மனித உரிமைகளை மீறியமைக்காக இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு 9 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் வேண்டுகோள்

சித்திரவதைகள் மற்றும் ஏனைய மிக மோசமான, மனிதத் தன்மையற்ற, பாரதூரமான தண்டனைகளுக்கு எதிரான பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட உறுப்புநாடுகள், அப்பிரகடனத்தை மீறிச் செயற்பட்ட இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டுமென 9 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப் பேரவை, சர்வதேச நீதிக்கான அவுஸ்திரேலிய நிலையம், பாதுகாப்பு பொறுப்புக்கான உலகளாவிய நிலையம், மனித உரிமைகள் கண்காணிப்பகம், நியூ லைன்ஸ் கற்கைகள் நிலையம், இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு, சமாதானம் மற்றும் நீதிக்கான இலங்கை பிரசாரம் மற்றும் மூலோபாய தர்க்கித்தல் செயற்திட்டம் ஆகிய 9 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை இந்தப் பிரகடனத்தை 1994ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. இருப்பினும் அதற்கு முன்பதாக 1979 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசு தனிநபர்களை பலவந்தமாகக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்கும், வலிந்து காணாமலாக்குவதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி வருகிறது. இச்சட்டத்தின் ஊடாக தமிழ் மக்கள் பெருமளவுக்கு இலக்குவைக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் மிகமோசமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் பாலியல் வன்முறைகளுக்கும், வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு உண்மையில் என்ன நேர்ந்தது என்பதை தொடர்ந்து ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் மறைத்துவருவதன் காரணமாக, அவர்களது குடும்பத்தினர் தமது அன்புக்குரியவர்கள் பற்றிய உண்மைகளை இன்னமும் அறியாமல் இருக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளின் பிரகாரம், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு அவசியமான உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் ஏனைய மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெறுவுதை இலங்கை அரசாங்கம் வேண்டுமென்றே தடுத்தது என நம்பகரமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் சித்திரவதைகள் அல்லது ஏனைய மிகமோசமான மீறல்களுக்குச் சமனானவையாகும்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 2016 ஆம் ஆண்டு சித்திரவதைகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில், ‘நபரொருவர் கைதுசெய்யப்படுவதற்கான காரணமாக சந்தேகிக்கப்படும் குற்றத்தின் தன்மையைப் பொருட்படுத்தாமல், நாட்டின் சகல பாகங்களிலும் சித்திரவதைகள் இடம்பெறுகின்றன’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகமானது கடந்த 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் குறிப்பாக வடக்கில் தமிழர்களுக்கு எதிராகப் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் ஏனைய மோசமான நடாத்துகைகள் என்பன தொடர்பான குற்றச்சாட்டுக்களைப் பதிவுசெய்துள்ளது.

அதுமாத்திரமன்றி உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சித்திரவதைகள் தொடர்பில் தீவிர கரிசனை வெளியிடப்பட்டிருந்துடன், இவ்வாறான நடவடிக்கைகள் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்களுக்கும் காரணமாக அமைந்திருக்கக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இவற்றுக்கு மேலாக இலங்கையில் ஆட்சிபீடமேறிய ஒவ்வொரு அரசாங்கத்தின் கீழும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது. உதாரணமாக தற்போதைய அரசாங்கம் கடந்த ஆண்டு மே மாதம், இறுதிக்கட்டப் போரின்போது சகல சந்தர்ப்பங்களிலும் பொதுமக்கள் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டதாகப் பொய்யான கருத்தொன்றை வெளிப்படுத்தியது. இந்த தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கானது தடுப்புக்காவலின் கீழான சித்திரவதைச் சம்பவங்கள் தீவிரமடைவதற்கு வழிகோலுகிறது.

இக்குற்றங்களைப் பொறுத்தமட்டில் உள்ளக நீதிப்பொறிமுறையில் ஆக்கபூர்வமான முன்னேற்றங்கள் எதுவும் இல்லாத நிலையில், சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றே பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரே தெரிவாக இருக்கிறது. இலங்கை ரோம் சாசனத்தில் கையெழுத்திடாத காரணத்தினால், இலங்கையுடன் தொடர்புடைய விவகாரங்களில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பெல்லை வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் சித்திரவதைகள் மற்றும் ஏனைய மிகமோசமான, மனிதத்தன்மையற்ற, பாரதூரமான தண்டனைகளுக்கு எதிரான பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள், அப்பிரகடனத்தின் வரைமுறைகளை மீறியமைக்காக இலங்கைக்கு எதிராக அந்தப் பிரகடனத்தின் 30 ஆவது உறுப்புரையைப் பிரயோகிக்குமாறு வலியுறுத்துகிறோம் என அக்கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது