மன்னாரில் பெண்களுக்கு இடையூறு விளைவித்த இ.போ.ச. காப்பாளருக்கு தண்டனை

மன்னாரில் பெண்களுக்குப் பொதுப் போக்குவரத்தின் போது இடையூறு விளைவித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) காப்பாளருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் தமது விருப்பப்படி பயணிக்க முழுமையான உரிமை உண்டு என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ். விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம் தொடர்பில் அதிகார சபையின் தலையீட்டுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொழும்பில் இருந்து தனியார் பேருந்தில் பயணித்து மன்னாரை வந்தடைந்த இரு பெண்கள், அதிகாலையில் தலைமன்னார் நோக்கிச் செல்வதற்காக அங்கிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் ஏற முற்பட்டுள்ளனர். எனினும், அவர்கள் முன்னதாகத் தனியார் பேருந்தில் பயணித்து வந்ததைக் காரணம் காட்டி, குறித்த காப்பாளர் பெண்கள் இருவரையும் இ.போ.ச. பேருந்தில் ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட தரப்பினரால் இந்தச் சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. இவ்விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எமது அதிகார சபையால் இலங்கை போக்குவரத்துச் சபையின் (வடக்கு) மன்னார் சாலை முகாமையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

“இந்த ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் தாம் விரும்பும் போக்குவரத்துச் சேவையைத் தெரிவுசெய்து பயணம் செய்வது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அதிலும் குறிப்பாக, அதிகாலை வேளைகளில் தொழில் நிமித்தமாகப் பயணம் செய்யும் பெண்கள், பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பாகவும் கௌரவத்துடனும் பயணிப்பதற்கான சூழலை உறுதிப்படுத்துவது அனைவரதும் கடமையாகும்” எனத் தலைவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

எமது பணிப்புரைக்கமைவாக, உரிய விசாரணைகளை உடனடியாக மேற்கொண்ட மன்னார் சாலை முகாமையாளர், குறித்த இ.போ.ச. காப்பாளருக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அவருக்கு ஒரு நாள் ஊதியத்தைத் (வேதனம்) தண்டப்பணமாகவும் அறவிட்டுள்ளார் என்ற தகவல் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் உரிமைகளை நிலைநாட்ட ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை அதிகாரிகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

முறைப்பாடுகளைத் தெரிவிக்க விசேட இலக்கம்

இனிவரும் காலங்களிலும் பயணிகளிடம், குறிப்பாகப் பெண்களிடம் முறையற்ற வகையில் நடந்துகொள்ளும் அல்லது போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தொடர்பில் பொதுமக்கள் எமது அதிகார சபைக்குத் தயக்கமின்றி முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும்.

அதற்காக விசேடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 0719090900 என்ற இலக்கத்திற்கு வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாகத் தகுந்த ஆதாரங்களுடன் உங்களின் முறைப்பாடுகளை அனுப்பி வைக்கலாம். பொதுமக்களின் முறையான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்த அதிகார சபை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றும் என்று தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

133

போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபரின் பணம் மோசடி?

March 11, 2026

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் வங்கி அட்டையை (ATM Card) திருடி, அதிலிருந்து

lep

சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

March 11, 2026

இலங்கையில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் (Leptospirosis) சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், கிட்டத்தட்ட 300 மரணங்கள்

death

இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி; மரத்தன் மாணவன் விழுந்து பலி

March 11, 2026

புத்தல துட்டுகெமுனு தேசிய பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியின் மரத்தன் ஓட்டத்திற்காக ஏனைய மாணவர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர்

i

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிப்பு

March 11, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும் ஏனைய இலக்குகள் மீது ஈரான் புதிய தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

did

9 மாவட்டங்களில் நன்னீர் மீன்பிடிப் படகுகளின் திருத்தப் பணிகள் நிறைவு!

March 11, 2026

திட்வா புயலால் நாடு முழுவதிலும் உள்ள மீனவ சமூகத்தின் மீன்பிடிக் கலன்கள் மற்றும் உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆறு (06)

CEB

12,000 இற்கும் அதிகமான மின் தடைகள்!

March 11, 2026

கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்று (10) பிற்பகல் மற்றும் இரவு

cru

கச்சா எண்ணெய் விலை சரிவு

March 11, 2026

உலகச் சந்தையில் மிக வேகமாக அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலையானது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

he

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

March 11, 2026

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், அது “வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை தீவிரப்படுத்தும்” என்றும் ஐக்கிய

is

இலங்கைத் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

March 11, 2026

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள், சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும்போது அறிமுகமில்லாத செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கைத்

d

பராமரிப்பு நிலையத்தில் 18 மாதக் குழந்தை குளத்தில் விழுந்து உயிரிழப்பு

March 11, 2026

பகல்நேர பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த 18 மாதக் குழந்தை ஒன்று, அங்கிருந்த குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ள சோகமான சம்பவம்

WhatsApp Image 2026-03-11 at 10.43.39

பிராம்டனில் வாகனங்களை திருடிய இளைஞர் கைது

March 11, 2026

பீல் பிராந்தியத்தின் மத்திய கொள்ளைத் தடுப்பு பிரிவு (Central Robbery Bureau) விசாரணையாளர்கள், பிராம்டனில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி ரைடு-ஷேர்

lo

அரசாங்கம் மக்களின் சுமையை மேலும் அதிகரித்திருக்கிறது – யுக்திய கூட்டமைப்பு

March 11, 2026

அரசாங்கம் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம், ஏற்கனவே மக்கள் முகங்கொடுத்திருக்கும் தாங்கமுடியாத சுமையை