பாஜகவை வீழ்த்துவதே பிரதான இலக்கு…

திமுக தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவுடன் உரையாடி விட்டு, அதை எங்கள் கமிட்டியில் தெரிவிப்போம். கமிட்டி தான் இறுதி முடிவை எடுக்கும். மேலும் பாஜகவை வீழ்த்துவதே பிரதான இலக்கு என்று சிபிஐ வீரபாண்டியன் தெரிவித்து உள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையேயான 3 ஆம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (மார்ச் 7 ஆம் தேதி) நடைபெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த 27 ஆம் தேதி இரு கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், 2 ஆம் கட்டமாக கடந்த 3 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அறிவாலயத்திற்கு வருகை தந்திருந்தார்.

இன்றைய பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறுகையில், ‘கட்சியின் மாநிலக் குழு சார்பாகவும், பேச்சுவார்த்தைக் குழுவின் சார்பாகவும் முதல்வரை சந்தித்து, தொகுதிப் பங்கீடு குறித்து விரிவாகப் பேசினோம். தற்போதைய அரசியல் சூழலில், பாஜகவை வீழ்த்துவதே எங்களின் முதன்மையான கடமை.

தமிழகத்தில் ஒரு வலுவான அரசியல் அலை வீசுகிறது. தமிழக முதலமைச்சரின் நலத்திட்டங்கள், அவரின் ஒற்றுமை உணர்வு மற்றும் தமிழ் மக்களின் நல்லிணக்க கலாச்சாரம் இவை யாவும் மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற செய்யும். தமிழகத்தின் வெற்றிதான் இந்தியாவின் புதிய திசையைத் தீர்மானிக்கும்.

இங்கிருந்து புறப்படுகிற அந்த வெற்றி திசை தான் இந்திய மண்ணில் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும், கூட்டாட்சி தத்துவத்தையும், சமூக நீதியையும் பாதுகாக்கும். அந்த வகையில் எங்களது கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணியாகப் பயணிக்கப் போகிறது. தொகுதிகள் குறித்து நாங்கள் பேசியதில் ஏறத்தாழ ஒரு முடிவு எட்டப்பட்ட சூழல் உருவாகி உள்ளது.

road-accident-1fbe3bd4f584940d0e9afe28e5117426-1

இந்த ஆண்டின் இரண்டு மாத காலப்பகுதியில் 3600 வீதி விபத்துக்கள்!

March 9, 2026

இந்த ஆண்டின் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் 3,600-க்கும் அதிகமான வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ்

52360

போர்ப் பதற்​றம்; 52,360 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

March 9, 2026

போர்ப் பதற்​றம் நில​வும் வளை​குடா நாடு​களில் இருந்து கடந்த வெள்​ளிக்​கிழமை இரவு வரை 280 விமானங்​களில், 52,360 இந்​தி​யர்​கள் தாயகம்

f

மீனோடு இணைத்து ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை

March 9, 2026

மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

os

ஒஸ்லோ அமெரிக்கத் தூதரகத்தில் குண்டுவெடிப்பு?

March 9, 2026

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நுழைவாயிலில் இன்று 8, அதிகாலை 1 மணியளவில் பலத்த சத்தத்துடன் குண்டுவெடிப்பு

aruna jeya

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்கள் பதற்றமடைய தேவையில்லை

March 9, 2026

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டு மக்கள் பதற்றமடையத் தேவையில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பும் நாட்டின்

for

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு

March 9, 2026

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்களுக்காக செல்லத் தயாராக இருந்த சுமார் 3,000 இலங்கைர்கள் போர் நிலைமை காரணமாக செல்ல முடியாமல்

sure

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்; சுரேஷ் சாலே தொடார்பான பல மர்மங்கள் வெளிப்படுகின்றன?

March 9, 2026

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலேவுக்கு முழுமையான தகவல்கள் தெரிந்திருந்தமைக்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்ததன்

Ravika

தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகர்கள்; அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை சிதைகிறது – ரவிகரன்

March 9, 2026

கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி மற்றும் சட்டவிரோதமான அத்துமீறல்களை உடனடியாக தடுக்குமாறு மகாவலி

evu

234 ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன – குவைத்

March 9, 2026

குவைத்தில் நேற்று இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து 234 ஏவுகணைகள் மற்றும் 422 ட்ரோன்களை கண்டறிந்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

akku

அக்குரணையில் தீ

March 9, 2026

கண்டி – மாத்தளை பிரதான வீதியில் அக்குரணை, 7ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள மரத்தளபாடக் காட்சி அறை ஒன்றில் நேற்று

mes

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தொடர்பான அறிவிப்பு

March 9, 2026

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக அவருடைய மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள்

kug

யாழில் லலித் – குகன் கடத்தல் வழக்கு: கோட்டாவுக்கு ஏப்ரலில் கட்டளை

March 9, 2026

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய