மனித உரிமை மீறல்கள்; சட்ட நடவடிக்கை எடுப்பதில் இலங்கை தவறிவிட்டது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் கடந்த காலத்தில் இடம்பெற்ற கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகக் குறைந்த முன்னேற்றத்தையே அடைந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டே அந்த அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.

பக்கச்சார்பற்ற மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல், படுகொலைகள் மற்றும் ஏனைய கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பயனுள்ள முறையில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதை உறுதி செய்ய நாட்டின் அரசாங்கங்கள் தவறியுள்ளன என்பதை குறித்த அறிக்கை மேலும் வலியுறுத்துகிறது.

பாதிக்கப்பட்ட 32 பேர், காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஏனைய மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடல்கள், நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் ஏனைய மூலங்களை விரிவாக மதிப்பாய்வு செய்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

1987-1989 காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணி (JVP) கிளர்ச்சி மற்றும் 2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரின் போது அரசாங்க பாதுகாப்புப் படைகள் மற்றும் அரச சார்பற்ற ஆயுதக் குழுக்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டு, கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

1990 களில் இருந்து மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் 10 க்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும், நாட்டின் கடந்த கால குற்றங்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவது தோல்வியடைந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டுகிறது.

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து 580 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டமையானது, கடந்த காலத்தில் இடம்பெற்ற கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான சுயாதீன விசாரணையின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது.

இவ்வறிக்கையில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி, செம்மணி மனிதப் புதைகுழியானது நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாகும் என்பதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மனிதப் புதைகுழி தொடர்பான உள்நாட்டு விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் வெளியிடுகின்றனர்.

மேலும், 2006 ஆம் ஆண்டு மூதூரில் ‘எக்‌ஷன் அகெய்ன்ஸ்ட் ஹங்கர்’ (Action Against Hunger) தொண்டு நிறுவனத்தின் 17 தன்னார்வ ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டு இருபது ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் கீத் நொயார் கடத்தப்பட்டமை உள்ளிட்ட சில முக்கிய சம்பவங்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் சிறிய முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.

இருப்பினும், பல சம்பவங்கள் தொடர்பில் இறுதியான சட்டப்பூர்வ முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பக அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

பெரும்பாலான சம்பவங்கள் தொடர்பில் இன்னமும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை என்றும், அச்சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கடந்த காலத்தில் நியமிக்கப்பட்ட பல ஆணைக்குழுக்களால் வழங்கப்பட்ட பரிந்துரைகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கும் வழக்குகளாக மாறவில்லை என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vi-1

2026 ஜப்பான் ஆசிய விளையாட்டு விழா; கிரிக்கெட்டில் வியாஸ்காந்த்!

September 14, 2026

ஜப்பானில் நடைபெறவுள்ள அய்ச்சி-நகோயா 2026 ஆசிய விளையாட்டு விழாவில் நடைபெறவுள்ள ஆடவர் மற்றும் மகளிர் ரி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றவுள்ள

rib

சபலெங்காவை வென்று சம்பியனான றிபெகினா

September 14, 2026

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில்இ உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான எலினா றிபெகினா சம்பியனானார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (13)

1200-675-27270261-thumbnail-16x9-ramesh

“பெற்ற மகனையே முறையாக வளர்க்காத மு.க. ஸ்டாலின், கட்சியை ஒழுங்காக நடத்துவார் என எதிர்பார்க்க முடியாது!” – அமைச்சர் ரமேஷ் சாடல்

September 14, 2026

திருச்சி: ஆர்ப்பாட்டங்களில் திமுகவினர் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசுவதே அக்கட்சியின் டி.என்.ஏ (DNA) என்றும், முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ மு.க. ஸ்டாலின்

1200-675-27622338-thumbnail-16x9-ministersrinath

“அஜித் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!” – அமைச்சர் ஸ்ரீநாத் நெகிழ்ச்சி

September 14, 2026

தூத்துக்குடி: லண்டனில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித் குமார் சந்திப்பு குறித்தும், சில்வர்ஸ்டோன் கார் பந்தயத் தொடக்க விழா

1200-675-25470070-thumbnail-16x9-admk-aspera

“இந்தியாவிற்கே வழிகாட்டியாக முதலமைச்சர் விஜய் திகழ்கிறார்!” – அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

September 14, 2026

வேலூர்: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு நேர்மையான முறையில் செயல்பட்டு வருவதாகவும், தொலைநோக்குச் சிந்தனையுடன் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அவர்

tvk-bus-2

சேலத்தில் தவெக கொடி நிறத்தில் புதிய அரசுப் பேருந்துகள்: போக்குவரத்துத்துறையின் நடவடிக்கையால் சர்ச்சை!

September 14, 2026

சேலம்: சேலம் மாவட்டத்தில் மக்கள் பயன்பாட்டிற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அரசுப் பேருந்துகளுக்கு ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடி

HSJq4ica8AAcl1E

அஜித் – விஜய் சந்திப்பு: தமிழ்நாட்டில் விரைவில் உலகத்தரமான ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

September 14, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித் குமார் இங்கிலாந்தில் நேரில் சந்தித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் விரைவில் உலகத்தரமான ‘மோட்டார்

27628648_anand

“தவெகவில் இணைய ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை!” – மதுராந்தகம் இடைத்தேர்தல் வேட்பாளர் மரகதம் குமரவேல் விளக்கம்

September 14, 2026

மதுராந்தகம்: தவெக தலைமையிலான ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ சார்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலின்

vinayagar (1)

ரூ. 25 லட்ச மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட காஞ்சி ஏலேல சிங்க விநாயகர்!

September 14, 2026

காஞ்சிபுரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய

elmore

செம்மணி மனித புதைகுழி அகழ்வை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் – நம்பகதன்மை மிக்க விசாரணை அவசியம் -பிரிட்டன்

September 14, 2026

செம்மணி மனித புதைகுழிகள் குறித்து சர்வதேசதராதரத்திலான நம்பகதன்மை மிக்க வெளிப்படையான விசாரணைகள் இடம்பெறவேண்டும் என இலங்கையிடம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதாக பிரிட்டன்

Shiranthi-Rajapaksa 1

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்காக பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா நிதி துஷ்பிரயோகம்: சிறாந்தி ராஜபக்ஷவிடம் எஃப்பிஐடி விசாரணை நடத்த தீர்மானம்

September 14, 2026

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டீ ஸ்கேனர் (CT scanner) இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதாகக் கூறி, தேசிய

Namal-750x422

விமானங்களை கொள்வனவு செய்வதில் நிதி மோசடி – நாமல் சந்தேகநபராக பெயரிடப்பட்டார்.

September 14, 2026

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பில் பொதுஜனபெரமுன