போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!

போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக கட்சிகளை இதற்கு சம்பந்தப்படுத்தக்கூடாது. தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த பலரும் கடந்த காலங்களில் போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டமைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என்பதை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலை இருந்துவந்தது. அதனால் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளதுபோன்று கடந்த காலங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் அப்போது இருந்த அரசாங்கங்கள் எடுத்துள்ளன. அதனால் போதைப்பொருளுக்கு எதிராக கட்சி போதமின்றி அனைவரும் இணைந்து செயற்பட்டிருக்கின்றனர்.

என்றாலும் நாட்டு மக்கள் இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள். விவசாயிகள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறான பிரச்சினைகள் தலைதூக்கி இருக்கும்நிலையில் ஜனாதிபதி அந்த போராட்டங்களை மறைக்கும்வகையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை மேல் எழுப்பி இருக்கிறார். அதேநேரம் போதைப்பொருள் கைப்பற்றிய தொகையைும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

ஆனால் நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2019ல் நாங்கள் கைப்பற்றிய போதைப்பொருள் தொகையை விட குறைவாகவே இந்த அரசாங்கம் இரண்டு வருட காலத்தில் கைப்பற்றி இருக்கிறது. அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்தை சத்தம் போட்டுக்கொண்டு செய்கிறது. ஆனால் நாங்கள் எந்த பிரசாரமும் மேற்கொள்ளாமல் செய்துவந்தோம்.

அதேநேரம் கடந்த காலங்களில் கொலை செய்யப்பட்ட கீத்நொயார், லசன்த் விக்ரமதுங்க பாேன்ற பட்டியை ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

அதேநேரம் 88, 89 காலப்பகுதியில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர், ரூபவாஹினி கூட்டுத்தாபளத்தின் செய்தி தயாரிப்பாளர் கொலை செய்யப்பட்டார். இவ்வாறு பலர் இந்த காலப்பகுதியில் கொலை செய்யப்பட்டார்கள். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அதேபோன்று எமது கட்சி அமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பில் நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார். அவர் தவறு செய்திருந்தால், அவருக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஆனால் பேலியகொடை நகரசபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் மகன் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யபட்டிருந்தார்.

அவரது கணவரும் பாேதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார். அதேபோன்று இவ்வாறு தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனால் இந்த விடயத்தில் கட்சிகளின்பால் கை நீட்ட வேண்டாம் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம்.

அதேபோன்று இந்த காலப்பகுதியில் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட எண்ணிக்கையை ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் அதனையும் விட அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிகள் 2014 காலப்பகுதியில் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அதனால் ஜனாதிபதி ஒரு புதிய விடயம்போல் இதனை தெரிவிக்க முயற்சிக்கிறார். அத்துடன் இந்த நாட்டில் துப்பாக்கியால் கொலை செய்வதை பிரபாகரனுக்கு கற்பித்துக்கொடுத்ததும் உங்களது கட்சி தலைவர் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

எனவே போதைப்பொருள் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுபோன்று, போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்களை புனர்வாழ்வளிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

si

அரசின் செயற்பாடுகள் ஐனநாயகத்திற்கான அச்சுறுத்தலாக உருவாகிக் கொண்டிருக்கின்றன – சித்தார்த்தன்

June 27, 2026

மிகக் கொடூரமான ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் நடைபெறவில்லை. கட்சிகளும் மக்களும் ஒன்றிணைந்து தொடர்ச்சியான எதிர்ப்புகளை தெரிவிப்பதன்

iran

எங்களின் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்கானது மட்டுமே – ஈரான்

June 27, 2026

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதை நோக்கியதாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்ய, அங்கு “மிகவும் வலுவான சோதனை மற்றும்

veni

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 589 ஆக அதிகரிப்பு

June 27, 2026

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 589 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு ஊடகங்களின் செய்திகளின்படி, சுமார் 2,980 பேர்

Praga

யாழ்.சர்வதேச விளையாட்டரங்கு திட்டத்தில் மாற்றம்!

June 27, 2026

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முந்தைய நிறைவேற்றுச் சபையினால் யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கம் ஒன்றை நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்ட திட்டம்

death

மட்டு. வைத்தியசாலையில் குழந்தையைப் பிரசவித்த பெண் டெங்குவால் உயிரிழப்பு

June 27, 2026

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர், அண்மையில் பெண்குழந்தையை பெற்றெடுத்த

Selvam

மனித எச்சங்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென்றால் அது செம்மணி புதைகுழியாகவே இருக்கும் – செல்வம் அடைக்கலநாதன்

June 27, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளின் போது உதய கம்மன்பிலவின் செயற்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

acci main

அதிவேக நெடுஞ்சாலையில் 5 வாகனங்கள் தொடர் விபத்து

June 27, 2026

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இடையிலுள்ள 31ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற

arres

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் ஒருவர் கைது

June 27, 2026

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டை தயாரித்து மோசடி செய்த

CWY7Q7QYY5DLXEWDI2XETVXMWU

முக்கிய ஆதாரங்கள்’ பறிமுதல்: கேப் பிரெட்டன் நபர் மீது பாலியல் கடத்தல் குற்றச்சாட்டு

June 26, 2026

இந்த வார தொடக்கத்தில் வீடு ஒன்றிலிருந்து “முக்கிய ஆதாரங்களை” பறிமுதல் செய்துள்ளதாகக் கூறியுள்ள காவல்துறையினர், அதனைத் தொடர்ந்து கேப் பிரெட்டன்

police rcmp

நியூ பிரன்சுவிக் (N.B.) பால்மோரல் அருகே விபத்தில் ஒருவர் பலி: இரண்டு வாகனங்களைத் தேடும் முக்கிய குற்றப் புலனாய்வுப் பிரிவு

June 26, 2026

கனடாவின் நியூ பிரன்சுவிக் (New Brunswick) மாகாணத்தில் உள்ள பால்மோரல் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

hamilton police1

ஹாமில்டனில் வாகன நிறுத்துமிடத் தகராறு: பெண்ணை தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கிய இரு பெண்கள் கைது

June 26, 2026

ஒன்டாரியோவின் ஹாமில்டன் (Hamilton, Ont.) நகரில் கடந்த வார இறுதியில் வாகனத்தை நிறுத்தும் இடம் (Parking spot) தொடர்பாக ஏற்பட்ட

10_thirumavalavan-expresses-anguish-over-criticisms-26-06-2026

இழிவாக விமர்சித்து வருகிறார்கள்; வீடியோ வெளியிட்டு திருமாவளவன் ஆதங்கம்!

June 26, 2026

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் தனது அரசியல் பயணம் மற்றும் எதிர்கொண்டு வரும் விமர்சனங்கள் குறித்து வீடியோ வாயிலாக விரிவான