வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக நி.தவலோஜினி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் நேற்று (07.08.2026) ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளராகப் பணியாற்றிய கு.காஞ்சனா மத்திய அரசின் சேவைக்காக விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நி. தவலோஜினி நியமிக்கப்பட்டுள்ளார்.