பாகிஸ்தானுடன் ரி20 தொடரில் விளையாட ஆஸி. அணி லாகூர் விஜயம்

இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த மாதம் ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கூட்டாக நடைபெறவுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ரி20 கிரிக்கெட் தொடரில் விளையாட அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி லாகூருக்கு விஜயம் செய்துள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் இன்று காலை லாகூர் சென்றடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னதாக உபகண்ட ஆடுகளங்களுக்கு தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ளும் எண்ணத்துடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை அவுஸ்திரேலியா எதிர்த்தாடவுள்ளது.

பாகிஸ்தானுக்கு அவுஸ்திரேலியா கிரிக்கெட் விஜயம் செய்வது இது மூன்றாவது தடவையாகும்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் 2022இல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிலும் ஒற்றை ரி20 கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தானை அவுஸ்திரேலியா எதிர்த்தாடி இருந்தது.

அதன் பின்னர் கடந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் 3 போட்டிகளில் அவுஸ்திரேலியா விளையாடி இருந்தது.

அவுஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் லாகூர் கடாபி விளையாட்டரங்கில் நடைபெறும்.

அப் போட்டிகள் ஜனவரி 29, 31, பெப்ரவரி 1ஆம் திகதிகளில் நடைபெறும்.

உலகக் கிண்ணப் போட்டிக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடுவது சவால் மிக்கது என லாகூரில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் மிச்செல் மார்ஷ் தெரிவித்தார்.

‘பாகிஸ்தான் அணியில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெறுகின்றனர். அதனால் நாங்கள் சவாலை எதிர்கொள்வோம் என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக ஷஹீன் (ஷா அப்றிடி) ஒரு மிகச் சிறந்த பந்துவீச்சாளர் ஆவார். எங்கள் அணிக்கு அவர் சவாலாக விளங்குவார்’ என மிச்செல் மார்ஷ் தெரிவித்தார்.

‘இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணம் எங்களை உலகக் கிண்ணத்திற்கு தயார்படுத்திக்கொள்வதற்கு முக்கியமாகும். இந்த சுற்றுப் பயணத்தில் இடம்பெறும் சில வீரர்கள் பாகிஸ்தானை இலங்கையில் சந்திப்பார்கள்.

‘உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள சில வீரர்கள் இங்கு வருகை தரவில்லை. அவர்கள் சொந்த நாட்டில் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இலங்கையில் அவர்கள் எங்களுடன் இணைந்துகொள்வார்கள். அதனால் எங்களுக்கு மன அழுத்தம் இல்லை’ என்றார்.

பெட் கமின்ஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட், க்ளென் மெக்ஸ்வெல், டிம் டேவிட், நேதன் எலிஸ் ஆகிய ஐந்து சிரேஷ்ட அவுஸ்திரேலிய வீரரக்ள் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் விஜயத்தில் இடம்பெறவில்லை.

இதேவேளை, கிரிக்கெட்டில் பெரிய அணி, சிறிய அணி என்ற பேச்சுக்கு இடம் இல்லை என்று பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் அலி அகா தெரிவித்தார்.

‘சர்வதேச போட்டிகளில் விளையாடும்போது எந்த அணியும் இலகுவாக அமையப்போவதில்லை. எங்களை எதிர்த்தாடும அணி தரிவரிசையில் முதலாவதாக இருந்தாலும் எங்களைவிட பின்னிலையில் இருந்தாலும் நாங்கள் எங்களை எவ்வாறு முன்னேற்றிக்கொள்வது, எங்களது திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பதிலேயே கவனம் செலுத்துவோம்’ என அவர் கூறினார்.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்

Nish

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளார்கள் – நிசாம் காரியப்பர்

March 4, 2026

ரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம்

eu

உலகப் பொருளாதார பாதிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் – வளைகுடா கவுன்சில் அவசர பேச்சுவார்த்தை

March 4, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட காணொளி மாநாடு (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு