முத்துக்குமாரசுவாமி; தமிழ்த்தேசிய போராட்டத்தின் ஆரம்பகர்த்தா

தமிழ்த்தேசிய போராட்டத்தின் ஆரம்பகர்த்தா முத்துக்குமாரசுவாமி என அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஈழ விடுதலை போராடடத்தின் ஆரம்ப கார்தாவான முத்து குமார சுவாமி அமெரிக்காவில் மரணமடைத்துள்ளார். அவரது நினைவாக எழுதிய கட்டுரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைமைச் செயலகத்தில் பணியாற்றியவருமான சட்டத்தரணி தம்பித்துரை முத்துகுமாரசுவாமி கடந்த 20ம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் காலமானார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த மாவட்ட நீதிபதி தம்பித்துரையின் மகனான இவர் பதின்ம வயதிலிருந்தே விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். நீண்ட காலம் சிறை வாசமும் அனுபவித்தார்.

பதின்ம வயதில் விடுதலைப் போராட்ட செயற்பாட்டில் பங்கேற்று இறக்கும் வரை அதற்காக கடுமையாக உழைத்தார். அமெரிக்காவில் நாடு கடந்த தமிமீழ அரசின் ஆலோசகராகவும் கடமையாற்றிய இவர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சுடன் நெருங்கிய தொடர்பிலும் இருந்தார்.

தமிழ்த் தேசிய அரசியலின் நியாயப்பாடுகளை, துயரங்களை வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கும் சொல்வதில் இவரின் பங்கு அளப்பரியதாக இருந்தது.

குமார் என பெரியவர்களினாலும் நண்பர்களினாலும் அழைக்கப்படுகின்ற முத்துக்குமாரசுவாமி தலைமைத்துவ ஆற்றலிலும் ஆங்கிலப் புலமையிலும் கைதேர்ந்தவராக இருந்தார். இறக்கும் வரை இக்கட்டுரையாளருடன் தொடர்பில் இருந்த குமாரின் இழப்பு தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை பேரிழப்பாகும்” என தெரிவித்துள்ளார்.

மலையக மக்களுக்கு முகவரி கொடுத்தவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் : இ.தொ.கா உப தலைவர் விடுத்த சவால்

முடிந்தால் போராளிகளின் பெயர்களால் இரத்தினபுரியிலும், பதுளையிலும் தொழிற்பயிற்சி நிலையங்களை அமைத்து காட்டுங்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சௌமிய மூர்த்தி தொண்டமான் தொடர்பாக எழுந்த சர்ச்சையையடுத்து இன்று(24.1.2026) ஹற்றனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று நாடாளுமன்றத்தில் இரண்டு ஆளும் கட்சி உறுப்பினர்களான அம்பிகா சாமுவேல் அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பும் தாங்களுக்குள்ளேயே கேள்வி கேட்டு தாங்களுக்குள்ளேயே பதிலளித்த ஒரு வேடிக்கையான விடயம் காணக்கூடியதாக இருந்தது.

அவர்களின் கூற்றுப்படி சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பெயர் சம்பந்தமாகவும் அதற்கு ஒதுக்கப்படுகின்ற நிதி சம்பந்தமாகவும் பேசப்பட்டது.

இந்த நாட்டிலே பல சேவை செய்த தலைவர்கள் இருக்கிறார்கள்.அவர்களின் பெயரிலே மன்றங்கள் இருக்கின்றன.இது ஒரு வழமையான பழைமையான விடயம்.அது இந்த நாட்டில் மற்றுமல்ல உலகலாவிய ரீதியில் அது இருக்கின்றது.

மலையகத்தில் சௌமிய மூர்த்தி தொண்டமான் என்பவர் இந்த மக்களுக்கு முகவரி கொடுத்தவர் உரிமையை மீட்டவர்,பல போராட்டங்களை நடத்தியவர் அவ்வாறான அவரின் பெரும் சேவையினை மதித்து தான் இந்த நாட்டின் பழைய நாடாளுமன்ற கட்டட தொகுதியிலே அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

மலையகத்திலே தலைமை போராளி சௌமிய மூர்த்தி தொண்டமான்.மலையகத்தில் பல போராட்டங்களை நடத்தி மக்களுக்கு பல உரிமைகளை பெற்றுக்கொடுத்தவர் சௌமிய மூர்த்தி தொண்டமான்.நீங்கள் எல்லா போராளிகளின் பெயர்களிலும் மன்றங்களை அமையுங்கள்.

பல பல நிறுவனங்களை உருவாக்குங்கள் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தைப் போல் பல தொழிற்பயிற்சி நிலையத்தை உருவாக்குங்கள்.

இரத்தினபுரி கண்டி பதுளை போன்ற இடங்களில் உருவாக்குங்கள் போராளிகளின் பெயர்களை வையுங்கள்.அதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்

LNUXYUAULNCK7GSPUXGXBRCQKM

இது கவலையளிக்கிறது’: வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் ரொறன்ரோவிலுள்ள யூதர்களுக்குச் சொந்தமான 2 பேக்கரி கிளைகள் இலக்கு வைப்பு

July 27, 2026

பெருமளவிலான ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த (GTA) பல யூத தொழுகைக்கூடங்கள் (synagogues) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்

death

குளியலறையில் உருக்குலைந்த நிலையில் சடலம்

July 27, 2026

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

kava

காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

July 27, 2026

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார்

wate

இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 27, 2026

மொனராகலை- வெல்லவாய, தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

aads

மன்னாரில் 43ஆவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

July 27, 2026

நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983ஆம் ஆண்டு, கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல்

an

விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் தொடர்பில் புதிய சட்டம்

July 27, 2026

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இலங்கையின் சட்டக்

hurm

ஹோர்முஸில் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் வெடிப்பு?

July 27, 2026

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கண்ணிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள்

Death-2

பாடசாலை மாணவி திடீர் மரணம்: பெற்றோர் சந்தேகம்

July 27, 2026

பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த

den

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு

July 27, 2026

இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது. அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறைய​ை வலுப்படுத்தும்

sajith-2

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம் விவசாயிகளினாலேயே வீடு செல்லும்

July 27, 2026

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம், விவசாயிகளினாலேயே வீடு செல்லும் காலம் வரக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரம்

arrest

பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற பொலிஸ் அதிகாரி கைது

July 27, 2026

இரண்டு இளம் பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற ஹோமாகம சிரேஷ்ட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, மீகோட பொலிஸாரால் கைது