யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட பெண் பிரான்ஸில் துணை மேயரானார்

இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை பூர்வீகத்தைக்கொண்ட ஆதித்யா ஆனந்தராசா துணை மேயராக தனது பதவிப் பொறுப்புகளை திங்கட்கிழமை ( 23 ) அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த இவரின் இந்த வளர்ச்சி, வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட ஆதித்யா ஆனந்தராசா, 19 வயதிலேயே நகர மன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர், தொடர்ந்து பொதுச் சேவையில் ஈடுபட்டு, மக்களுடன் நெருக்கமாக செயல்பட்டதன் பலனாக தனது 25 ஆவது வயதில் துணை மேயர் பதவியை அடைந்துள்ளார்.

அவரது இந்த முன்னேற்றம், இளம் தலைமுறையினருக்கு அரசியல் மற்றும் பொதுச் சேவையில் ஈடுபட ஊக்கமளிக்கும் சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.

மேலும், பல்துறை சமூகத்துடன் இணைந்து செயல்படுவதிலும், உள்ளூர் நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர் உதவித் திட்டம் தொடர்பில் ஒன்றாரியோவில் எதிர்க்கட்சிகள் அழுத்தம்

ஒன்டாரியோ மாணவர் உதவித் திட்டத்தில் (OSAP) ஃபோர்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ள சர்ச்சைக்குரிய மாற்றங்களை திரும்பப் பெறக் கோரி, எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளன.

கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பிறகு, குயின்ஸ் பார்க் (Queen’s Park) சட்டமன்றம் இன்று மீண்டும் கூடிய நிலையில் இப்போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

மாணவர்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் (Grants) பெருமளவு குறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கடன்கள் (Loans) அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 85 சதவீதமாக இருந்த மானிய உதவி, இனி 25 சதவீதமாக குறைக்கப்படும். மீதமுள்ள 75 சதவீத நிதியை மாணவர்கள் கடனாகவே பெற முடியும். ஏழு ஆண்டுகளாக அமலில் இருந்த கல்விக் கட்டண முடக்கம் (Tuition freeze) நீக்கப்பட்டு, கட்டண உயர்வுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயகக் கட்சி (NDP) மற்றும் பசுமைக் கட்சி (Greens) ஆகியன இன்று காலை இது தொடர்பான தீர்மானங்களை முன்வைத்தன: இந்த மாற்றங்களை உடனடியாக ரத்து செய்து, பழைய முறையையே தொடர வேண்டும் என வலியுறுத்துகிறது.

மாணவர் கடன்களுக்கான வட்டியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய மாணவர்களுக்குத் திரும்பச் செலுத்தத் தேவையற்ற மானியங்களை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் கோருகிறது. இளைஞர் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள சூழலில், மாணவர்கள் பெரும் கடன் சுமையுடன் பட்டப்படிப்பை முடிக்க நாங்கள் விரும்பவில்லை,” என பசுமைக் கட்சித் தலைவர் மைக் ஷ்ரைனர் தெரிவித்துள்ளார்.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் துறை அமைச்சர் நோலன் குவின் (Nolan Quinn), தற்போதைய OSAP நடைமுறை “நீடிக்க முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அடுத்த நான்கு ஆண்டுகளில் கல்வித் துறைக்காக மேலதிகமாக 6.4 பில்லியன் டொலா் நிதி ஒதுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த மாற்றங்கள் உயர்கல்வியை எட்டாக்கனியாக்கும் என்றும், வாழ்நாள் முழுவதும் தீர்க்க முடியாத கடன் சுமைக்கு மாணவர்களைத் தள்ளும் என்றும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை நடைபெறவுள்ள “எதிர்க்கட்சிகள் தினத்தில்”, NDP மற்றும் லிபரல் கட்சிகள் இந்த விவகாரத்தை மீண்டும் சட்டமன்றத்தில் எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

pro

மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

March 24, 2026

இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி பொத்துவில் கனகர் கிராம மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (23) முன்னெடுக்கப்பட்டது

vet

மேஜர் ஜெனரல் சில்வா மற்றும் ஆளுநர் வேதநாயகன் விசேட சந்திப்பு

March 24, 2026

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா மற்றும் வட மாகாண ஆளுநர் ந.

arj

அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராக முறைப்பாடு!

March 24, 2026

கிளிநொச்சி பகுதியில் வாழும் மலையக மக்களை கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இழிவாக பேசியதாகக் கூறப்படும் அர்ச்சுனா எம்.பி.க்கு

Gold

ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்த தங்க விலை

March 24, 2026

நாட்டில் இன்று (24) தங்கத்தின் விலை மூன்று முறை அதிகரித்துள்ளதாக இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி,

xa

அமெரிக்க விமான நிலையங்களில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு: ஒரு கனடியராக நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால் தெரிந்து கொள்ள வேண்டியவை

March 24, 2026

அமெரிக்க அரசாங்கத்தின் பகுதி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ((TSA) அதிகாரிகளுக்கு உதவியாக குடிவரவு

his

ஹெஸ்புல்லாவுடன் தொடர்பு: வான்கூவர் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை

March 24, 2026

ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பிற்கு நிதி வழங்கும் 100 மில்லியன் டொலர் வலையமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி வான்கூவரைச் சேர்ந்த

nalinda-jayatissa_2025.01

எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

March 24, 2026

தற்போதைய இக்கட்டான சூழலில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்வதற்கு விலை சூத்திரம் பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த

ceb

மீண்டும் மின்வெட்டு

March 24, 2026

மின்சார உற்பத்திக்காக தேவையான எரிபொருள் கிடைக்கப்பெறுவதனால் இதுவரை மின்வெட்டு மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டு

rea

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற முறைமைக்கு எதிர்ப்பு; ஆசிரியர்கள் போராட்டம்

March 24, 2026

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி கடந்த 8

phil

எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் நாடு

March 24, 2026

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் மோதலைத் தொடர்ந்து, தேசிய அளவிலான எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த உலகின் முதல் நாடாக

ca

கனடாவுக்கு அனுப்புவதாக நடந்த பாரிய நிதி மோசடி

March 24, 2026

முழு குடும்பத்தையும் கனடாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஒரு கோடியே 58 லட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ்,

fi

அமெரிக்காவில் நீதிமன்றக் கட்டிடத்தில் தீ விபத்து

March 24, 2026

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணம், பிளாய்ட் கவுண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டடத்தில் திங்கள்கிழமை (23) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.