பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் தேசிய பராமரிப்புக் கொள்கை பரிந்துரை

பெண்களின் உழைப்பை மதிக்கும் ஒரு நியாயமான சமூகத்தையும், பாதுகாப்பான பொருளாதாரத்திற்கான தேசிய பராமரிப்புக் கொள்கையினையும் நிறுவுதல் மிகவும் அவசியமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (5) முன்வைக்கப்பட்ட ‘தேசிய பராமரிப்புக் கொள்கையொன்றை உருவாக்க வேண்டும்’ பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்..

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் தேசிய பராமரிப்புக் கொள்கையொன்றைப் பரிந்துரைத்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணை குறித்து உரையாற்றக் கிடைத்தமை இட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக, ஆறு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் எனது கன்னி உரையை நிகழ்த்திய போது, ‘பராமரிப்பு பொருளாதாரம்’ பற்றி நான் பேசிய வேளையில், இச்சபையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்களே இருந்தனர். அன்று அந்தத் தலைப்பைப் பற்றிப் பேசுவதே ஒரு புதிய விடயமாகக் கருதப்பட்டது.

ஆனால், ஆறு வருடங்களின் பின்னர் இன்று இத்தலைப்பைப் பற்றிப் பேசுவதற்கு பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் ஒரு பலமான குழு எமக்கு இருப்பையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த உரையாடல் இன்று எந்தளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது என்றால், எமது தேசியக் கொள்கை வரைவுக்கான ஒரு முன்மொழிவை முன்வைக்கும் அளவுக்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இக்கருத்தாடல் வலுவடைந்திருக்கின்றது.

உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைத்துவம், சமூக நிறுவனங்கள், அரச சேவை, கல்வித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ள ஒரு சூழலில், இவ்வாறானதொரு தீர்க்கமான அதே நேரத்தில் மிக முக்கியமான தலைப்பு குறித்து உரையாடலை முன்னெடுப்பது காலத்தின் தேவையாகும்.

பொதுவாக இத்துறைகளில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தி வலுப்படுத்த வேண்டுமாயின், பெண்களின் உழைப்பை அங்கீகரித்து, ஒரு பிரஜையாக அனைத்துத் துறைகளிலும் சமமாகவும் கௌரவமாகவும் தனது விருப்பத்திற்கமைய பங்கெடுப்பதற்கான அவரது உரிமையை ஏற்றுக்கொண்டு, அதற்கான பிரதான தடைகளை நீக்குவதற்கு நாம் செயற்பட வேண்டும்.

பெண்களின் அரசியல் பங்களிப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் இக்காலக்கட்டத்தில், பெண்கள் பிரஜைகளாக சமூகம், அரசியல் மற்றும் கலாசார ரீதியில் அச்சமின்றி கௌரவமான முறையில் செயற்பட வேண்டுமாயின், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகப் பரப்புகளிலும் அவர்களின் கௌரவம் பேணப்படும் வகையிலும், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வகையிலும் அந்தத் தளங்கள் ஒழுங்கமைக்கப்படுவது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோன்று, இது சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மாத்திரமன்றி, ஒரு சமூக மாற்றத்தின் ஊடாகவே நிகழ வேண்டும். அந்தச் சமூக மாற்றத்தினூடாக பெண்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்க வேண்டும் என்பதுடன், அனைத்துப் பிரஜைகளும் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் சம வாய்ப்புகளுடனும் வாழக்கூடிய ஒரு சமூகத்தையே நாம் எதிர்பார்க்கின்றோம், என்றார்.

sa

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அடக்குமுறை நடந்திருந்தால் ஆதாரத்தை முன்வையுங்கள்!

March 7, 2026

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், அதன் மூலம் ஏதேனும் அடக்குமுறைகள் இடம்பெற்றிருந்தால் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு பிரதமர்ஹரிணி

au

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் சடலமாக மீட்பு

March 7, 2026

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள லொட்ரோப் பகுதியில், உள்ள வீட்டில் இலங்கைப் பெண் உட்பட தம்பதி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள்

drone

நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பு

March 7, 2026

ட்ரோன்களை (Drone)பயன்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான உணர்திறன் மிக்க தகவல்களைச் சேகரித்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைத்

ba

பாகிஸ்தான் தொடரிலிருந்து பங்களாதேஷ் முக்கிய வீரர்கள் விலகல்?

March 7, 2026

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணியை அந்நாட்டு

crim

நாட்டு துப்பாக்கி வெடித்து இளைஞர் படுகாயம்; மல்லாவியில் சம்வம்

March 7, 2026

சட்டவிரோதமாக உடமையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞர் ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (06.03.2026)

photo-collage.png (51)

இலங்கை விமானப்படையின் 75ஆம் ஆண்டு விழா

March 7, 2026

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் நேற்று

us

இலங்கையில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு

March 7, 2026

இலங்கையில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையம் வழக்கம்

jap

கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார் ஜப்பானிய கப்பலின் பணியாளர்

March 7, 2026

கொழும்புக்கு அப்பாலுள்ள மேற்கு கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையினருக்குச் சொந்தமான “JMSDF ONAMI” கப்பலில், மருத்துவ சிகிச்சை

sr

சுற்றுலாத்துறை குறித்து பரப்பப்படும் போலிச் செய்திகள்!

March 7, 2026

வுஸ்திரேலியர்களுக்கு இலங்கை ஒரு அதிக அபாயகரமான சுற்றுலாத் தலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது. இலங்கைக்கான

ali ka

ஈரான் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியைப் படுகொலை செய்த பின்னணி

March 7, 2026

ஈரான் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியைப் படுகொலை செய்வதற்கான திட்டத்தைத் தீட்டியபோது, இஸ்ரேல் எவ்வாறு தெஹ்ரானின் கண்காணிப்பு கெமெரா

kan naga

இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை மீண்டும் ஆரம்பம்

March 7, 2026

பருவகால மழை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவையானது நேற்று மீண்டும்

i

ஈரான் யுத்தக் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம்?

March 7, 2026

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 183 ஊழியர்களைக் கொண்ட