மேற்கு ஆசியாவில் போர் தொடரும் – ஈரான் திட்டவட்டம்

மேற்கு ஆசியாவில் மோதல் 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும் போர் தொடரும் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் மூத்த உதவியாளர் முகமது மொக்பர்,

ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. தேவைப்படும் வரை மத்திய கிழக்கில் போரைத் தொடருவோம் என்று அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவம் அமெரிக்காவுக்கு எதிராக 17 ஆவது அலை தாக்குதல்களைத் தொடங்கியதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டுள்ளது.

புதன்கிழமையன்று ‘ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4’ தாக்குதல்களை அறிவித்த ஈரான் இஸ்லாமிய புரட்சிகர இராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறை, இஸ்ரேல் – அமெரிக்க கூட்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு, தங்கள் இராணுவம் அமெரிக்க இராணுவ தளங்கள் மீது 230 இற்கும் மேற்பட்ட தாக்குதல் ட்ரோன்களை ஏவியதாகக் கூறியது.

ஈரானிய பதிலடித் தாக்குதல்களில் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும், ஈரானின் தாக்குதலில் பஹ்ரைனில் உள்ள ஒரு பெரிய அமெரிக்க விமானத் தளம் முடக்கியுள்ளது. ஈரான் ராணுவத்தின் தகவல்களின்படி, போரின் முதல் இரண்டு நாள்களில் பல்வேறு அமெரிக்க தளங்களில் உள்ள அமெரிக்க படைகளில் 680 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் 51 ஆவது பிரிவின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆட்சியின் ஆக்கிரமிப்புச் செயல்களுக்கு எதிராக தன்னைத் தற்காத்துக் கொள்ள ஈரானுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

டெஹ்ரானின் இமாம் கோமெய்னி பிரார்த்தனை மைதானத்தில் நடைபெறும் நிகழ்வில் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு ஈரானியர்கள் பிரியாவிடை அளிப்பார்கள் என்றும் ஈரானின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிகழ்வு 3 நாட்கள் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்

WhatsApp Image 2026-03-05 at 12.42.39

கனடாவின் பிராம்டன் நகரமும் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது!

March 5, 2026

பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில்

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து