மனித உரிமைகளை மீறியமைக்காக இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு 9 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் வேண்டுகோள்

சித்திரவதைகள் மற்றும் ஏனைய மிக மோசமான, மனிதத் தன்மையற்ற, பாரதூரமான தண்டனைகளுக்கு எதிரான பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட உறுப்புநாடுகள், அப்பிரகடனத்தை மீறிச் செயற்பட்ட இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டுமென 9 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப் பேரவை, சர்வதேச நீதிக்கான அவுஸ்திரேலிய நிலையம், பாதுகாப்பு பொறுப்புக்கான உலகளாவிய நிலையம், மனித உரிமைகள் கண்காணிப்பகம், நியூ லைன்ஸ் கற்கைகள் நிலையம், இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு, சமாதானம் மற்றும் நீதிக்கான இலங்கை பிரசாரம் மற்றும் மூலோபாய தர்க்கித்தல் செயற்திட்டம் ஆகிய 9 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை இந்தப் பிரகடனத்தை 1994ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. இருப்பினும் அதற்கு முன்பதாக 1979 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசு தனிநபர்களை பலவந்தமாகக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்கும், வலிந்து காணாமலாக்குவதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி வருகிறது. இச்சட்டத்தின் ஊடாக தமிழ் மக்கள் பெருமளவுக்கு இலக்குவைக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் மிகமோசமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் பாலியல் வன்முறைகளுக்கும், வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு உண்மையில் என்ன நேர்ந்தது என்பதை தொடர்ந்து ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் மறைத்துவருவதன் காரணமாக, அவர்களது குடும்பத்தினர் தமது அன்புக்குரியவர்கள் பற்றிய உண்மைகளை இன்னமும் அறியாமல் இருக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளின் பிரகாரம், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு அவசியமான உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் ஏனைய மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெறுவுதை இலங்கை அரசாங்கம் வேண்டுமென்றே தடுத்தது என நம்பகரமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் சித்திரவதைகள் அல்லது ஏனைய மிகமோசமான மீறல்களுக்குச் சமனானவையாகும்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 2016 ஆம் ஆண்டு சித்திரவதைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில், ‘நபரொருவர் கைதுசெய்யப்படுவதற்கான காரணமாக சந்தேகிக்கப்படும் குற்றத்தின் தன்மையைப் பொருட்படுத்தாமல், நாட்டின் சகல பாகங்களிலும் சித்திரவதைகள் இடம்பெறுகின்றன’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகமானது கடந்த 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் குறிப்பாக வடக்கில் தமிழர்களுக்கு எதிராகப் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் ஏனைய மோசமான நடாத்துகைகள் என்பன தொடர்பான குற்றச்சாட்டுக்களைப் பதிவுசெய்துள்ளது.

அதுமாத்திரமன்றி உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சித்திரவதைகள் தொடர்பில் தீவிர கரிசனை வெளியிடப்பட்டிருந்துடன், இவ்வாறான நடவடிக்கைகள் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்களுக்கும் காரணமாக அமைந்திருக்கக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இவற்றுக்கு மேலாக இலங்கையில் ஆட்சிபீடமேறிய ஒவ்வொரு அரசாங்கத்தின் கீழும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது. உதாரணமாக தற்போதைய அரசாங்கம் கடந்த ஆண்டு மே மாதம், இறுதிக்கட்டப் போரின்போது சகல சந்தர்ப்பங்களிலும் பொதுமக்கள் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டதாகப் பொய்யான கருத்தொன்றை வெளிப்படுத்தியது. இந்த தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கானது தடுப்புக்காவலின் கீழான சித்திரவதைச் சம்பவங்கள் தீவிரமடைவதற்கு வழிகோலுகிறது.

இக்குற்றங்களைப் பொறுத்தமட்டில் உள்ளக நீதிப்பொறிமுறையில் ஆக்கபூர்வமான முன்னேற்றங்கள் எதுவும் இல்லாத நிலையில், சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றே பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரே தெரிவாக இருக்கிறது. இலங்கை ரோம் சாசனத்தில் கையெழுத்திடாத காரணத்தினால், இலங்கையுடன் தொடர்புடைய விவகாரங்களில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பெல்லை வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் சித்திரவதைகள் மற்றும் ஏனைய மிகமோசமான, மனிதத்தன்மையற்ற, பாரதூரமான தண்டனைகளுக்கு எதிரான பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள், அப்பிரகடனத்தின் வரைமுறைகளை மீறியமைக்காக இலங்கைக்கு எதிராக அந்தப் பிரகடனத்தின் 30 ஆவது உறுப்புரையைப் பிரயோகிக்குமாறு வலியுறுத்துகிறோம் என அக்கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

6

“மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்” பிலிகுண்டுலுவில் தொடங்கியது அன்புமணியின் நடைபயணம்

July 1, 2026

தருமபுரி: மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பிலிகுண்டுலுவில்

5

கன்னியாகுமரி அணுக்கனிமக் கொள்ளை: அனுமதி நீட்டிப்பு ஆணையை திரும்பப் பெற வேண்டும் – சீமான்

July 1, 2026

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியில் இந்திய அருமணல் நிறுவனம் (IREL) மேற்கொண்டு வரும் கதிரியக்கக் கனிம அகழ்வுத் திட்டத்திற்கு,

4

“திமுக கூட்டணி கட்சிகள், கூட்டணியில் இருந்து வெளியே வர இதுதான் காரணம்” – அமைச்சர் நிர்மல்குமார்

July 1, 2026

சென்னை: தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற

Pa

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: வரலாற்றில் முதன்முறையாக ஒரு நாள் சர்வதேச மாநாட்டை நடாத்தியது பாகிஸ்தான்

July 1, 2026

சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) குறித்துஇ வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு நாள் சர்வதேச மாநாட்டை பாகிஸ்தான் நேற்று இஸ்லாமாபாத்தில்

Thil

நாட்டின் தேசியப் பிரச்சினையாக விவசாயிகளின் சிக்கல்கள் மாறியுள்ளன!

July 1, 2026

விவசாயிகள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினையே நாட்டின் தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர

Cabinet de

கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

July 1, 2026

பஸ் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3

நாளை தவெகவில் இணைகிறேன்: சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு

July 1, 2026

சென்னை: அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி மோதல்களைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நாளை (ஜூலை 2) தவெக-வில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக

176 bus

பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு: குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 34

July 1, 2026

எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் தனியார் பேருந்துகளின் குறைந்தபட்சக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் (NTC), இலங்கை

suresh11

சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரை நீக்க முடியாது – நீதிமன்றம்

July 1, 2026

சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரை நீக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Nalinda Jayatissa Cabinet Meet-790605

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026

தித்வா அனர்தத்தையடுத்து நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர கால சட்டம் இம்மாதத்திலிருந்து மேலும் நீடிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று

election11

தேர்தல் சட்டத் திருத்தங்களுக்குப் பின்னரே மாகாணசபைத் தேர்தல் காலம் அறிவிப்பு; விரைவில் தேர்தல் நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பு – அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

July 1, 2026

தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்படும் கால அவகாசத்தின் அடிப்படையிலேயே மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கான காலத்தை அறிவிக்க முடியும்.

court-judge-hammer-gavel-696x398

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வவுனியா தலைமைப் பொலிஸ்