மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக காப்புறுதி மற்றும் கப்பல் கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
விலை உயர்வு: எரிபொருள் விலை உயர்வு கப்பல் போக்குவரத்து மற்றும் காப்புறுதி செலவுகள் அதிகரித்துள்ளதால் நுகர்வோர் இந்த விலை அதிகரிப்பை உணர வேண்டியிருக்கும்.
தட்டுப்பாடு இல்லை: “நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு எந்தத் தட்டுப்பாடும் ஏற்படாது” என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஜி. விநாயக சுந்தரம் உறுதி அளித்துள்ளார்.
இறக்குமதியாளர் சங்கத் தலைவரின் கருத்து:
வர்த்தக அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு விநாயாகசுந்தரம் கூறுகையில்:
“மத்திய கிழக்கில் பூகோள அரசியல் அபாயங்கள் அதிகரித்துள்ள போதிலும் நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடையின்றித் தொடரும். வர்த்தக அமைச்சருடனான சந்திப்பில் உறுதிப்படுத்தியபடிஇ தற்போது எந்தத் தட்டுப்பாடும் இல்லை.”என தெரிவித்துள்ளார்
விலை உயர்வுக்குக் காரணமான காரணிகள்:
இலங்கை அத்தியாவசிய உணவுகள் மற்றும் எரிபொருளுக்காக இறக்குமதியையே நம்பியிருக்கும் ஒரு நாடு என்பதால் பின்வரும் காரணிகள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன:
கப்பல் எரிபொருள் விலை உயர்வு: சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு.
போர் அபாயக் காப்புறுதி : மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக கப்பல்களுக்கான காப்புறுதி கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.
ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்து வருவது இறக்குமதி செலவை அதிகரித்துள்ளது.
பொருட்கள் விநியோக நிலை:
வெங்காயம் பூண்டு உருளைக்கிழங்கு: இவற்றுக்கான கையிருப்பு தாராளமாக உள்ளது.
பருப்பு வகைகள்: கனடா மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து வரவேண்டிய இரண்டு பருப்புத் தொகுதிகள் கப்பல் கட்டண உயர்வு மற்றும் காப்புறுதி மறுமதிப்பீடு காரணமாகச் சற்று தாமதமாகியுள்ளன.
நிபுணர்களின் எச்சரிக்கை:
கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் ஆபத்தான கடல் வழிகளைத் தவிர்த்து மாற்று வழிகளைப் பயன்படுத்துவதால் பயண நேரம் அதிகரிப்பதோடு மேலதிக செலவுகளும் ஏற்படுகின்றன. இதனால் எதிர்வரும் வாரங்களில் சில்லறை விற்பனை விலையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கடல்வழிப் பாதைகள் இயங்கும் வரை இலங்கை தனது இறக்குமதிகளைத் தொடர முடியும் ஆனால் அதற்கான மேலதிக கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.