வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் அரச நிலங்களின் மொத்த அளவு மாவட்ட ரீதியாக எவ்வளவு? – சாணக்கியன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரச நிலங்களின் மொத்த அளவு மாவட்ட ரீதியாக எவ்வளவு? தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலங்களின் அளவு, இடங்கள் மற்றும் திகதிகள் எவை? இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள நிலங்களின் அளவு எவ்வளவு? மற்றும் எஞ்சியுள்ள நிலங்களை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் காலவகாசம் என்ன என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள பின்னணியிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள கணிசமான அளவிலான பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் நிலங்கள் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன. பொதுமக்களின் காணிகள் இன்றளவில் விடுவிக்கப்படவில்லை.

தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் தேர்தல் விஞ்ஞாபனத்தில், இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதை விரைவுபடுத்துவதாகவும், பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீள்குடியேற்றத்திற்கு வசதி செய்வதாகவும் உறுதியளித்திருந்தது. எமது மக்களும் அந்த வாக்குறுதி மீது நம்பிக்கை கொண்டார்கள்.

பொதுமக்களின் நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதும், பொதுமக்கள் வாழும் பகுதிகளில் நீண்டகாலமாக இராணுவம் நிலைகொண்டிருப்பதும், சாதாரண சிவில் நிர்வாகத்தைத் தாமதப்படுத்துவதுடன், நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளையும் பலவீனப்படுத்துகிறது. உண்மையான தேசிய பாதுகாப்புத் தேவைகள் தவிர, இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு நிகரான அளவிற்கு இராணுவப் பரவலாக்கம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படுவதும், இராணுவமயமாக்கல் நீக்கப்படுவதும் நல்லிணக்கம், மீள்குடியேற்றம் மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றிற்கு அவசியமானவையாகும்.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் நான் முன்வைத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, மட்டக்களப்பில் இரண்டு இராணுவ முகாம்கள் விடுவிக்கப்பட்டதை நான் வரவேற்கிறேன். ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இருப்பினும் நிலங்கள் விடுவிக்கப்படும் வேகம் மந்தமாக இருப்பதற்கு எதிராகப் பாதிக்கப்பட்ட பல சமூகங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரச நிலங்களின் மொத்த அளவு மாவட்ட ரீதியாக எவ்வளவு? தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலங்களின் அளவு, இடங்கள் மற்றும் தேதிகள் எவை? இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள நிலங்களின் அளவு எவ்வளவு? மற்றும் எஞ்சியுள்ள நிலங்களை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் காலவகாசம் என்ன?

16 கிராம சேவகர் பிரிவுகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படாமலும், மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முற்றிலுமாக விடுவிக்கப்படாமலும் உள்ள வலிகாமம் வடக்கில், பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதை நிறைவு செய்வதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மயிலிட்டி மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பாகவும், மயிலிட்டி கணிக்கமாதா கோவில், வசந்தபுரம் மணம்பிராய் பிள்ளையார் கோவில், புனித செபஸ்தியான் தேவாலயம், மயிலிட்டி ரோமன் கத்தோலிக்க பாடசாலை மற்றும் வஸாவிலான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயம் ஆகியவற்றுக்கான அணுகுமுறையை மீண்டும் வழங்குவதற்கும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபை விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள், 551வது பிரிவு பகுதியில் உள்ள நிலங்கள், மற்றும் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயம், இரணைமடு சந்தி மற்றும் விவசாயத் திணைக்களம் ஆகியவற்றை பாதிக்கும் வகையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவில் எஞ்சியுள்ள 59 ஏக்கர் பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மயிலிட்டித் துறை பகுதியில் 700 குடும்பங்களுக்குச் சொந்தமான 556 ஏக்கர் காணிகள் இன்றளவில் விடுவிக்கப்படவில்லை. கலைமகள் பாடசாலைக்கு சொந்தமான மைதானம் விடுவிக்கப்படவில்லை. பலாலி தெற்கு, கிழக்கு, வடக்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் 300 குடும்பங்களுக்குச் சொந்தமான 556 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவில்லை.

கரைச்சி நூலகம் விஸ்தரிப்புக்கும் காணி விடுவிக்கப்படவில்லை. இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சொந்தமான காணி கேப்பாபிளவு பகுதியில் 59.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவில்லை.

கேப்பாப்பிலவு பகுதியில் உள்ளவர்களுக்கு மாற்று காணி வழங்கப்பட்டதாக குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. சீனியாமோட்டை பகுதியில் 44 பேருக்கு தற்காலிக காணிகளே வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் குரும்பைச்சிட்டி பகுதியில் இந்து மயானத்துக்குரிய காணி விடுவிக்கப்படவில்லை. ஆகவே இந்த கேள்விகளுக்கு விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன் என்றார்.

8

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு ‘சிக்கல்’ – லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

July 27, 2026

சென்னை: கடந்த 2015-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்த வைத்திலிங்கம், அடுக்குமாடி வீடு

55OGDDGBRNDMDLRPGLCJT6AH5Q

கேப் பிரெட்டன் (Cape Breton) தீ விபத்து நடந்த இடத்தில் சடலம் மீட்பு; காவல்துறையினர் தீவிர விசாரணை

July 27, 2026

மெக்ஆடம்ஸ் ஏரி பகுதியில் நடந்த உயிரிழப்பை ஏற்படுத்திய தீ விபத்து குறித்து கேப் பிரெட்டன் பிராந்திய போலீசார் விசாரணை நடத்தி

7

அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்!

July 27, 2026

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வரும் பிரியா, தனக்கு சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம்

6

ஆட்சிக்கு வந்த இரண்டரை மாதங்களில் ரூ.20,881 கோடி கடன்- தவெக அரசை விளாசிய கீதாஜீவன்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்

ED5JQPYN5NF6XDCAHMETPYHFMM

காணாமல் போன 23 வயது டொராண்டோ பெண்ணைத் தேட கட்டளை மையம் (Command Post) அமைப்பு

July 27, 2026

டிக்சன் மற்றும் மார்ட்டின் குரோவ் வீதிகளுக்கு அருகே கடைசியாகக் காணப்பட்ட 23 வயது பெண்ணை டொராண்டோ போலீசார் தேடி வருகின்றனர்.

AAFNGBSIVY7P5CLUU3MZCILP4M

ஆஜாக்ஸ் பூங்காவில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியில் காரை ஓட்டிச் சென்றதாக நபர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு

July 27, 2026

இம்மாத தொடக்கத்தில், ஆஜாக்ஸ் (Ajax) பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியிலும் நடைபாதைகளிலும் காரை ஆபத்தான முறையில்

XUP2KI6NKFC6BB6QNVCW5Y4UCQ

அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு; அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

July 27, 2026

அமெரிக்க தூதரகத்திற்கு அருகே அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்திற்கு

Rev.ASirisumana-263x263

யுத்த காலத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க காவி உடையும் பிக்குகளின் தியாகமும் முக்கிய பங்கு வகித்தது – அகலகட சிறிசுமண தேரர்

July 27, 2026

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பௌத்த பிக்குகளும், காவி உடையும்

5

காமன்வெல்த் போட்டியில் சாதித்த தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி!

July 27, 2026

ஹைதராபாத்: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி

missing per fa

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு: யாழ்ப்பாணத்தில் ஓகஸ்ட் 30இல் நடத்த ஏற்பாடு!

July 27, 2026

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட சர்வதேச மாநாடு ஒன்றை

jaffna court

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: “சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது” – எதிர்மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கடும் வாதம்!

July 27, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கில், “குற்றவாளிகளோ அல்லது சந்தேகநபர்களோ சட்டத்தை ஆயுதமாகப்

Screenshot

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகே திடீர் தீ பரவல் – பெரும் அனர்த்தம் தவிர்ப்பு; பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்வி!

July 27, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும்