மக்கள் பணத்தை வீணடிக்கும் வகையில் நாம் எவ்வித சலுகைகளையும் பெறவில்லை

“சலுகை மற்றும் சுகபோகங்கள் இல்லாத, மக்களுக்கான அரசியலை முன்னெடுத்ததாலேயே மக்கள் எமக்கு ஆணையளித்தனர். அதற்கமையவே நாம் தற்போது செயல்பட்டு வருகிறோம். மக்கள் பணத்தை வீணடிக்கும் வகையில் நாம் எவ்வித சலுகைகளையும் பெறவில்லை,” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 15 மாவட்ட கடற்றொழில் அலுவலகங்களுக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள 112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கொழும்பில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இன்று நியமனம் பெற்றுள்ள எவரும் எங்களைத் தொடர்புகொண்டு கோரிக்கை வைக்கவில்லை. அரசியல் சிபாரிசுகளின் அடிப்படையில் ஆள்தேர்வு செய்யப்படுவதும் இல்லை. அனைத்து நியமன நடைமுறைகளும் முறைப்படியே பின்பற்றப்படுகின்றன. இதில் எந்தவிதக் கட்சிப் பாகுபாடும் காட்டப்படவில்லை, திறமையானவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று பதவி நியமனம் பெறும் நீங்கள் இதே நிலையிலேயே நீடிக்கப் போவதில்லை. எதிர்காலத்தில் உங்களுக்குப் பதவி உயர்வுகளும் சம்பள உயர்வுகளும் கிடைக்கப்பெறும்.

டிஜிட்டல் துறை குறித்த அனுபவமும் தொழில்நுட்ப அறிவும் உங்களுக்கு உண்டு. உங்களுக்குத் தேவையான வசதிகளை நாம் செய்து தருவோம். அவற்றைப் பயன்படுத்தி, எமது கடற்றொழிலாளர்களுக்கும் டிஜிட்டல் மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த அறிவை வழங்கும் வேலைத்திட்டங்களை நீங்கள் முன்னெடுக்க வேண்டும்.

இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் அனைத்துக் கடற்றொழில் அதிகாரிகளுக்கும் மின்சார மோட்டார் சைக்கிள் (Electric Motorcycle) ஒன்றை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதற்காக எமது அமைச்சின் செயலாளர் பெரிதும் முயன்றுள்ளார்.

எனவே, நீங்கள் உங்களின் சேவையை மக்களுக்குச் சிறப்பாக வழங்க வேண்டும்.

அதேவேளை, சலுகைகளுக்காகவோ சுகபோகங்களுக்காகவோ நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. எமது அணியின் அரசியலே அதுதான். இதனால்தான் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக ஆணையளித்தனர்.

அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் சலுகைகளை நாம் நிராகரித்துள்ளோம். ஜனாதிபதியும் பிரதமரும் கூட வீண் விரயங்களைச் செய்யாமல், மக்களின் பணத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தி வருகின்றனர். அமைச்சர்களுக்குரிய உத்தியோகபூர்வ மாளிகைகளை நாங்கள் பெறவில்லை, கூடுதல் பாதுகாப்பையும் கோரவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

1200-675-27478432-thumbnail-16x9-sdew

பரந்தூர் விமான நிலைய திட்ட ரத்து விவகாரம்: பேரவையில் த.வெ.க – தி.மு.க – அ.தி.மு.க வார்த்தை மோதல்!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் இன்று இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும்

HQjRRN4bIAAIIXR

250 புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

August 25, 2026

சென்னை: புதிய பேருந்துகள் தொடக்க விழா சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர்

images - 2026-08-25T191417.284

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குடும்பத்தினரிடம் சிபிஐ தீவிர விசாரணை!

August 25, 2026

சென்னை: வழக்கு பின்னணியும் காவல்துறையின் நடவடிக்கையும் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ஆம்

hindutamil-prod_2026-08-25_vhoxai89_BeFunky-collage-2026-08-25T141334.025

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: கர்நாடகாவிடம் தமிழ்நாடு அரசு விளக்கம் கேட்டதா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், கர்நாடக அரசிடம் தமிழ்நாடு அரசு

hindutamil-prod_2026-06-03_rnr6gr52_1354313

“கோப்புகள் இருப்பதாகக் கூறி மிரட்டக் கூடாது!” – சி.பி.ஐ.(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேச்சு

August 25, 2026

மயிலாடுதுறை: செய்தியாளர் சந்திப்பு மயிலாடுதுறையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று

9868_23_3_2025_18_22_53_1_EPS_ADMK_3

வரும் தேர்தலை அ.தி.மு.க., ஐ.ஜே.கே. கூட்டணி இணைந்து சந்திக்கும்: எடப்பாடி பழனிசாமி!

August 25, 2026

செங்கல்பட்டு: பாரிவேந்தரின் 88-வது பிறந்தநாள் விழா செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில், இந்திய ஜனநாயகக் கட்சியின்

image_0b1598bfd8

மன்னார் வளைகுடா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு: சர்வதேச நிறுவனங்களுக்கு இலங்கை அழைப்பு

August 25, 2026

இலங்கை தனது மன்னார் வளைகுடாப் பகுதியில் உள்ள சுமார் 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவை பெட்ரோலிய ஆய்வுகளுக்காகச் சர்வதேச எரிசக்தி

easter bomb

உயிர்த்தஞாயிறு தாக்குதல் வழக்கு – செப்டம்பர் 22 திகதி தீர்ப்பு

August 25, 2026

2019ம் ஆண்டு உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22

gr

ஜெர்மன் விமான நிலையத்தை தகர்க்க முயற்சி

August 25, 2026

விளாடிமிர் புட்டின் ஆதரவுடன் ஜெர்மனியின் லைப்சிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தை செம்டெக்ஸ் (Semtex) வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் (Drone)

arr

திருட்டுக்களுடன் தொடர்புடைய மூவர் யாழில் கைது!

August 25, 2026

யாழ்ப்பாண குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி

acc

நுவரெலியாவில் சுற்றுலாப் பேருந்து விபத்து

August 25, 2026

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியிலிருந்து நுவரெலியாவிற்கு

Sale

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு

August 25, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம்