புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளின் தேவைகளை நிறைவேற்றவே அரசுசெயற்படுகிறது – இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர்

இந்த அரசாங்கத்துக்குச் செய்யத் தெரிந்த ஒன்றும் இல்லை இவர்கள் முழுமையாக டயஸ்போரா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே செயற்படுகிறார்கள். நாமல் ராஜபக்ஷவை அடுத்த தேர்தலில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை என பௌத்த தேசியவாத அமைப்பான ‘ராவணா பலய’ அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராமங்கள் தோறும் வேலைத்திட்டத்தின் கீழ், அநுராதபுரம் மாவட்டத்தில் கெக்கிராவை தொகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு, அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜானக திஸ்ஸகுட்டி ஆராச்சி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஜி. வீரசேன கமகே, சஞ்சீவ எதிரிமான்ன, சுமித் உடுக்கும்புர, ஜயந்த கெட்டகொட மற்றும் ஜகத் குமார உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சத்தாதிஸ்ஸ தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இன்று அரசாங்கத்தில் இருப்பவர்கள் எங்களிடம் வந்து, அடுத்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கேட்கிறார்கள். நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகச் செயற்படும் தரப்பினர், அவரிடமிருந்து விலகுமாறு எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.

அவர்களுக்கு நாங்கள் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறோம்; உங்களுக்கு இருப்பது போன்ற முதுகெலும்பில்லாத நிலை எங்களுக்கு இல்லை. நாமல் ராஜபக்ஷவை அடுத்த தேர்தலில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை என்பதை தெளிவாகக் கூறுகிறோம்.

இந்த அரசாங்கத்துக்குச் செய்யத் தெரிந்த ஒன்றும் இல்லை இவர்கள் முழுமையாக டயஸ்போரா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே செயற்படுகிறார்கள்.

இன்று மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை சிறைவைத்து, இந்த நாட்டுக்குச் சேவை செய்த அந்த அன்பான இராணுவ வீரரைத் தண்டித்து, சித்திரவதைக்கு உள்ளாக்கி வருகிறார்கள். நாம் இன்று அனுபவிக்கும் இந்தச் சுதந்திரத்துக்கு, அன்றைய புலனாய்வுப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய சுரேஷ் சலே போன்றோரின் அர்ப்பணிப்புதான் காரணம்.

அவரைத் துன்புறுத்துவது மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ அல்லது நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயரைச் சிதைப்பதற்காகவே ஆகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்று கூறிக்கொண்டு, இன்று சுரேஷ் சலேவைக் கைது செய்து வைத்திருக்கிறார்கள். உண்மையில் அந்தத் தாக்குதலை நடத்திய இப்ராஹிம் என்பவர் அன்றே அந்தத் தாக்குதலில் உயிரிழந்தார்.

ஆனால், உண்மையான சூத்திரதாரிகள் இன்று சுதந்திரமாக இருக்கிறார்கள். தனது உயிரையும் பொருட்படுத்தாது நாட்டுக்காகப் பணியாற்றிய சுரேஷ் சலேவைப் பார்க்க இன்று அவரது மனைவியும் பிள்ளைகளும் சென்றபோது, நான் இந்த நாட்டை நேசித்தேன், இன்றும் நேசிக்கிறேன், எனது இறுதிக்காலத்தில் எனது கண்களைத் தானம் செய்யத் தீர்மானித்திருக்கிறேன் என்று அவர் கூறியதாக அறிந்து நான் கண்கலங்கினேன்.

இவ்வளவு தேசபக்தி கொண்டவரைத் தண்டிப்பது ஏன்? சுரேஷ் சலே வெளியே வந்தால் இவர்களின் முகத்திரை கிழிந்துவிடும் என்பதால் இவர்கள் பயப்படுகிறார்கள்.

அதேபோல், எமது புனித பூமிகளான தலதா மாளிகை, அட்டமஸ்தானம், சொலஸ்மஸ்தானம் ஆகியவற்றை அரசாங்கத்தின் கீழ் கையகப்படுத்த வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். இத்தகைய புனித இடங்களை சட்டத்தின் கீழ் கையகப்படுத்த நினைப்பது கூடப் பெரும் தவறாகும். எமது சம்பிரதாயங்களை, எமது மதத்தை, எமது தேசத்தை அழிக்க நாங்கள் இடமளிக்க மாட்டோம்.

நாமல் ராஜபக்ஷவைக் கண்டால் இவர்களுக்குப் பயம். அவர் மகிந்த ராஜபக்ஷ என்ற சிங்கத்தின் மூத்த புதல்வர் என்பது இவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் ஜனாதிபதியானால் மாத்திரமே இந்த நாடு மீண்டும் சரியான பாதையில் செல்லும். 2015க்குப் பிறகு இந்த நாட்டில் முதுகெலும்புள்ள ஒரு தலைவர் இருக்கவில்லை.

இன்று அரசாங்கம் மணல் மூட்டைகளை வைத்து பாலம் அமைப்பதாகக் கூறிக்கொண்டு, தங்களுக்கு வேண்டியபடி பணத்தைச் சுருட்டிக்கொள்கிறார்கள். இவ்வாறான முறையற்ற செயல்களை நிறுத்தி, சிங்கள, பௌத்த, கத்தோலிக்க, முஸ்லிம் மற்றும் தமிழ் என அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய நாட்டை உருவாக்க, 2029 இல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாமல் ராஜபக்ஷவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குவோம் என்றார்.

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு

719519754_1698479904786137_2526426679292084547_n

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்

June 13, 2026

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது மாந்தை கிழக்கு மற்றும்

i

கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்

June 13, 2026

தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டு அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47ஆவது