மார்ச் 30; குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளை இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்க களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவித்துள்ளார்.

1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று திங்கட்கிழமை (9) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நீதவான் ரி.பிரதீபனால் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குருக்கள்மடம் மனிதப் புதைகுழி முதலாம் கட்ட அகழ்வுப்பணிகள் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இவ்வழக்கில் ஆஜரான சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

குருக்கள்மடத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவரகள் தொடர்பான வழக்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பாரியதொரு திருப்புமுனையையும் ஒரு முன்னேற்றத்தையும் நாங்கள் அடைந்திருக்கிறோம்.

இந்த வழக்கு, விசாரணைக்காக எடுக்கப்பட்டபோது ஏற்கனவே இந்த குறிப்பிட்ட அகழ்வுப்பணிக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதி கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டிருந்ததோடு, காலநிலையும் ஒரு தடையாக இருந்தது.

இந்நிலையில், தற்போது காலநிலை சீராக உள்ளதால் அகழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதற்கான பணத்தை செலவழிக்கின்ற அதிகாரமும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருக்கிறது.

இச்சந்தர்ப்பத்தில் இந்த வழக்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்பட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி அகழ்வு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான கட்டளையை நீதவான் பிறப்பித்திருக்கிறார்.

இது தொடர்பான சட்ட வைத்திய அதிகாரிகள், அதற்குரிய ஆராய்ச்சி நிபுணர்கள் அனைவருடைய கலந்துரையாடலின் பிற்பாடு இந்த திகதி தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, மார்ச் 30ஆம் திகதி முதற்கட்ட அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்கிற செய்தியினை நாம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

30ஆம் திகதி குருக்கள்மடத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறிவதற்கான நடவடிக்கையாக, இந்த புதைகுழி அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. அதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக, களுவாஞ்சிக்குடியின் பொலிஸ் நிலைய அதிகாரிக்கும் இந்நடவடிக்கையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கும் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்ததன் பின்னர் மார்ச் 30ஆம் திகதி அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக குரலற்றவர்களின் குரல்கள் இயக்கம் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

முடிவில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை, நீதிமன்றங்கள் நீதியை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது என சட்டத்தரணி றாஸீ முஹம்மத் முஹம்மத் இதன்போது தெரிவித்தார்.

sivakantha

இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியில் மலைய இளைஞன் சிவகாந்தன்

June 25, 2026

லங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியில், கம்பஹா, உடப்புஸ்ஸல்லாவ கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் சிவகாந்தன் இணைந்துகொண்டு, மலையக மண்ணுக்குப்

aya4

ஜூலையில் ஈரானின் மறைந்த உயர் தலைவர் அலி காமேனியின் இறுதிச்சடங்கு!

June 25, 2026

ஈரானின் மறைந்த முன்னாள் உயர் தலைவர் அலி காமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான்

ja

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு பூட்டு

June 25, 2026

மன்னார், பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்று, சுகாதார அதிகாரிகளின் திடீர் சோதனையைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை

prem

அரசாங்க திறைசேரியின் 2.5மில்லியன் டொலர் மோசடியின் பின்னணியில் அரச ஆதரவாளர்

June 25, 2026

அரசாங்க திறைசேரியில் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் டொலர், அரசாங்க ஆதரவாளர் ஒருவரின் அவுஸ்திரேலிய வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக

5KALS5J5YRAPVFZYPRQXZWAHCI

கனடா: பிராம்ப்டனில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

June 25, 2026

கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் உள்ள பிராம்ப்டன் நகரின் குடியிருப்புப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி

3

தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தமிழக அரசிற்கு திருமாவளவன் கோரிக்கை!

June 25, 2026

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ குறித்து

2

அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்சி நிதி வாங்கியது யார்? – அமைச்சர் செங்கோட்டையன் சவால்!

June 25, 2026

சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளி உரிமம் புதுப்பித்தலுக்கு நிதி வசூலிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், இதற்கான ஆதாரத்தை

1

மின்சார வாரியத்தின் மொத்த கடன் ரூ. 2.47 லட்சம் கோடி! – வெள்ளை அறிக்கை வெளியீடு!

June 25, 2026

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TANGEDCO) நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்

namal

கிரிஷ் விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க மேல் நீதிமன்றம் உத்தரவு!

June 25, 2026

இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் ‘கிரிஷ் லங்கா’ (Krrish Lanka) நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டு,

protest11

சாவகச்சேரியில் நாளை முழு கடையடைப்புப் போராட்டம்!

June 25, 2026

யாழ்ப்பாணம், தென்மராட்சிப் பிராந்தியத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஞா. கிசோரின் (Gnanasundaram

Yoshitha-Rajapaksa (1)

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தில் ரோஹித ராஜபக்ஷ முன்னிலையானார்

June 25, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக சற்றுமுன்னர் காவற்துறையின் மத்திய குற்றவியல்

Ilangu

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் கிசோரின் பதவி பறிப்பு – இளங்குமரன் கண்டனம்

June 25, 2026

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கண்டனம்