பொருளாதார நெருக்கடியைக் காரணம்காட்டி பொசன் பௌர்ணமி உற்சவத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது – வலவாஹாங்குனவெவே தம்மரத்ன தேரர்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளையும் எரிபொருள் விலையேற்றத்தையும் சாட்டாகக் கொண்டு, பௌத்த வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பொசன் பௌர்ணமி உற்சவத்தைக் குறைத்து மதிப்பிடவோ அல்லது முடக்கிவிடவோ முடியாது என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹாங்குனவெவே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை ரஜமஹா விகாரை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சர்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்பண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இம்முறை பொசன் வாரமானது ஜூன் 26 ஆம் திகதி முதல் ஜூலை 02 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 29 ஆம் திகதி பொசன் பௌர்ணமி தினத்தில், மிஹிந்து மகா ரஹதனார் இலங்கைக்கு வருகை தந்து 2334 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எரிபொருள் விலை உயர்வு, பொருளாதாரச் சுமை எனப் பல்வேறு சவால்கள் நாட்டைச் சூழ்ந்திருக்கலாம். ஆனால், இவற்றை ஒரு காரணமாகக் கூறி, எமது வரலாற்றுச் சிறப்புமிக்க பொசன் பௌர்ணமி நிகழ்வைத் தள்ளிப்போடவோ அல்லது அதன் முக்கியத்துவத்தைக் குறைக்கவோ கூடாது.

மத ரீதியான சடங்குகள் மற்றும் கலாசார விழுமியங்களைப் பேணுவது எமது கடமை. இவ்வாறான கடினமான காலங்களிலும், மிஹிந்து மகா ரஹதனாரின் வருகையை நினைவு கூரும் இந்த உன்னத நிகழ்வை மிகவும் அர்த்தமுள்ளதாகவும், பக்தர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையிலும் நாம் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்

இம்முறை பொசன் காலப்பகுதியில் பக்தர்களின் வருகையைச் சீர்செய்யவும், போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் வழிகாட்டலில், அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை இடையில் விசேட பேருந்து சேவைகளும், ரயில் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கு இலவசத் தொடருந்து சேவைகளும் வழங்கப்படவுள்ளன. இம்முறை பொசன் சேவைகளுக்காக மாத்திரம் 400 இற்கும் மேற்பட்ட பேருந்துகள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், மேலதிக தேவைகளுக்காக நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் பேருந்துகள் வரவழைக்கப்படவுள்ளன.

பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். அன்னதான சாலைகள் சுகாதார அதிகாரிகளிடம் கண்டிப்பாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.

பதிவு செய்யப்படாத மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறும் தான சாலைகள் உடனடியாக அகற்றப்படும். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைத் தவிர்த்து, சூழலைப் பாதுகாக்கும் வகையில் பொசோன் உற்சவத்தை முன்னெடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

பொசன் வாரத்தில் மிஹிந்தலைக்கு வருகை தரும் இளைஞர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் மிகுந்த ஒழுக்கத்துடனும், பொறுப்புடனும் செயற்பட வேண்டும் எனப் பொலிஸார் அறிவுறுத்தினர். ஆபாசமான சத்தங்களை எழுப்புவது அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

நாட்டின் தற்போதைய சூழலுக்கு மத்தியிலும், மதம் மற்றும் கலாசார விழுமியங்களுக்கு முன்னுரிமை அளித்து, மிஹிந்து மகா ரஹதனார் ஆற்றிய தொண்டிற்கு மதிப்பளிக்கும் வகையில், ஒட்டுமொத்த தேசமும் ஒன்றிணைந்து பொசன் உற்சவத்தை மிகவும் பாதுகாப்பானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் கொண்டாடப் பங்களிப்பு வழங்க வேண்டும் என்றார்.

anura may 26

சுரேஷ் சலேயின் உடல்நிலை: ஜனாதிபதியின் தலையீட்டைக் கோருகிறது ‘சர்வஜன பலய

June 14, 2026

கொழும்பு: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் தலைவர், ஓய்வுபெற்ற

Rain

எல் நினோ (El Niño) தாக்கம்: இலங்கையில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கனமழை மற்றும் வெள்ள அபாயம்

June 14, 2026

கொழும்பு: பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, இந்த ஆண்டு ஒக்டோபர்

Devanesan

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் மிகமுக்கிய ஆவணத்தைத் தயாரித்த தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் ஆளுமை கலாநிதி தேவநேசன் நேசையா காலமானார்!

June 14, 2026

இலங்கையின் அரச நிர்வாகத்துறையிலும், சிவில் சமூகப்பரப்பிலும் கொள்கை உறுதிப்பாட்டுடன் நீண்டகாலம் பணியாற்றியவரும், தமிழ்ச்சமூகத்தை சர்வதேச தளங்களில் பிரதிநிதித்துவப்படுத்திய ஆளுமையாகவும் திகழ்ந்த

nay

நாளை நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்றம்

June 14, 2026

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை (15) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து

tu

துருக்கியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி!

June 14, 2026

2026 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் ‘D’ குழுவில் துருக்கியுடன் நடைபெற்ற போட்டியில், அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கோல்

dd

இரு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு நாடுகடத்தல்

June 14, 2026

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ‘மோதர நிபுண’ என்பவரின் சகோதரர்

3

“ரஜினிகாந்த் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது!” – அண்ணாமலை, லாரன்ஸ் விவகாரத்தில் ரஜினி நற்பணி மன்றம் அசுர வேக அறிக்கை!

June 14, 2026

சென்னை: “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரையோ அல்லது அவரது புகைப்படத்தையோ எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ தங்களது சுயலாபத்திற்காகப்

2

“திமுக-வை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை; டாஸ்மாக் ரெய்டுக்காக டெல்லி சென்றவர் ஸ்டாலின்!” – திமுக தலைவருக்குத் தவெக ஐடி விங் அசுர வேக மாஸ் பதிலடி!

June 14, 2026

சென்னை: “வாய்ப்பு கிடைக்கும் துறைகளில் எல்லாம் மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக

1

“சாதி, மத, பணபல அரசியலைக் கடந்து மக்கள் மௌனப் புரட்சி செய்துள்ளனர்!” – திமுக கூட்டணி குறித்து துரை வைகோ அசுர வேக அதிரடிப் பேட்டி!

June 14, 2026

மதுரை: “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சாதி, மத, பணபல அரசியலை அடியோடு தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் மாபெரும் மௌனப்

722205425_2516904032157267_6855962867046714642_n

மயிலிட்டி மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற நாளைய போராட்டத்திற்கு பூரண ஆதரவு, அனைவரையும் கலந்து கொள்ளுமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை

June 14, 2026

போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில் மயிலிட்டி மக்கள்

pta

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) நீக்கப்படுகிறது; இரண்டு மாதங்களில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது

June 14, 2026

கொழும்பு: இலங்கையில் நீண்டகாலமாகப் பலத்த விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) முழுமையாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக

QLLE5GRSC5F5FCSDC7A63GB54U

பிரிட்டிஷ் கொலம்பியா இளைஞரைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்: தொடர் அச்சுறுத்தல் குற்றச்சாட்டு

June 14, 2026

ரொறன்ரோ: நபர் ஒருவருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் மற்றும் தொல்லை கொடுத்து வந்த குற்றச்சாட்டின் பேரில், பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தைச்