பாடசாலை சேவைக்கு மேலும் 200 பேருந்துகள்

சிசு செரிய பாடசாலை பேருந்து சேவையை மேலும் முறைப்படுத்துவதற்காக, 2026 ஆம் ஆண்டில் 200 க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை புதிதாக இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இசுருபாய வளாகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தினர்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவை இணைந்து இந்த ‘சிசு செரிய’ பேருந்து சேவையை நடைமுறைப்படுத்துகின்றன.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், பாடசாலை மாணவர் போக்குவரத்து தொடர்பான அரசின் எதிர்காலத் திட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போது, பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பாகப் போக்குவரத்துச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதற்காக இந்த ஆண்டில் சுமார் ஒரு பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பொறியியலாளர் பி.ஏ. சந்திரபால மற்றும் அதன் திட்டமிடல் பணிப்பாளர் ஆலோகா கருணாரத்ன ஆகியோரும் கருத்து வௌியிட்டனர்.

தனியார் பாடசாலைப் போக்குவரத்துச் சேவைகளைச் சரியாகத் தரப்படுத்துவதற்கு சட்ட ரீதியாக இருந்த தடைகளை நீக்குவது குறித்து இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் மூலம், அந்த வாகனங்களின் தரம், சாரதிகளின் அனுபவம் மற்றும் வாகன உதவியாளர் பற்றிய தகவல்கள் போன்ற சில சட்ட மற்றும் கொள்கை ரீதியான முடிவுகள் தொடர்பான சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ‘சிசு செரிய’ பேருந்து சேவையை நாடு முழுவதும் விரிவுப்படுத்த, தனியார் பேருந்துகள் மற்றும் சிறிய அளவிலான பாதுகாப்பான வாகனங்களின் உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

இதற்காக, தமக்கு அருகிலுள்ள போக்குவரத்துச் சபை அல்லது இலங்கை போக்குவரத்துச் சபை அலுவலகத்திற்குத் தமது விருப்பத்தைத் தெரிவிப்பதன் மூலம் பங்களிக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டது.

பாடசாலைகளில் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் இருந்தால், அவர்கள் குறித்து அதிபர் ஊடாக மேற்கூறிய நிறுவனங்களுக்குத் அறிவிப்பதன் மூலம் இந்த வசதிகளைச் செய்துகொடுக்க முடியும் என்றும் மேலதிகமாகத் தெரிவிக்கப்பட்டது.

ranil-wickremesinghe

ரணிலின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

April 29, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை

whea

இன்று முதல் கோதுமை மா விலை அதிகரிப்பு

April 29, 2026

கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ப்ரீமா நிறுவனத்தின் கோதுமை

sc

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு: இரண்டாம் நாள் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படவில்லை!

April 29, 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 02 ஆம் நாள் அகழ்வுகள் நேற்று (28) நடைபெற்றது. நேற்று

jud

திறைசேரி நிதி மோசடி: 5 அதிகாரிகளுக்கு வௌிநாடு செல்லத் தடை

April 29, 2026

மகா திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, மோசடியாளர்களிடம்

anur

ஜனாதிபதி மற்றும் மகா சங்கத்தினருக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

April 29, 2026

போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேரர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதன் பின்னணியில் உருவாகியுள்ள

gam

கம்பளையில் பயங்கர மண்சரிவு

April 29, 2026

கண்டி மாவட்டம், கம்பளை நகருக்கு அருகிலுள்ள கஹட்டபிட்டிய பகுதியில் இன்று (29) காலை பயங்கர மண்சரிவு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

eft

வெள்ளை மாளிகைக்கு முன்பாக எப்ஸ்டீன் விவகாரத்தை வெளிச்சம் போட்ட திரை வாகனம்

April 29, 2026

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு முன்பாக நேற்று ஒரு பரபரப்பான காட்சி அரங்கேறியது. முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய

HHDrDs7aoAA-rnx

பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவிற்கு தாயகத்தில் அஞ்சலி

April 29, 2026

தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் எழுச்சி பாடல்கள் பல நூறு பாடல்களை பாடி 28.04.2026 அன்று மறைந்த பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா

shammy sil

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகம் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ்: ஷம்மி சில்வா தலைமையிலான குழு இராஜினாமா

April 29, 2026

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் வழங்கிய இராஜினாமாவை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்

US-EMbassy-1

வடக்கு மக்களுடன் கலாச்சார விழுமியங்களை பகிர்ந்து கொள்வதில் அமெரிக்காஉறுதியாக உள்ளது.. யாழில் மேனகா நய்யர் தெரிவிப்பு.

April 29, 2026

div]:bg-bg-000/50 [&_pre>div]:border-0.5 [&_pre>div]:border-border-400 [&_.ignore-pre-bg>div]:bg-transparent [&_.standard-markdown_:is(p,blockquote,h1,h2,h3,h4,h5,h6)]:pl-2 [&_.standard-markdown_:is(p,blockquote,ul,ol,h1,h2,h3,h4,h5,h6)]:pr-8 [&_.progressive-markdown_:is(p,blockquote,h1,h2,h3,h4,h5,h6)]:pl-2 [&_.progressive-markdown_:is(p,blockquote,ul,ol,h1,h2,h3,h4,h5,h6)]:pr-8″> _*]:min-w-0 gap-3 standard-markdown”> அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும்

chandrasekar

.யாழ்ப்பாண மீனவர் ஒருவர் இந்திய மீனவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் – அமைச்சர் சந்திரசேகரன் கண்டனம்

April 29, 2026

யாழ்ப்பாணக் கடற்றொழிலாளர் ஒருவர் இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டு, இந்தியாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும்

archuna gun

அர்ச்சுனா பிணையில் விடுதலை

April 29, 2026

யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 25ஆம் திகதி பெரியவிளான்