பழனி கோயில் 100 கோடி நில மோசடி வழக்கு: கைதான வழக்கறிஞர் மதுரை சிறையில் திடீர் மரணம்! பெரும் அதிர்ச்சி!

மதுரை
பழனி கோயில் அடிவாரத்தில் உள்ள 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனி கோயில் அடிவாரம் பகுதியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம், கடந்த மாதம் 6-ஆம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் வெறும் 2 கோடி ரூபாய்க்குத் தனி நபர்களுக்கு முறைகேடாகக் கிரையப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மெகா மோசடி விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த மோசடி தொடர்பாக மொத்தம் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நிலத்தை முறைகேடாக விற்பனை செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67) மற்றும் இவர்களுக்கு உதவிய பழனியைச் சேர்ந்த வழக்கறிஞர் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இவர்களைப் போலீஸ் காவலில் எடுத்து கடந்த 3 நாட்களாகத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை முடிந்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் நால்வரும், ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீனுக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சார்பதிவாளருக்கும் நெஞ்சுவலி:
இதற்கிடையே, இந்த வழக்கில் நேற்று முன்தினம் கைதான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனும் நெஞ்சுவலி காரணமாகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை மருத்துவமனையிலேயே நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நேரில் சென்று உத்தரவிட்டுள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பிறகே அவர் மதுரை சிறைக்கு மாற்றப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான இருவருக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி ஏற்பட்ட சம்பவம் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
#PalaniTemple #LandScam #MaduraiCentralPrison #CBCID #Anwardeen #SubRegistrarJustin #TamilNaduNews #Madurai #Dindigul #Palani #ViralNews #LatestNewsTN #TrendingTN #TNNewsUpdates
hindutamil-prod_2026-08-25_vhoxai89_BeFunky-collage-2026-08-25T141334.025

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: கர்நாடகாவிடம் தமிழ்நாடு அரசு விளக்கம் கேட்டதா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், கர்நாடக அரசிடம் தமிழ்நாடு அரசு

hindutamil-prod_2026-06-03_rnr6gr52_1354313

“கோப்புகள் இருப்பதாகக் கூறி மிரட்டக் கூடாது!” – சி.பி.ஐ.(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேச்சு

August 25, 2026

மயிலாடுதுறை: செய்தியாளர் சந்திப்பு மயிலாடுதுறையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று

9868_23_3_2025_18_22_53_1_EPS_ADMK_3

வரும் தேர்தலை அ.தி.மு.க., ஐ.ஜே.கே. கூட்டணி இணைந்து சந்திக்கும்: எடப்பாடி பழனிசாமி!

August 25, 2026

செங்கல்பட்டு: பாரிவேந்தரின் 88-வது பிறந்தநாள் விழா செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில், இந்திய ஜனநாயகக் கட்சியின்

image_0b1598bfd8

மன்னார் வளைகுடா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு: சர்வதேச நிறுவனங்களுக்கு இலங்கை அழைப்பு

August 25, 2026

இலங்கை தனது மன்னார் வளைகுடாப் பகுதியில் உள்ள சுமார் 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவை பெட்ரோலிய ஆய்வுகளுக்காகச் சர்வதேச எரிசக்தி

easter bomb

உயிர்த்தஞாயிறு தாக்குதல் வழக்கு – செப்டம்பர் 22 திகதி தீர்ப்பு

August 25, 2026

2019ம் ஆண்டு உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் 25 பிரதிவாதிகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22

gr

ஜெர்மன் விமான நிலையத்தை தகர்க்க முயற்சி

August 25, 2026

விளாடிமிர் புட்டின் ஆதரவுடன் ஜெர்மனியின் லைப்சிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தை செம்டெக்ஸ் (Semtex) வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் (Drone)

arr

திருட்டுக்களுடன் தொடர்புடைய மூவர் யாழில் கைது!

August 25, 2026

யாழ்ப்பாண குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி

acc

நுவரெலியாவில் சுற்றுலாப் பேருந்து விபத்து

August 25, 2026

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியிலிருந்து நுவரெலியாவிற்கு

Sale

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு

August 25, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம்

sss

சுடுகாட்டுக்கு ஏற்பாடு; உயிருடன் வந்த கைதி!

August 25, 2026

நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர்

water cut

களனி ஆற்றில் இரசாயன கழிவுகள் – தனியார் நிறுவனத்தின் அத்துமீறல் – கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது

August 25, 2026

தனியார் தொழிற்சாலையொன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட இரசாயனகழிவுகள் சுற்றுசூழலில் கலந்ததை தொடர்ந்து களனி ஆற்றின் நீர் தரத்தில் திடீர் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதன்

Jail-1-550x344

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க பொலிஸாரிடம் யோசனை கோரல்

August 25, 2026

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதில் அரசாங்க