மூன்றாம் உலகப் போரை ரஷ்ய ஜனாதிபதி தொடங்கிவிட்டார்! – உக்ரைன் ஜனாதிபதி

மூன்றாம் உலகப் போரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தொடங்கியது. இன்றுடன் போர் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதை முன்னிட்டு பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு தான் அளித்த பேட்டியின் சுருக்கத்தை, ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வான் பாதுகாப்பு என்பது இன்று மிகவும் சவாலான பிரச்சினையாக உள்ளது. துரதிருஷ்டவசமாக, வான் பாதுகாப்பு அமைப்புகளை நாங்களே தயாரிக்க அனுமதிக்கும் உரிமங்களை எங்கள் நட்பு நாடுகள் எங்களுக்கு வழங்கவில்லை. குறைந்தபட்சம் ஏற்கெனவே உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகளை தயாரிக்க வேண்டும். இதுவரை நாங்கள் அதில் வெற்றி பெறவில்லை.

இந்தப் போரில் உக்ரைனை வலிமையாக்க வேண்டும் என்றால், எங்கள் வான் பரப்பை மூட வேண்டும், பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும், பொருளாதாரம் செயல்பட வேண்டும், பணப்புழக்கம் இருக்க வேண்டும், வரிகள் மூலம் கிடைக்கும் பணம் இராணுவத்துக்குச் செலவிடப்பட வேண்டும். இந்த வழியில்தான் நாங்கள் எங்கள் இராணுவத்தை பலப்படுத்துகிறோம். துரதிருஷ்டவசமாக இது இன்னும் நடக்கவில்லை. ஏவுகணைகளுக்கான உரிமங்களாவது எங்களுக்குத் தேவை.

மூன்றாம் உலகப் போரைப் பற்றி பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. புடின் அதை ஏற்கெனவே தொடங்கிவிட்டார் என்றே நான் நம்புகிறேன். கேள்வி என்னவென்றால், அவர் எவ்வளவு நிலப்பரப்பை கைப்பற்ற முடியும் என்பதும் அவரை தடுப்பது எப்படி என்பதும்தான். ரஷ்யா வெற்றி பெறுவதை தடுக்க வேண்டும். ஏனெனில், ரஷ்யா தனது சொந்த உலகத்தை மற்றவர்கள் மீது திணிக்கிறது. மக்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே தேர்வு செய்வதை மாற்றுகிறது. அதனால்தான், புடின் மூன்றாம் உலகப் போரை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக நான் நம்புகிறேன்.

இது பரந்த, முழு அளவிலான மூன்றாம் உலகப் போராக மாறுவதை நாங்கள்தான் தடுத்துக் கொண்டிருக்கிறோம். புடினை தடுக்கும் புறக்காவல் நிலையமாக உக்ரைன் இன்று உள்ளது.

இன்று, ஐரோப்பா எங்களுக்கு நிதி உதவி அளிக்கிறது. அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அமெரிக்காவிடம் இருந்து PURL என்ற வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் திட்டத்துக்கு ஐரோப்பா நிதி உதவி அளிக்கிறது. ஆனால், இது போதுமானதா என்றால், நான் மாறுபடுகிறேன்.

ஒரு நாட்டுக்கு கணிசமான நிதியை ஒதுக்குவதால், போதுமான அளவு நிதி உதவியை அளிப்பதாகக் கூறும் நாடுகள் உள்ளன. மிகக் குறைவாகனே நிதி ஒதுக்கும் நாடுகளும் உள்ளன. உதவியை தடுப்பவர்களும் இருக்கிறார்கள். எங்களுக்கு தீங்கு விளைப்பவர்களைவிட இவர்கள் மேலானவர்கள்.

ஒட்டுமொத்த அளவில், வழங்கப்படும் நிதி உதவி போதுமானதா என்றால் இல்லை என்பதுதான் எனது பதில், ஆனால், ஐரோப்பாவைப் பொறுத்தவரை அது உக்ரைனுக்கும் உக்ரைன் மக்களுக்கும் ஆதரவாக இருந்து உதவி வருகிறது. ஆனால், எங்களுக்கு இன்னும் அதிக தேவை உள்ளது. ஏனெனில், ரஷ்யா அளவுக்கு எங்களிடம் ஆயுதங்கள் இல்லை.

இராணுவ வீரர்கள் குறித்து நாம் பேசும்போது, ஆட்சேர்ப்புக்குப் பதிலாக ஒப்பந்தங்களுக்கு மாறும்போது ஐரோப்பா எங்களுக்கு உதவ முடியும். புடின் இதைத்தான் செய்கிறார். அவர் படையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒப்பந்த அடிப்படையில் பணம் செலுத்துகிறார். நாங்களும் இதைச் செய்ய விரும்புகிறோம். ஆனால், எங்களிடம் போதுமான அளவு நிதி இல்லை. இதற்கு ஐரோப்பியர்கள் உதவ முடியும். இதற்கு இன்னும் ஐரோப்பியர்கள் இன்னும் நிதி உதவி அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

asar

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணி மீட்பு!

March 4, 2026

தனிநபர் ஒருவரால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரச காணியை நீதிமன்ற நடவடிக்கை மூலம் மீட்டுத் தந்தமைக்காக, வாகரை பிரதேச செயலாளருக்கு வாகரை

ship

இலங்கையில் ஈரானிய போர்க்கப்பலை நாமே தாக்கினோம் – அமெரிக்கா

March 4, 2026

அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலால் இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதன் விளைவாகவே இலங்கைக் கடற்படை ஈரானிய மாலுமிகளை

tab

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் மண்டபத்தில் பறிமுதல்

March 4, 2026

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும்

Death-2

பண்டாரவளை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

March 4, 2026

பண்டாரவளை, கடுகஹ லெவ்வெதென்ன பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து புதன்கிழமை (4) அன்று சடலமொன்று மீட்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார்

Rad

ஒரு பெண் சடலமாகி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு இல்லை?

March 4, 2026

டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியொருவரின் உடல் பிணவறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமானது, இந்த நாட்டில் உயிரிழந்த

nia

நயாகரா பிராந்திய காவல்துறையால் 9-1-1 தொழில்நுட்பம் புதுப்பிப்பு!

March 4, 2026

நயாகரா பிராந்திய காவல்துறை சேவை வழங்குநர்கள் அடுத்த 9-1-1 (NG9-1-1) தலைமுறைக்கு மேம்படுத்த வேண்டும் என்பதற்கிணங்க, 9-1-1 தொழில்நுட்பத்தை புதுப்பித்து

ford

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள்திட்டம் மிக விரைவில் நிறைவு பெறும் – ஒன்டாரியோ முதல்வர்

March 4, 2026

ஒன்டாரியோ மாகாண நெடுஞ்சாலைகளுடன் Ring of Fire பகுதியை இணைக்கும் சாலைகள் திட்டமிட்ட கால அட்டவணையை விட முன்பே நிறைவு

ne

“ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்” – இஸ்‌ரேல் எச்சரிக்கை

March 4, 2026

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்‌ரேல் எச்சரிக்கை

boa

வலி. வடக்கு ஊரணி மீனவர்கள் இருவர் காணமற் போயுள்ளமை குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை

March 4, 2026

யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம்

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்