புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானத்துக்கு ரவிகரன் எம்.பி விசேட நிதிக் கோரிக்கை

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகளை துரிதகதியில் முன்னெடுப்பதற்கு விசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் நிதி இடைவெளிகள் தொடர்பில் முறையான துறைசார் ஆய்வு மேற்கொள்ளுமாறு கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புரவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளதுடன், தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் விசேட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விடயத்தை அடுத்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பாராளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்குமாறு, அக்குழுவின் தவிசாளருக்கும் பாராளுமன்று உறுப்பினரால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்துவதற்கான விசேட நிதி ஒதுக்கீடு கோரல் எனத் தலைப்பிட்டு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

2024ஆம் ஆண்டு ஏற்பட்ட தித்வா புயலின் பேரழிவால் நாட்டின் ஏனைய பிராந்தியங்களைப் போலவே வடமாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலுள்ள பெருமளவிலான அரச பாடசாலைகள் கடுமையான கட்டமைப்புச் சேதங்களுக்கு உள்ளாகியிருந்தன என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

அனர்த்தம் ஏற்பட்டு நீண்டகாலம் கடந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட பல பாடசாலைகளின் வகுப்பறைக் கட்டடங்கள், கூரைகள், சுற்றுச்சுவர்கள், முறையான நீர் வழங்கல் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் இன்னமும் முழுமையாக மீள் கட்டமைக்கப்படாமல் தொடர்ந்தும் முடங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன.

தற்போது சில பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பராமரிப்புப் பணிகள், ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறுதிருத்த நிதி உதவியின் (MRC) ஊடாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் புயலால் ஏற்பட்ட சேதங்களின் பாரதூரதன்மையோடு ஒப்பிடுகையில் இத்தகைய வழக்கமான வருடாந்த நிதி ஒதுக்கீடுகள் எவ்வகையிலும் போதுமானதாக அமையவில்லை.

இந்நிலைமையானது மாணவர்களின் அன்றாட பாதுகாப்பு, ஆரோக்கியமான கற்றல் சூழல் மற்றும் கல்விச்சேவைகளின் தரம் ஆகியவற்றில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பாதிப்படைந்த 15 பாடசாலைகளுக்கு இன்னமும் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான நிதி உதவிகள் கிடைக்கப்பெறவில்லை. வவுனியா தெற்கு வலயத்தில் வ/குருக்கள் புதுக்குளம் அ.த.க.பாடசாலை, வ/முஸ்லீம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும், மடு கல்வி வலயத்தில் மன்/கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும், மன்னார் கல்வி வலயத்தில் இசைமலைத்தாழ்வு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, மடுக்கரை அ.த.க.பாடசாலை, நொச்சிகுளம் அ.மு.க. பாடசாலை, ஜோசப் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும் உடனடி தலையீட்டுடன் சீர் செய்யப்படவேண்டிய பாடசாலைகளாக காணப்படுகின்றன.

எனவே கல்விச் சமூக நலன்கருதி, இப்பிரச்சினையில் தங்களின் விசேட தலையீட்டை வழங்கி தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் தற்போதைய தேவை மற்றும் நிதி இடைவெளிகளை மீளாய்வு செய்யுமாறும் இதுவரை நிரந்தரமாக திருத்தப்படாத பாடசாலைகளின் விபரப் பட்டியலை பெற்று இயல்தகு விரைவில் குறித்த பாடசாலைகளின் உட்கட்டமைப்புகளை முழுமையாக சீரமைப்பதற்குரிய விசேட நிதி ஒதுக்கீட்டை ஏற்படுத்துமாறும் தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

மேற்படி விடயம் தொடர்பில் தங்களின் சாதக பரிசீலிப்பையும் உடன் தலையீட்டையும் எதிர்பார்க்கின்றேன். எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் நிதி இடைவெளிகள் தொடர்பில் முறையான துறைசார் ஆய்வு மேற்கொள்ளுமாறு கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சியிடம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்தவகையில் தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் உட்கட்டமைப்புகள் தொடர்பான மாவட்டவாரியான துல்லியமான தரவுகள், இப்பணிகளுக்காக இதுவரை ஒதுக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி விபரங்களின் வெளிப்படைத்தன்மை, இன்னமும் முழுமைப்படுத்தப்படாது நிலுவையில் உள்ள நீண்டகால கட்டுமானப் பணிகள், எதிர்காலத்தில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களின் போது பாடசாலைகளைப் பாதுகாப்பதற்கான அனர்த்த மீட்பு நிதி ஏற்பாடுகள் உள்ளிட்ட அத்தியாவசிய விடயங்கள் தொடர்பில் முறையான ஆய்வை மேற்கொள்ளுமாறும் அதனூடாக தொடர்புடைய கொள்கைவழி, நிருவாகப் பரிந்துரைகளை அரசுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம்பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் தவிசாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் விசேட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விடயத்தை அடுத்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பாராளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்ட நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்குமாறு, குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தவிசாளரான பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அக்கடிதத்தில் பகுதியளவான பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பராமரிப்புப் பணிகள், ஆண்டுதோறும் வழங்கப்படும் சாதாரண சிறுதிருத்த நிதியுதவியின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், தித்வா புயலால் ஏற்பட்ட பேரழிவின் அளவோடு ஒப்பிடுகையில் இத்தகைய வழக்கமான ஒதுக்கீடுகள் எவ்வகையிலும் போதுமானதாக இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே தித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் தற்போதைய கள நிலவரம், மாவட்ட வாரியாக கணக்கிடப்பட்ட சேத விபரங்கள் மற்றும் உத்தியோகபூர்வ மதிப்பீடுகள், பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு இதுவரை விடுவிக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள், இன்னமும் முழுமைப்படுத்தப்படாது நிலுவையில் உள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள், தித்வா புயலின் பின்னரான பாடசாலைகளின் மீள்கட்டுமானத்துக்குரிய விசேட நிதி ஒதுக்கீட்டுக்கான தேவை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்வதற்கும் உரிய தீர்வுகளை எட்டுவதற்கும் கல்வி அமைச்சு சார் ஆலோசனைக்குழுவின் அடுத்த கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறித்த விடயத்தை சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அக்கடித்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

si

அரசின் செயற்பாடுகள் ஐனநாயகத்திற்கான அச்சுறுத்தலாக உருவாகிக் கொண்டிருக்கின்றன – சித்தார்த்தன்

June 27, 2026

மிகக் கொடூரமான ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் நடைபெறவில்லை. கட்சிகளும் மக்களும் ஒன்றிணைந்து தொடர்ச்சியான எதிர்ப்புகளை தெரிவிப்பதன்

iran

எங்களின் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்கானது மட்டுமே – ஈரான்

June 27, 2026

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதை நோக்கியதாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்ய, அங்கு “மிகவும் வலுவான சோதனை மற்றும்

veni

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 589 ஆக அதிகரிப்பு

June 27, 2026

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 589 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு ஊடகங்களின் செய்திகளின்படி, சுமார் 2,980 பேர்

Praga

யாழ்.சர்வதேச விளையாட்டரங்கு திட்டத்தில் மாற்றம்!

June 27, 2026

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முந்தைய நிறைவேற்றுச் சபையினால் யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கம் ஒன்றை நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்ட திட்டம்

death

மட்டு. வைத்தியசாலையில் குழந்தையைப் பிரசவித்த பெண் டெங்குவால் உயிரிழப்பு

June 27, 2026

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர், அண்மையில் பெண்குழந்தையை பெற்றெடுத்த

Selvam

மனித எச்சங்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென்றால் அது செம்மணி புதைகுழியாகவே இருக்கும் – செல்வம் அடைக்கலநாதன்

June 27, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளின் போது உதய கம்மன்பிலவின் செயற்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

acci main

அதிவேக நெடுஞ்சாலையில் 5 வாகனங்கள் தொடர் விபத்து

June 27, 2026

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இடையிலுள்ள 31ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற

arres

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் ஒருவர் கைது

June 27, 2026

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டை தயாரித்து மோசடி செய்த

CWY7Q7QYY5DLXEWDI2XETVXMWU

முக்கிய ஆதாரங்கள்’ பறிமுதல்: கேப் பிரெட்டன் நபர் மீது பாலியல் கடத்தல் குற்றச்சாட்டு

June 26, 2026

இந்த வார தொடக்கத்தில் வீடு ஒன்றிலிருந்து “முக்கிய ஆதாரங்களை” பறிமுதல் செய்துள்ளதாகக் கூறியுள்ள காவல்துறையினர், அதனைத் தொடர்ந்து கேப் பிரெட்டன்

police rcmp

நியூ பிரன்சுவிக் (N.B.) பால்மோரல் அருகே விபத்தில் ஒருவர் பலி: இரண்டு வாகனங்களைத் தேடும் முக்கிய குற்றப் புலனாய்வுப் பிரிவு

June 26, 2026

கனடாவின் நியூ பிரன்சுவிக் (New Brunswick) மாகாணத்தில் உள்ள பால்மோரல் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

hamilton police1

ஹாமில்டனில் வாகன நிறுத்துமிடத் தகராறு: பெண்ணை தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கிய இரு பெண்கள் கைது

June 26, 2026

ஒன்டாரியோவின் ஹாமில்டன் (Hamilton, Ont.) நகரில் கடந்த வார இறுதியில் வாகனத்தை நிறுத்தும் இடம் (Parking spot) தொடர்பாக ஏற்பட்ட

10_thirumavalavan-expresses-anguish-over-criticisms-26-06-2026

இழிவாக விமர்சித்து வருகிறார்கள்; வீடியோ வெளியிட்டு திருமாவளவன் ஆதங்கம்!

June 26, 2026

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் தனது அரசியல் பயணம் மற்றும் எதிர்கொண்டு வரும் விமர்சனங்கள் குறித்து வீடியோ வாயிலாக விரிவான