யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தராக பதவியேற்றார் பேராசிரியர் வேல்நம்பி

உயர்பட்டப் படிப்புகள் பீடப் பீடாதிப தியாக விளங்கிய சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி திருநாவுக்கரசு வேல்நம்பி (B.Com, M.A. யாழ்ப்பாணம் M., Ph.D சென்னை) இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 12 ஆவது துணைவேந்தராகப் பதவி ஏற்றார்.

பேராசிரியர் வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் B.Com பட்டப்படிப்பை கற்று முடித்து பின் வர்த்தகத்துறையில் உதவி விரிவுரையாளராக இணைந்து பல்வேறு படிநிலைகளைக் கடந்து இன்று சிரேஷ்ட இருக்கைப் பேராசிரியராக விளங்குகிறார்.

அவர் தனது சேவைக்காலத்தில் வணிகத்துறைத் தலைவராகவும், மூன்று முறை முகாமைத்துவ – வணிக பீடாதிபதியாகவும், முகாமைத்துவ முதுமாணி இணைப்பாளராகவும், பேரவை உறுப்பினராகவும், பட்டப்பின் படிப்புப் பீடப் பீடாதிபதியாகவும் கல்வி நிர்வாகத்தில் ஈடுபட்டிருந்தார். கற்பித்தலிலும் ஆராய்ச்சியிலும் வெளியீடுகளிலும் கல்வி நிர்வாகத்திலும் மாணவர் நலச் சேவைகளிலும் நீண்ட காலம் நற்பணி புரிந்துள்ளார்.

அவர் முகாமைத்துவ வணிக பீடத்தை ஐந்து துறைகள் கொண்ட பீடமாக வளர்த்தெடுத்ததுடன் சுற்றுலாக் கற்கைநெறியையும் வளர்த்தெடுத்தார். பெரும் எண்ணிக்கையான விரிவுரையாளர் பதவிகளைப் பெற்றுக் கொண்டதும், பீடத்திற்கான புதிய கட்டடத் தொகுதியைத் திருநெல்வேலி கலாசாலை வீதியில் அமைத்ததும், சர்வதேச முகாமைத்துவ-வணிக மாநாடுகளை நடாத்தியதும் பெருமைக்குரிய விடயங்களாகும். மேலும் பட்டப்படிப்புப் பாடவிதானங்களை மேம்படுத்தியதும் முகாமைத்துவ M.A கற்கை நெறிகளை முன்னோடியாக நடாத்தியதும், பீட விரிவுரையாளர்களின் மேற்படிப்புக் கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் அவர்களின் தொழில்சார் வளர்ச்சிக்கும் உறுதுணையாக விளங்கியதும் குறிப்பிடத்தக்கன.

பேராசிரியர் வேல்நம்பி அவர்கள் தனது பதவிநிலை விடுமுறை காலத்தில் (Sabbatical leave) கிழக்கு இலங்கைப் பல்கலைக்கழகம் மட்டக்களப்பு, திருகோணமலை வளாகம், வவுனியா பல்கலை க்கழகம் ஆகியவற்றில் வருகைப் பேராசிரியராகக் கடமை புரிந்துள்ளார். மேலும் புதுச்சேரிப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களான மதுரை காமராஜர், திருச்சி பாரதிதாசன். கோயம்புத்தூர் பாரதியார், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார். திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக்கழகம், அண்ணாமலை சென்னைப் பல்கலைக்கழகங்களுடன் நெருக்கமான கல்வித் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார். அவருக்குத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் அவரின் துறை சார்ந்த கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த கௌரவம் உண்டு. அவர் பல ஆய்வு நூல்களையும், பாடநூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும், பொதுவான கட்டுரைகளையும் அதிகளவில் எழுதியுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் முப்பது வருடங்களுக்கு மேல் விரிவுரையாளராகக் கடமை யாற்றிய பேராசிரியர் அவர்கள் பெரும் எண்ணிக்கையான மாணவர் அணியினரைச் சிறப்பாகக் கற்பித்தார். அவரின் மாணவர்கள் இன்று உயர் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பேராசிரியர் அவர்கள் தனது பாடசாலைக் காலத்திலேயே தமிழில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் தனது பாடசாலைக் கல்வியை மல்லாவி மத்திய கல்லூரி, புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரிகளில் கற்றறிந்தார். பேராசிரியர் அவர்கள் தமிழில் சிறந்த புலமை உடையவர். வணிகப் பட்டதாரியாக விளங்கியபோதும் தமிழாய்வில் ஈடுபட்டு முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார். அவர் சிறந்த பேச்சாளர், பட்டிமன்றங்கள், விவாத அரங்குகளில் பங்கு கொண்டு மக்களைக் கவரும் வகையில் பேச்சாற்றல் கொண்டவர். காலம், இடம், பொருள் அறிந்து பேசும் திறன் மிக்கவர். கூட்டங்களுக்குத் தலைமை தாங்கும் தகைமை உடையவர், சமூகத்தால் நன்கு அறியப்பட்டவர். அவரது பாடசாலை நண்பர்களுடனும் பல்கலைக்கழக சகபாடிகளுடனும் சமூகத்துடனும் நெருங்கிய உறவு கொண்டவராக விளங்குகின்றார்.

sun

சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய 29 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது

March 25, 2026

நாட்டுக்குள் சட்டவிரோத போதைப்பொருட்களை கடத்தி வந்த சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய 29 முக்கிய போதைப்பொருள் குற்றவாளிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது

rus

948 ட்ரோன்களால் 24 மணித்தியாலங்களில் உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல்

March 25, 2026

உக்ரேன் மீதான போர் ஆரம்பமாகி நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், முன்னொருபோதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 948 ட்ரோன்களைப்

uni

சிறுவர்களை இலக்கு வைத்து ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு கடிதம்!

March 25, 2026

இஸ்ரேலிய பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்களை இலக்கு வைத்து ஈரான் நடத்தி வரும் கண்மூடித்தனமான ஏவுகணைத் தாக்குதல்களைப் பகிரங்கமாகக் கண்டிக்குமாறு ஐக்கிய

Baby death

தனியார் காணியொன்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு

March 25, 2026

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத்

ci

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

March 25, 2026

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, வரி செலுத்தாமல் விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற சுமார் 15 மில்லியன்

a1

உருவாக்க நிலை செயற்கை நுண்ணறிவால் பெண்கள் அதிகம் பாதிப்பு?

March 25, 2026

உருவாக்கநிலை செயற்கை நுண்ணறிவால் (Generative AI) ஆண்களை விட பெண்கள் அதிக பணியிடத்து அபாயத்தை எதிர்கொன்கின்றனர் என்பதை சர்வதேச தொழிலாளர்

mis

மலைப்பாம்புடன் அழகிப் போட்டியில் நடனமாடிய இளம் பெண்!

March 25, 2026

சமூக வலைத்தளங்களில் வைரலாகிய காணொளி ஒன்றின் அடிப்படையில், பாதுகாக்கப்பட்ட உயிரினமான மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண் ஒருவரை வனஜீவராசிகள் பாதுகாப்பு

pothu

சுகாதாரத் தொழிலாளி பொத்துவில் முதல் கிழக்கு ஆளுநர் அலுவலகம் வரை கவனயீர்ப்பு நடைபவனி

March 25, 2026

பிரதேச சபை செயலாளரின் மனித நேயக் கவனத்துக்கு கொண்டுவரப்படவேண்டிய விடயமாக, 2025ஆம் ஆண்டு 7, 8 மற்றும் 9வது மாதங்களில்

5

சுவிஸ் தூதுவருடன் இளைஞர் விவகார அமைச்சர் விசேட சந்திப்பு

March 25, 2026

இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிரி வோல்ட் (Dr. Siri Walt) மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

heat

மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கடும் வெப்பநிலை

March 25, 2026

நாட்டில் மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கடும் வெப்பமான வானிலை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என

6

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட தம்பதியினரின் உடல் எச்சங்கள்!

March 25, 2026

கோவிட் காலத்தில் (ஆறு ஆண்டுகளுக்கு முன்பு) காணாமல் போன தம்பதியினரின் உடல்கள், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லம்பிட்டிய, கம்பிபிட்டிய வத்தை

semma

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி குறித்து ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி முக்கிய ஆலோசனை

March 25, 2026

செம்மணி மனித புதைகுழி அகழ்வு குறித்து இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி யாழ்ப்பாணத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். ஐ.நாவின் நிரந்தரவதிவிடப் பிரதிநிதி