மயக்க மருந்தை குளிர்சாதன இயந்திரத்தினுள் செலுத்தி கொள்ளை

திருகோணமலை, வித்தியாலய ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் இன்று (24) அதிகாலை புகுந்த திருடர்கள், வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருந்து செலுத்திப் பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை 2.00 மணியளவில் மதிலேறிக் குதித்த திருடர்கள், வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்த அறையின் வெளியில் பொருத்தப்பட்டிருந்த குளிர்சாதன இயந்திரத்தினுள் மயக்க மருந்தைச் செலுத்தியுள்ளனர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் ஆழ்ந்த மயக்க நிலைக்குச் சென்றுள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட திருடர்கள், ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

வீட்டிலிருந்த அலமாரிகள் மற்றும் பெட்டிகளைத் திறந்து நகைகளைத் தேடிய திருடர்களுக்கு, நகை எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, மேசையிலிருந்த மடிக்கணினி ஐபேட், கைபேசி மற்றும் 12,000 ரூபாய் பணம் ஆகியவற்றைத் திருடியுள்ளனர். மேலும், வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த உரிமையாளரின் மோட்டார் சைக்கிளையும் எடுத்துக்கொண்டு, வீட்டின் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற திருடர்கள், வித்தியாலய வீதி வழியாக இராசவரோதயம் வீதிக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தின் பிரதான வாசலுக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுத் தலைமறைவாகியுள்ளனர்.

காலையில் உறக்கத்திலிருந்து எழுந்த வீட்டின் உரிமையாளர், கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். கொள்ளைச் சம்பவம் குறித்து உடனடியாகத் திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குளிர்சாதன இயந்திரம் ஊடாக மயக்க மருந்து செலுத்தப்பட்டமை கண்டறியப்பட்டது. இதற்கிடையில், காணாமல் போன தனது மோட்டார் சைக்கிளை அயல் வீதிகளில் தேடிய உரிமையாளர், தேவாலயத்தின் முன்னால் அது நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார்.

தற்போது இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளைத் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

pro

மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

March 24, 2026

இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி பொத்துவில் கனகர் கிராம மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (23) முன்னெடுக்கப்பட்டது

vet

மேஜர் ஜெனரல் சில்வா மற்றும் ஆளுநர் வேதநாயகன் விசேட சந்திப்பு

March 24, 2026

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா மற்றும் வட மாகாண ஆளுநர் ந.

arj

அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராக முறைப்பாடு!

March 24, 2026

கிளிநொச்சி பகுதியில் வாழும் மலையக மக்களை கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இழிவாக பேசியதாகக் கூறப்படும் அர்ச்சுனா எம்.பி.க்கு

Gold

ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்த தங்க விலை

March 24, 2026

நாட்டில் இன்று (24) தங்கத்தின் விலை மூன்று முறை அதிகரித்துள்ளதாக இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி,

xa

அமெரிக்க விமான நிலையங்களில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு: ஒரு கனடியராக நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால் தெரிந்து கொள்ள வேண்டியவை

March 24, 2026

அமெரிக்க அரசாங்கத்தின் பகுதி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ((TSA) அதிகாரிகளுக்கு உதவியாக குடிவரவு

his

ஹெஸ்புல்லாவுடன் தொடர்பு: வான்கூவர் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை

March 24, 2026

ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பிற்கு நிதி வழங்கும் 100 மில்லியன் டொலர் வலையமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி வான்கூவரைச் சேர்ந்த

nalinda-jayatissa_2025.01

எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

March 24, 2026

தற்போதைய இக்கட்டான சூழலில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்வதற்கு விலை சூத்திரம் பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த

ceb

மீண்டும் மின்வெட்டு

March 24, 2026

மின்சார உற்பத்திக்காக தேவையான எரிபொருள் கிடைக்கப்பெறுவதனால் இதுவரை மின்வெட்டு மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டு

rea

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற முறைமைக்கு எதிர்ப்பு; ஆசிரியர்கள் போராட்டம்

March 24, 2026

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி கடந்த 8

phil

எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் நாடு

March 24, 2026

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் மோதலைத் தொடர்ந்து, தேசிய அளவிலான எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த உலகின் முதல் நாடாக

ca

கனடாவுக்கு அனுப்புவதாக நடந்த பாரிய நிதி மோசடி

March 24, 2026

முழு குடும்பத்தையும் கனடாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஒரு கோடியே 58 லட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ்,

fi

அமெரிக்காவில் நீதிமன்றக் கட்டிடத்தில் தீ விபத்து

March 24, 2026

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணம், பிளாய்ட் கவுண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டடத்தில் திங்கள்கிழமை (23) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.