திருக்கிறோம். அவ்வாறெனில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும், நீதியை வழங்குவதாகவும் வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எம்மைச் சந்தித்து, இதுபற்றி எமது நிலைப்பாட்டைக் கேட்டறிந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. மாறாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே அவர் தன்னிச்சையாக முன்னெடுக்கிறார். அவ்வாறிருக்கையில் முன்னைய ஜனாதிபதிகளிலிருந்து தற்போதைய ஜனாதிபதி வேறுபடுகிறார் எனக் கூறமுடியாது அல்லவா?’ என்றும் அவர்கள் உயர்ஸ்தானிகரிடம் கேள்வி எழுப்பினர்.

அதுமாத்திரமன்றி தென்னாபிரிக்காவில் வெற்றிகரமாக இயங்கிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை முன்மாதிரியாகக்கொண்டு இங்கும் அவ்வாறானதொரு ஆணைக்குழுவை நிறுவுவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டிய அவர்கள், தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இடம்பெற்ற சம்பவங்களை இருவேறுபடுத்திக் காண்பித்து, அப்பொறிமுறை இலங்கைக்குப் பொருத்தமானது அல்ல என்பதே தமது நிலைப்பாடு எனத் தெரிவித்தனர்.

இவற்றை செவிமடுத்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் கொண்டிருக்கும் கரிசனைகள் குறித்து தான் ஜனாதிபதியிடம் நிச்சயமாகக் கலந்துரையாடுவதாக வாக்குறுதியளித்தார்.

அத்தோடு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு இவ்வாறான கட்டமைப்புக்களுக்குப் பதிலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் எத்தகைய கட்டமைப்புக்கள் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் எனவும் அவர் வினவினார்.

அதற்குப் பதிலளித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், தாம் உள்ளகப்பொறிமுறைகள் மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவும், அவ்வாறு உள்ளகப்பொறிமுறைகள் நிறுவப்படும் பட்சத்தில், அவற்றின் சகல உறுப்பினர்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் அபிப்பிராயங்களைக் கருத்திற்கொண்டே நியமிக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

vi-1

2026 ஜப்பான் ஆசிய விளையாட்டு விழா; கிரிக்கெட்டில் வியாஸ்காந்த்!

September 14, 2026

ஜப்பானில் நடைபெறவுள்ள அய்ச்சி-நகோயா 2026 ஆசிய விளையாட்டு விழாவில் நடைபெறவுள்ள ஆடவர் மற்றும் மகளிர் ரி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றவுள்ள

rib

சபலெங்காவை வென்று சம்பியனான றிபெகினா

September 14, 2026

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில்இ உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான எலினா றிபெகினா சம்பியனானார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (13)

1200-675-27270261-thumbnail-16x9-ramesh

“பெற்ற மகனையே முறையாக வளர்க்காத மு.க. ஸ்டாலின், கட்சியை ஒழுங்காக நடத்துவார் என எதிர்பார்க்க முடியாது!” – அமைச்சர் ரமேஷ் சாடல்

September 14, 2026

திருச்சி: ஆர்ப்பாட்டங்களில் திமுகவினர் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசுவதே அக்கட்சியின் டி.என்.ஏ (DNA) என்றும், முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ மு.க. ஸ்டாலின்

1200-675-27622338-thumbnail-16x9-ministersrinath

“அஜித் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!” – அமைச்சர் ஸ்ரீநாத் நெகிழ்ச்சி

September 14, 2026

தூத்துக்குடி: லண்டனில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித் குமார் சந்திப்பு குறித்தும், சில்வர்ஸ்டோன் கார் பந்தயத் தொடக்க விழா

1200-675-25470070-thumbnail-16x9-admk-aspera

“இந்தியாவிற்கே வழிகாட்டியாக முதலமைச்சர் விஜய் திகழ்கிறார்!” – அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

September 14, 2026

வேலூர்: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு நேர்மையான முறையில் செயல்பட்டு வருவதாகவும், தொலைநோக்குச் சிந்தனையுடன் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அவர்

tvk-bus-2

சேலத்தில் தவெக கொடி நிறத்தில் புதிய அரசுப் பேருந்துகள்: போக்குவரத்துத்துறையின் நடவடிக்கையால் சர்ச்சை!

September 14, 2026

சேலம்: சேலம் மாவட்டத்தில் மக்கள் பயன்பாட்டிற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அரசுப் பேருந்துகளுக்கு ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடி

HSJq4ica8AAcl1E

அஜித் – விஜய் சந்திப்பு: தமிழ்நாட்டில் விரைவில் உலகத்தரமான ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

September 14, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித் குமார் இங்கிலாந்தில் நேரில் சந்தித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் விரைவில் உலகத்தரமான ‘மோட்டார்

27628648_anand

“தவெகவில் இணைய ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை!” – மதுராந்தகம் இடைத்தேர்தல் வேட்பாளர் மரகதம் குமரவேல் விளக்கம்

September 14, 2026

மதுராந்தகம்: தவெக தலைமையிலான ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ சார்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலின்

vinayagar (1)

ரூ. 25 லட்ச மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட காஞ்சி ஏலேல சிங்க விநாயகர்!

September 14, 2026

காஞ்சிபுரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய

elmore

செம்மணி மனித புதைகுழி அகழ்வை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் – நம்பகதன்மை மிக்க விசாரணை அவசியம் -பிரிட்டன்

September 14, 2026

செம்மணி மனித புதைகுழிகள் குறித்து சர்வதேசதராதரத்திலான நம்பகதன்மை மிக்க வெளிப்படையான விசாரணைகள் இடம்பெறவேண்டும் என இலங்கையிடம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதாக பிரிட்டன்

Shiranthi-Rajapaksa 1

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்காக பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா நிதி துஷ்பிரயோகம்: சிறாந்தி ராஜபக்ஷவிடம் எஃப்பிஐடி விசாரணை நடத்த தீர்மானம்

September 14, 2026

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டீ ஸ்கேனர் (CT scanner) இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதாகக் கூறி, தேசிய

Namal-750x422

விமானங்களை கொள்வனவு செய்வதில் நிதி மோசடி – நாமல் சந்தேகநபராக பெயரிடப்பட்டார்.

September 14, 2026

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பில் பொதுஜனபெரமுன