பழைய முறையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசுக்குக் கடும் அழுத்தம்

இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை இனியும் தாமதப்படுத்தாமல், தேவையேற்படின் பழைய தேர்தல் முறையிலாவது உடனடியாக நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளன.

“வாக்குரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாவிட்டால், அந்தச் சமூகத்தில் சர்வஜன வாக்குரிமை முறையாகச் செயற்படுத்தப்படவில்லை என்றே அர்த்தம். புதிய தேர்தல் முறையைச் சீரமைக்கும் வரை தேர்தலை நடத்த மாட்டோம் என்று கூறுவது நியாயமான வாதம் அல்ல.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் தற்போது சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணையை அரசு தனது சொந்தப் பிரேரணையாக ஏற்றுக்கொண்டால், மிகக் குறுகிய காலத்தில் பழைய முறையிலேயே தேர்தலை நடத்தி முடிக்க முடியும். அவ்வாறு செய்யாமல் குழுக்களை நியமித்து காலத்தைக் கடத்துவது தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான ஒரு வழியாகவே அமையும்.” என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

“உண்மையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதனைப் பழைய முறையிலேயே நடத்த வேண்டும். புதிய முறையின் கீழ் தேர்தல் நடத்தப்படும் என்று கூறிக்கொண்டிருந்தால், அது மறு அறிவித்தல் வரை காலம் தாழ்த்தப்படுவதற்கே வழிவகுக்கும்.” என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

“குழுக்கள் என்பவை வெறும் அறிக்கைகளைத் தயாரிப்பதோடு தமது பணியை முடித்துக்கொள்கின்றன. கடந்த அரசிடமும் தற்போதைய அரசிடமும் நாம் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். மாகாண சபை முறையை அரச அதிகாரிகள் ‘வெள்ளை யானை’ என விமர்சிக்கின்றனர். ஆனால், மக்களின் அன்றாடத் தேவைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய இந்த அதிகாரம் முறையாகச் செயற்படுத்தப்பட வேண்டும்.” என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரை மிக முக்கியமானவை. எனவே, ஒரு முழுமையற்ற ஜனநாயகச் சூழலைத் தவிர்ப்பதற்கு அரசு உடனடியாகத் தேர்தலை நடத்த முன்வர வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரியான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள தேவையற்ற பதற்றம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பாரிய வாகன நெரிசலும் நீண்ட வரிசைகளும் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாதீர:

“இதற்காகப் பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை. QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், அந்தந்த வாகன வகைகளுக்கு ஏற்பத் தேவையான எரிபொருள் அளவு முறையாக வழங்கப்படும். மக்கள் காட்டும் தேவையற்ற அவசரமே எரிபொருள் நிலையங்களில் இவ்வளவு கூட்ட நெரிசலுக்குக் காரணமாகியுள்ளது. இதனால், அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் தலைமையகப் பொலிஸ் பரிசோதகர்களை நாம் ஈடுபடுத்தியுள்ளோம்.

பொதுமக்கள் அமைதி காத்தால் இந்தப் பிரச்சினை ஏற்படாது. 10 லீற்றர் தேவைப்படும் இடத்தில் 50 லீற்றர் அடிக்க முற்படுகிறார்கள். இவை அனைத்தும் அவசரப்படுவதால் ஏற்படும் விளைவுகள். யுத்த நிலைமை காரணமாகக் கொண்டுவரப்பட்ட ஒரு முகாமைத்துவமே இது. உங்கள் வாகனத்திற்குத் தேவையான எரிபொருளை எந்தவொரு நிலையத்திலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். எனவே, வீதி நெரிசலைக் குறைக்கவும் ஒழுங்கைப் பேணவும் போக்குவரத்துப் பொலிஸாரும் ஏனைய அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

GMOA

அரச வைத்திய அதிகாரிகள் அவசர கோரிக்கை

March 15, 2026

QR முறையின் கீழ் வழங்கப்பட முன்மொழியப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு எவ்வகையிலும் போதுமானதல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

arr

இறைச்சிகளைக் கடத்திச் சென்ற இருவர் கைது

March 15, 2026

பொத்துவில், பானமை – சாஸ்திரவேல பகுதியில் கார் ஒன்றில் மான் மற்றும் காட்டெருமை (குளுமாடு) இறைச்சிகளைக் கடத்திச் சென்ற இரு

pon

’பொன் அணிகளின் போர்’: சமர் சமநிலையில் நிறைவு

March 15, 2026

‘பொன் அணிகளின் போர்’ என வர்ணிக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணிகளுக்கு இடையிலான

alper

கனடாவிலிருந்து அல்பெர்டா பிரிய வேண்டுமா; சுதந்திர மனு இயக்கத்தின் முடிவு நெருங்குகிறது!

March 15, 2026

கையொப்பங்களை சேகரிக்க இன்னும் சுமார் ஆறு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அல்பெர்டா சுதந்திரத்தை ஆதரிப்பவர்கள் குடிமக்கள் முன்னெடுத்த மனு

sas

அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு!

March 15, 2026

அதிமுகவின் ஆட்சிமன்றக் குழுவை திருத்தியமைத்து கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் ஆட்சிமன்றக் குழுவை திருத்தியமைத்து கட்சிப் பொதுச்செயலாளர்

era

சஜித் பிரேமதாசவின் அண்மைக்கால செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் பெரும் கேலிக்குரியதாக மாறியுள்ளன!

March 15, 2026

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் மற்றும் அவரது அண்மைக்கால செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் பெரும் கேலிக்குரியதாக

Gyne

ஏப்ரல் 23ஆம் திகதி: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்

March 15, 2026

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர்

lanka

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை!

March 15, 2026

ரிபொருள் விநியோகத்திற்காக QR குறியீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலியக்

road-accident-1fbe3bd4f584940d0e9afe28e5117426-1

வீதி விபத்தில் இளைஞன் பலி

March 15, 2026

கேகாலை- துல்ஹிரிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்றையதினம்(14.3.2026) இடம்பெற்றுள்ளது. அபேபுஸ்ஸ திசையிலிருந்து

un

தமிழ்கட்சிகள் தங்களது கடமைகளை தவறிவிட்டன; ஆனால் அந்த இடைவெளியை தமிழர் விடுதலைக்கூட்டணி நிரப்பும்

March 15, 2026

சுயநலம் குடிகொண்டுள்ள தமிழ்கட்சிகள் தங்களது கடமைகளை தவறிவிட்டன. எனவே அந்த இடைவெளியை தமிழர் விடுதலைக்கூட்டணி நிரப்பும் என்று அதன் ஊடக

Chami

விமல் வீரவன்ச போன்ற போலித் தலைவர்களை மக்கள் ஒதுக்கி விட்டார்கள்

March 15, 2026

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புவதாக ஐக்கிய மக்கள்

arr

சட்டவிரோத பொருட்களுடன் சுன்னாகத்தில் மூவர் கைது

March 15, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் முனியப்பர் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வைத்து மூவர் சட்டவிரோத பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்