யாழ்.மத்திய கல்லூரிக்கு எதிரான வடக்கின் சமர்: வெற்றியை நோக்கிச் செல்லும் சென். ஜோன்ஸ்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு எதிரான 119ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் உதயனன் அபிஜோய்ஷாந்த் குவித்த அபார சதம், சென். ஜோன்ஸ் கல்லூரியை வெற்றியை நோக்கி நகரவைத்துள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இப் போட்டியில் 248 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடியில் 6 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று பெரும் இக்கட்டான நிலையில் இருக்கிறது.

இந் நிலையில் சென். ஜோன்ஸ் கல்லூரி தனது 41ஆவது வெற்றியைப் பதிவு செய்யும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 24 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த சென். ஜோன்ஸ் கல்லூரி இரண்டாம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை பூஜ்ஜியத்திலிருந்து தொடர்ந்தது.

சென். ஜோன்ஸ் கல்லூரியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அதன் முதல் 2 விக்கெட்கள் 19 ஓட்டங்களுக்கு சரிந்தன.

எனினும் உதயனன் அபிஜோய்ஷாந்த் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இரண்டு பெறுமதியான இணைப்பாட்டங்களை ஏற்படுத்தியதுடன் அபார சதம் ஒன்றையும் குவித்து சென். ஜோன்ஸ் அணியை பலமான நிலையில் இட்டார்.

ஜீவா அபிசானுடன் 3ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களையும் அணித் தலைவர் முர்பின் ரெண்டியோவுடன் 4ஆவது விக்கெட்டில் 88 ஓட்டங்களையும் அபிஜோய்ஷாந்த் பகிர்ந்தார்.

105 பந்துகளை எதிர்கொண்ட அபிஜோய்ஷாந்த் 15 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 121 ஓட்டங்களைக் குவித்தார்.

அபிசான் 18 ஓட்டங்களையும் முர்பின் ரெண்டியோ 34 ஓட்டங்களையும் சிவகுமார் ஜோன் நதேனியா 19 ஓட்டங்களையும் பெற்றனர்.

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களைக் கைப்பற்றிய முரளி திசோன் 2ஆவது இன்னிங்ஸில் 78 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களைக் கைப்பற்றி 10 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.

வெலன்டைன் ஹெரிஸ் 62 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஜெயசீலன் ஜெனோஷன் (20), கபிலன் அமலன் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 44 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

கபிலன் அமலன் 44 ஓட்டங்களைப் பெற்றார்.

முரளி திசோன் 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.

இன்று போட்டியின் கடைசி நாளாகும்.

எண்ணிக்கை சுருக்கம்

சென். ஜோன்ஸ் கல்லூரி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 119 (சற்குணராஜா வினுக்ஷன் 22, முர்பின் ரெண்டியோ 19, முரளி திசோன் 39 – 5 விக்., வெலன்டைன் ஹெரிஸ் 37 – 3 விக்.)

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 95 (அன்ரனிரேஷான் அபிஷேக் 23, நாகராசா சஜித் 16, கனேசமூர்த்தி கௌசிகன் 41 – 5 விக்., முர்பின் ரெண்டியோ 19 – 3 விக்.)

சென். ஜோன்ஸ் கல்லூரி 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 223 (உதயனன் அபிஜோய்ஷாந்த் 122, முர்பின் ரெண்டியோ 34, சிவகுமார் ஜோன் நதேனியா 19, ஜீவா அபிசான் 18, முரளி திசோன் 78 – 7 விக்., வெலன்டைன் ஹெரிஸ் 62 – 3 விக்.),

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 2ஆவது இன்: 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 120 – 6 விக். (கபிலன் அமலன் 44, முரளி திசோன் 22 ஆ.இ., ஜெயசீலன் ஜெனோஷன் 20, புவணேஸ்வரன் கிஷாந்த் 3 – 1 விக், உதயனன் அபிஜோய்ஷாந்த் 3 – 1 விக்.)

war

கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

March 7, 2026

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட கப்​பல்​களை தகர்த்​த​தாக​வும், கடந்த 72 மணி நேரத்​தில்

mur

முதியவர் அடித்துக் கொலை: ஒருவர் கைது!

March 7, 2026

மின்னேரியா – ரொட்டவெவ பகுதியில், தனது சகோதரியைக் காப்பாற்றச் சென்ற முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்

wate

கடலில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இருவர் மீட்பு!

March 7, 2026

ஹிக்கடுவை துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடலில் நீராடச் சென்று, கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

ko

கோடாவுடன் இருவர் கைது!

March 7, 2026

கட்டுநாயக்க – தடுகங்ஓயா பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை

arrest

அக்குரேகொட இரட்டைக் கொலைக்கு உதவிய மேலும் இருவர் கைது!

March 7, 2026

தலங்கமை – அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு

acc

பிரதான வீதியில் லொறி மோதி பாதசாரி உயிரிழப்பு

March 7, 2026

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்

t

நிபந்தனையற்ற சரணாகதி தவிர ஈரானுக்கு வழியில்லை – ட்ரம்ப் எச்சரிக்கை

March 7, 2026

ஈரானுடனான போர் தீவிரமடைந்த நிலையில், நிபந்தனையற்ற சரணாகதி தவிர வேறு எந்த ஒப்பந்தத்திற்கும் இடமில்லை என்று அமெரிக்க ஜனனாதிபதி டொனால்ட்

ir

இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்

March 7, 2026

ஐக்கிய அமெரிக்காவானது தாம் இவ்வாரம் மூழ்கடித்த ஈரானிய போர்க்கப்பலில் உயிர் தப்பியவர்களையும் இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள இரண்டாவது ஈரானியக் கப்பலின் மாலுமிகளையும்

sa

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அடக்குமுறை நடந்திருந்தால் ஆதாரத்தை முன்வையுங்கள்!

March 7, 2026

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், அதன் மூலம் ஏதேனும் அடக்குமுறைகள் இடம்பெற்றிருந்தால் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு பிரதமர்ஹரிணி

au

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் சடலமாக மீட்பு

March 7, 2026

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள லொட்ரோப் பகுதியில், உள்ள வீட்டில் இலங்கைப் பெண் உட்பட தம்பதி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள்

drone

நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பு

March 7, 2026

ட்ரோன்களை (Drone)பயன்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான உணர்திறன் மிக்க தகவல்களைச் சேகரித்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைத்

ba

பாகிஸ்தான் தொடரிலிருந்து பங்களாதேஷ் முக்கிய வீரர்கள் விலகல்?

March 7, 2026

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணியை அந்நாட்டு